சின்ன சின்ன ஆசைகள் நிறைய இருக்கு, இதை ஆசை என்று சொல்ல முடியாது லட்சியம் என்று சொல்லலாம். எப்படியாவது என் வாழ்நாளில் சாத்தியப்படும் என்று காத்திருக்கிறேன் வேறு எதற்கும் அல்ல ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் அமைக்க. இதற்காக சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லாம் தேவையான அறிவையும், அனுபவத்தையும் பெற முயற்சித்துவருகிறேன். அப்படி கிடைத்த அனுபவம் - என் தோழியின் பெற்றோர்கள் மதுரையில் "மீனாட்சி ஆச்சி இல்லம்" என்ற முதியோர் இல்லம் நடத்திவருகின்றனர். அவர்களை சந்தித்து நேரடியாக பேசிய அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்வது மட்டுமல்லாமல், அவர்களுக்காக உதவி கரத்தையும் நீட்டுகிறேன்...

உதவி செய்ய விரும்புவோர்...

Account # -

SB A/C # 25609
Indian Overseas Bank
Aringar Annanagar Branch
Madurai - 625020


In Case of Cheque - Shd be in the name of "Meenakshi Achi Trust Old Age Home "

தோழியின் அப்பா - திரு.முத்து - இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் DGM ஆக இருந்து ஓய்வு பெற்றவர். அம்மா- திரு.வள்ளியம்மை, குடும்பத்தலைவி. அப்பா,அம்மா இருவரையும் ஒன்றாக சந்தித்து உரையாடிய தொகுப்பு :-

கவிதா :- அப்பா உங்கக்கிட்ட ரொம்ப நாளா இதைப்பற்றி பேசணும்னு இருந்தேன்..இப்பத்தான் இரண்டு பேருமாக கிடைச்சீங்க.. ஏன் இப்படி ஒரு இல்லம் அமைக்கனும்னு உங்களுக்கு தோன்றியது.

அப்பா:- நான் வேலையில் இருக்கும் போது வட இந்தியா டூர் சென்றிந்தோம். அங்கே எங்களின் தோழி ஒருவர் இப்படி ஒரு இல்லைத்தை நடத்தி வந்தார். அதை பார்த்து பிறகு எங்களுக்கும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

கவிதா:- இந்த எண்ணம் எப்போது தோன்றியது? எப்போது ஆரம்பித்தீர்கள்? அதற்கான அனுபவத்தை எப்படி உங்களுக்கு கிடைத்தது?
அப்பா:- 10 வருடங்கள் காத்திருந்து, ரிடையர் ஆனவுடன் செயற்படுத்தினோம். ஆனால் நேரடியாக இறங்கவில்லை. கிட்டத்தட்ட 20 இல்லங்களுக்கு நேரடியாக சென்று பார்த்து அதன் நல்லது, கெட்டது, பிரச்சனை, செலவு போன்றவற்றை ஆராய்ந்தபின்தான் தொடங்கினோம். சட்ட ஆலோசனைகளையும் பெற்றோம்

கவிதா:- எப்படி நீங்கள் முதியவர்களை தேர்வு செய்கிறீர்கள்.?
அப்பா:- பிள்ளைகளுக்கு மாதம் ரூ 2000/- க்குள் வருமானம் இருப்பவர்களை சேர்க்கிறோம். துணை யாரும் இல்லாமல் வந்தால் சேர்த்துக்கொள்வதில்லை. காரணம் வயதானவர்கள் என்பதால் அவர்களுக்கு உடல் நலம் பாதித்து ஏதாவது ஏற்பட்டால் பிரச்சனை வரும். அதனால் அவர்களுக்காக சொந்தமாக யாராவது உடன் வந்தால் மட்டுமே சேர்த்துக்கொள்கிறோம். மாதம் அவர்களிடம் ரூ 250/- வாங்குகிறோம். இது அவர்களின் பிள்ளைகள் தொடர்பில் இருக்கவேண்டும் என்பதற்காக மட்டுமே, சிலர் விட்டுவிட்டு சென்றால் திரும்பியே பார்ப்பதில்லை. இவை எல்லாமே அனுபவம் காரணமாக நாங்களே கொஞ்சம் கொஞ்சமாக இல்லத்தில் உறுப்பினர்கள் சேர்க்கையின் போது மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டது.

