இரண்டு மூணு நாளாஆ கவிதா தம்பிக்கு ஒரு பாட்டு எழுதனும்னு பாட்டு எழுதனும்னு ஒரே பினாத்தல்… தூக்கத்துல எழுப்பினா க்கூட தம்பிக்கு ஒரு பாட்டு எழுதனும்னு சொல்லிக்கிட்டே எழுந்திருக்காங்க.... சரி எழுதுவாங்கன்னு பாத்தா எழுத தான் அம்மணிக்கு நேரம் இல்லை

அதனால் இந்த சான்ஸை மிஸ் பண்ணாம நானு அண்ணன் சென்ஷி'க்கு ஒரு கவிஜ எழுதி இருக்கேன் ….


நீங்க எல்லாரும் படிக்க முடிஞ்சா படிங்க.. ஆனா அடிக்க மட்டும் வராதீங்க.... !! சின்ன உடம்பு தாங்காது…ஒகே!!

ஸ்டார்ட் கேமரா.. ச்சேஏ!ஸ்டார்ட் தி கவுஜை..!!

அண்ணே !!

நீ கமென்ட்டு போடறதுல சுட்டி
ஏன்னா நீ எப்பவுமே வெட்டி

ராத்திரியான உன் கையில புட்டி
நீ பாக்க விரும்பறதோ பல்லான்ன பார்ட்டி

உன் பிரொப்பைல்ல எந்த நேரமும் ஒரு குட்டி
அதை பாத்தூ நீ அடிக்கடி அடிக்கற சீட்டி

நீ வாய தொறந்தா கவுஜை வருது கொட்டி
தாங்க முடியாம நாங்க எல்லாரும் எடுப்போம் உன் பல்லை தட்டி

நீ இருக்கறது சார்ஜாவில ஒரு சிட்டி
உன் போட்டா பாத்த பிறகும்
நாங்க உசுரோட இருந்தா எங்க உசுரு ரொம்ப கெட்டி

இவ்வளவு அ(ழு)ழகான ஒரு கவுஜைய நான் தட்டி
நீ என்னவோ அனுப்ப போவது என்னை மெயில்ல திட்டி

இந்த கவுஜைக்காக கவிதா எனக்கு கொடுத்த பட்டம் "பட்டி"
இதுக்கு மேல இங்க நின்னா கும்பிடுவாங்க
கவி என் போட்டோக்கு மாலைய "மாட்டி"

வரட்டாஆஆஆஆஆ!!

தாத்ஸு நீ ஒதுங்கிக்கோ....இன்னைக்கு வேணாம் ஒன்னோட பீட்டரு..