பெண்
ஒரு கவிதை

அது
காட்டாற்றை பிரிந்த
சிற்றருவியின் அமைதி-
தென்றலைத்
தழுவிய மென்மை-
பனித்துளி
தொட்டுவிட்ட குளிர்ச்சி-
ஆண்டுகளாக ரசித்தாலும்
சோர்ந்து போகாத நிலவின் வெளிச்சம்-
மென்மையாக ஊதி
எழுப்பும் குழலின் நாதம்-
இலைகளின் மேல்
குடியிருக்கும் நீர்த்திவலை
மலர்திருந்திருக்கும்
வண்ண பூக்கள்-
கொலுக்களில் அழகாக
அமர்ந்திருக்கும் பொம்மைகள்-
மெல்லிய சுடர் விட்டு
எரியும் விளக்கு-
கண்களை மென்மையாக மூடி
உணரும் உங்களின் நாடி துடிப்பு-
இரவுகளை
சொர்க்கமாக்கும் தேவதை-

இந்தக் கவிதைகள்

போராளிகளாக மாறிவிட்டன
உங்கள் கைகளிலும் சிக்கிவிட்டன
கற்பழித்தும் வீட்டீர்கள்
கொன்றும் குவித்துவிட்டீர்கள்

நாற்றமெடுத்த
ஈ மொய்க்கும்
நிர்வாண பிணங்களாக
மாற்றிவிட்டீர்கள்

நிர்வாண பிணங்களை
இழுத்து இழுத்து ????
வளைத்து வளைத்து ?????
படம் எடுக்கிறீர்கள்

எடுங்கள்... (காரணம் சொல்லியாகிவிட்டது)
அதனால் எடுங்கள்...

ஆனால்
அங்கேயும் சொல்கிறான்
ஒருவன்
எல்லாம் வடிவான பெண்கள் என்று -

பெண்ணின் நிர்வாணம்...
பிணங்களில் கூட வடிவா......?

[இராணுவம் 1: டேய் பெடியா
இராணுவம் 2: என்ன
இராணுவம் 5 (அ) 7: எல்லாம் பெண்கள்
இராணுவம் 6: வடிவாக (அழகான).]

இதயம் பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம் என்று தான் 'இவன்' சொல்லியிருந்தார். இதயத்திற்கு என்னத்தான் ஆகிவிடபோகிறது, என்னத்தான் அந்தப் படத்தில் இருக்கிறது பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வ கோளாறு..இன்னமும் இதயத்துடிப்பு அடங்காத நிலையில் எழுதியது.... இதயம் பலகீனமானவர்கள் மட்டும் இல்லை யாருமே இப்படிப்பட்ட வீடியோக்களை பார்க்கக் கூடாது. பெண் பிணங்களின் ஒட்டியிருக்கும் ஆடையை இழுத்துவிடக்கூடவா இராணுவ வீரர்களுக்கு???!! தோன்றவில்லை... பிணங்களின் வடிவை ரசிப்பவர்கள் எப்படி இதை செய்வார்கள்.
ரசிக்கட்டும்.......