கவிதா:- அவர்கள் உங்கள் இல்லத்தில் சந்தோஷமாக இருக்கிறார்களா? அவர்களுக்கு உங்களின் கவனிப்பும் ஆதரவும் எப்படி கொடுக்கிறீர்கள்.?
அம்மா: - தினமும் காலையும், மாலையும் நான் சென்று 2-3 மணி நேரம் அவர்களுடன் செலவழிக்கிறேன். அப்பாவும் தினமும் சென்று கவனிப்பார்கள். ஒரு அக்கவுன்டன்ட் இருக்காரு, பார்ட் டைம்ல கணக்கு பார்க்க வராரு. சமையலுக்கு ஒரு அம்மா இருக்காங்க. காய்கரி நறுக்கி தருவது எல்லாம் இல்லத்தில் இருப்பவர்களே உதவிசெய்வார்கள். தினமும் காலையில் பூஜை முடித்துத்தான் சாப்பாடு. யோகா, தியானம் சொல்லி தருகிறோம். வாரம் ஒரு முறை ஒரு டாக்டர் ரெகுலராக வந்து எல்லோருடைய உடம்பையும் பரிசோதித்து செல்வார்கள். தேவையான மாத்திரை மருந்து முடிந்த அளவு நாங்களே கொடுக்கிறோம். வாக்கிங் செல்ல அவர்களை ஊக்கப்படுத்துகிறோம். அவர்கள் வீட்டிற்கு விஷேஷ தினங்களுக்கு கூட செல்ல பிடிக்காமல் இங்கேயே இருக்கிறார்கள். :) டிவி, பிரிட்ஜ், ஃபேன் வசதி இருக்கிறது. அணைவருக்கும் தரமான கட்டில், பெட், தலையணை, போர்வை, ஒரு கப்போர்டு வழங்கியிருக்கிறோம். பேப்பர், புத்தங்கள் வாங்கிக்கொடுக்கிறோம், நான் பாடல்கள், சுலோகங்கள் சொல்லி தருகிறேன்..:)

கவிதா:- ஓ..வீட்டுக்கு ஏன் போக மறுக்கிறார்கள். எப்படிப்பட்ட பிரச்சனை உடையவர்கள் இங்கே வருகிறார்கள்?
அம்மா:- எல்லோருக்குமே வீட்டில் மருமகள் பிரச்சனை தான். சிலரை மகள்கள் கூட வந்து சேர்ப்பது உண்டு. இவர்கள் இருந்தால் மனைவிக்கு/கணவருக்கு தொந்தரவாக இருக்கிறது, பிரச்சனையாக இருக்கிறது என்றே சொந்த பிள்ளைகளே இங்கே அழைத்துவந்து சேர்த்துவிடுகின்றனர்.

கவிதா:- பெண்களுக்கு சரி ஆண்களுக்கு கூடவா மருமகள் பிரச்சனை?
அம்மா: ஆமாம் கவி, பெரியவர்களை மனம் நோகும் படி பேசுகிறார்களாம், மறைமுகமாக திட்டுவது, சாப்பாடு சரியாக கொடுக்காமல் கஷ்டப்படுத்துவது, மேலும் சில வீடுகளில் வயதானவர்கள் இருந்தால் நான் இருக்கமாட்டேன் என்ற சொன்னதால் கூட இங்கு வந்து சேர்ந்து இருக்கிறார்கள்.

