முத்துலெட்சுமி மிக அற்புதமான பதிவர், ரொம்ப நல்லா எழுதுவாங்க. . தேவையான இடங்களில் அவரின் பின்னூட்டங்களையும் பார்க்கலாம். பதிவிலும் சரி, மின் அஞ்சலிலும் சரி தமிழ் அற்புதமாக தாண்டவமாடும். ஜி டாக்கிலும் அவர் டைப் செய்ய ஆரம்பித்தால் பக்கம் பக்கமாக டைப் செய்வார் அவ்வளவு வேகம். ஆனால் அப்படிப்பட்ட பதிவரால் பேச இயலாது என்பதை அறிந்தபோது மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது...

அதை அவரை சந்திக்கும் வரையில் என்னிடம் சொல்லாமல் மறைத்த

சென்ஷி
கோபி
மங்கை அக்கா..

இவர்கள் மூவரும் இப்படி என்னை பழிவாங்கிவிட்டனர் என்பதனை நினைக்கும் போது , கோபம் தலைக்கு ஏறுகிறது. முத்துலெட்சுமியை பற்றி கொஞ்சமாக சொல்லியிருந்தால் கூட நான் அவரை சந்திக்க சென்ற போது தயாராக சென்றிருப்பேன். .ஆனால் ஆனால்................. இவ்வளவு பெரிய உண்மையை என்னிடம் இருந்து மறைத்த இந்த மூன்று பதிவருக்கும் எப்போதும் மன்னிப்பு இல்லை..... :((((((((((

அணில் குட்டி அனிதா:- ஹா ஹா..ஹா.. ஹா...ஹா...... அய்யோ..அய்யோ..!! பாவம் கவிதா. .முத்து அக்காவை பார்த்துட்டு வந்ததிலிருந்து காதோரமா லேசா ரத்தம் வர ஆரம்பிச்சது. .அது ரொம்ப அதிகமாகிபோக...டாக்டர் கிட்ட போய் மருந்து போட்டு காதை இப்ப சுத்தமா மூடி பேண்டேஜ் போட்டு இருக்காங்க... :) :)

கவி... !! டொக் டொக்..டொக்... !! மை ஐ கம் இன்...!! மைக் டெஸ்ட் 1, 2, 3.. கவி......காது கேக்குதா??? அட கடவுளே காது மேல தட்டினா கூட காது கேக்கலியா...?!! முத்து அக்கா.. எப்படிக்கா இப்படி எல்லாம்.. ம்ம்..அவங்க திரும்ப டெல்லி போவும் போது யாராவது அவங்களை மீட் பண்ண போறீங்கன்னா.. ஜாக்கறதை. .கவி நிலமை உங்களுக்கும் வராம தேவையான பாதுகாப்போட போகனும் சரியா..... இல்லன்னா... கவி.. ! டொக் டொக்..டொக். !!

பீட்டர் தாத்ஸ் : When women are supposed to be quiet, a talkative woman is a woman who talks at all