கவிதா:- உடல் நலம் ரொம்பவும் மோசமாகிவிட்டால் என்ன செய்கிறீர்கள்? தேவையான மருத்துவ வசதி உங்களிடம் உள்ளதா? எல்லோருமே வயதானவர்கள் ஆயிற்றே?
அப்பா:- மருத்துமனையில் சேர்ப்பது அதிகபட்ச உதவியாக செய்கிறோம், ஆனால் அவர்கள் வீட்டிலிருந்து கண்டிப்பாக ஒருவரை வரவைக்கிறோம். காரணம் ஒரு முறை எங்களுக்கு மிக மோசமான அனுபவம் ஏற்பட்டது. ஒரு பெரியவர் உடல் நலம் மோசமானதால் ஆஸ்பித்திரியில் சேர்த்து மகள், மகன் இருவருக்குமே சொல்லி அனுப்பினோம். ஆனால் அவர்கள் வரும் முன் பெரியவர் இறந்துபோய்விட்டார். இருவருமே கடைசி வரை வராமல் "அப்பா எங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை.. நான் ஏன் அவருக்கு இறுதி சடங்கு செய்யவேண்டும்? "என்று மகன் சொல்லிவிட்டான்

அம்மா:- மகளோ, எனக்கு 40 வயது வரை திருமணம் செய்யாமல் இருந்தார் அவரை பார்க்க நான் ஏன் வரவேண்டும், எதற்குமே தகுதியான ஆள் அவரில்லை என்று சொல்லிவிட்டாள். இங்கு இருப்பவர்கள் யாருமே சொந்த பிள்ளைகளிடம் ஒரு பாசத்துடன், ஆசையுடன் அவர்களை பார்க்கவேண்டும் என்று சொல்லுவதே இல்லை , ஏதோ ஒரு ஓரத்தில் அவர்களின் நினைவு இருந்தாலும் மனம் வெறுத்து அவர்களை மறந்து சந்தோஷமாக உள்ளனர்.

அப்பா:- இப்படி ஒரு சில பிரச்சனைகளை சந்தித்த பிறகு தான் இப்போது எல்லாம் சேர்க்கையின் போதே உறுப்பினர்கள் இறந்துவிட்டால் "நாங்கள் பொறுப்பேர்க்கிறோம்" என்று பிள்ளைகளிடம் எழுதி வாங்கிக்கொள்கிறோம்.

கவிதா:- இதற்கான செலவை எப்படி யார் சமாளிக்கிறீர்கள்.? எப்படி திட்டம் இட்டு நடத்துகிறீர்கள்?
அப்பா:- 5 லட்சம் முதல் போட்டு ஆரம்பித்தோம், உறவினர்களிடம், நண்பர்களிடமும் இருந்தே டோனேஷன் வருகிறது. ஒரு வீடு இதற்காக சொந்தமாக கட்டியிருக்கிறோம். இன்னமும் பணம் தேவைப்படுகிறது. பேங்கில் டிபாஸிட் செய்து வைத்துள்ளோம். மருந்து மாத்திரைக்காக வேண்டி மாதம் ஒருவர் தவறாமல் 500ரூ கொடுக்கிறார்.

கவிதா:- எல்லா மதத்தினரையும் சேர்த்துக்கொள்கிறீர்களா ?
அப்பா:- இல்லை, இந்துக்களை மட்டுமே. காரணம் இவுங்க (அம்மாவை பார்த்து) தினமும் பூஜை செய்யறாங்க. வேற்று மதத்தினரை சேர்த்தால் எங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. அவர்களுக்குள் பிரச்சனை வரும், அவர்கள் வழிபடும் நேரம் அவர்களின் வழிப்பாட்டு முறைகள் இவற்றால் கண்டிப்பாக மன வேற்றுமை வரும். இதை தடுக்கவே வேற்று மதத்தினரை சேர்த்துக்கொள்வதில்லை. "மீனாட்சி ஆச்சி" என்ற பெயர் என் பாட்டியுடையது, எனக்கு அப்பா அம்மா இல்லை, ஆச்சித்தான் வளர்த்தார்கள்,அதனால் ஆச்சியின் பெயர் வைத்துள்ளேனே தவிர, சாதியை எல்லாம் நாங்கள் பார்ப்பதில்லை. எந்த சாதியாக இருந்தாலும் சேர்த்து கொள்கிறோம்.

கவிதா: இப்போது எத்தனை பேர் இருக்கின்றனர்?
அப்பா: சரியாக பத்துபேர் இருக்கின்றனர், இதற்கு மேல் ஒருவர் சேர்ப்பாதானால் கூட கட்டிட வசதி, அதற்கான பணமும் மேற்க்கொண்டு தேவைப்படுகிறது. அதனால் பணம் சேர்த்துவிட்டு எண்ணிக்கையை அதிகபடுத்தலாம் என்று இருக்கிறோம்.

கவிதா:- அப்பா எனக்கும் இப்படி ஒன்று செய்யனும்னு ஆசை ஆனா ஆதரவற்ற குழந்தைகளுக்காக தான் செய்யனும்னு இருக்கேன். அதான் உங்களை இப்படி நொய் நொய்ன்னு கேள்வி கேக்கறேன்.. :)
அப்பா & அம்மா:- அதை அப்புறம் செய்துக்கோம்மா இப்ப எங்களோட சேர்ந்துக்கோ.. :)))))

கவிதா:- நான் எப்படி உங்களுக்கு உதவ முடியும்னு சொல்லுங்கப்பா?
அப்பா :- உங்க பிள்ளை, கணவர், உங்க பிறந்தநாளைக்கு ஒரு வேலை சாப்பாடு அவர்களுக்கு போட உதவிசெய்யுங்க...சாதாரண சாப்பாடுக்கு ரூ.300/-, வடை, பாயாச சாப்பாடிற்கு ரூ.500/-,இப்படி எல்லாம் போட்டா, நல்லா விரும்பி சாப்பிடுவாங்க.., தீபாவளி, பொங்கல் இதுக்கு எல்லாம் ஏதாவது பணம் அனுப்பினீங்கன்னா சந்தோஷம். உங்க பெயரை போர்ட்ல டிஸ்ப்லே செய்வோம்..:))) உதவி செய்மா...:))

கவிதா:- கண்டிப்பாக செய்றேன்ப்பா.. என்னோட ப்ளாக்ல போடறேன் என்னோட பிரன்ட்ஸ் எல்லாருமே செய்வாங்க... உங்க டீடைல்ஸ் கொடுங்க.. கான்டாக்ட் நம்பர், அட்ரஸ் எல்லாம் கொடுங்க... போட்டா இருந்தா கொடுங்க....
அப்பா:- வாசுக்கு அனுப்பறேன்மா நீ வாங்கிக்கோ...

கவிதா:- அப்பா இவ்வளவு பொறுமையா என்னோட நொய் கேள்விக்கு எல்லாம் இரண்டு பேரும் பதில் சொன்னீங்க.. எனக்கு ஒரு ஐடியா வந்து இருக்கு.. என்ன எல்லாம் செய்யணும்னு.. :) தாங்ஸ்ப்பா.. தாங்ஸ்ம்மா... :)))
=========================
போட்டோ அடுத்த பதிவில்....

அணில் குட்டி அனிதா:- பாவம் அவிங்க.. ஏதோ ஒரு நாள் பொண்ணு வீட்டுல வந்து இருக்கலாம் வந்தா அம்மணி அவங்களை நோண்டு நோண்டுனு நோண்டிட்டாங்க...

பீட்டர் தாத்ஸ்:- Charity begins at home, but should not end there”
Charity sees the need, not the cause”


அவர்களுக்கு உதவி செய்ய நினைப்பவர்கள் தொடர்பு கொள்ள -