சொந்த ஊருக்கு சென்று வந்தாலே ஒரு சொல்லமுடியாத சந்தோஷம், அதுவும் பள்ளிக்கூடம், தோழிகளுடன் பேசிக்கொண்டு நடந்த தெருக்கள், எங்களின் வீடு..என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

அண்ணன் இன்னமும் எங்களுது வீட்டில் இருந்தாலும், இப்போது இருக்கும் வீடு கொத்தி கூறுபோட்டுவிட்ட வீடு. பெரியவர்கள் இறந்தபிறகு, சிறுசுகள் தனக்கு கொடுக்கப்பட்ட பாகத்தை தனக்கு தகுந்ததாக மாற்றிக்கொண்ட வீடுகள். நாங்கள் வளர்ந்த வீடாகவே இல்லை.

சரி விஷயத்திற்கு வருவோம், 3, 4 பயணங்களாக ஊருக்கு சொல்லும் போது யாராவது ஒரு பெண் என்னை இப்படி "நீங்க கவிதா தானே? " என்று கேட்கிறார்கள்.

நேற்று கணவரின் நெருங்கிய உறவினர் வீட்டு நிச்சயதார்த்தம். கிளம்பும் போது பெற்று வைத்த பிள்ளை அவனை விட அம்மா அழகாக இருக்கிறார்களே என்ற பொறாமையில் -

"போட்டு இருக்கிற நகையோட போ" ஓவரா போட்டு சீன் போடாதே..!!" என்றான்..

"டேய் ப்ளீஸ் சிமிக்கி மட்டும் போட்டுக்கிறேனே " என்றேன்..

"இல்லை தேவையில்லை இப்படியே போ.. !"

ஆபிஸ்'க்கு எப்படி போவேனோ அதே தான்..என்ன சுடிதார் மாற்றி சேலை..அதிலும் பட்டு சேலை கட்ட அனுமதி கிடைக்கவில்லை :((

அங்கு சென்று,நிச்சயதார்தம் முடிந்து சாப்பிட போகும் போது, தோலை ஒரு கை தொட்டது. திரும்பி பார்த்தேன்...

"நீங்க கவிதா..தானே? " கருப்பாக குள்ளாமாக குண்டான ஒரு பெண் தயங்கி தயங்கி கேட்டார்கள்.

"ஆமாங்க....." அவரை யாரென்று சுத்தமாக என்னால் அடையாளம் காண முடியவில்லை.

கணவர் வீட்டு சொந்தம் யாராவது இருக்குமோ..? சைஸ்ஐ பார்த்தால் கண்டிப்பாக அவங்க வீடாக இருக்க எல்லாவித சாத்திய கூறுகளும் தெரிந்ததால்...என்ன சொல்லி சமாளிப்பது என்று தீவிரமாக யோசித்தேன். தெரியாது என்று சொன்னால் அங்கேயே ஒரு கூட்டம் கூட்டி நம்மை ஒரு வழி ஆக்கி விடுவார்கள். கல்யாணம் ஆகி மாமியார் வீடு என்று போவது வருடதிற்கு ஒருமுறையோ இரண்டு முறையோ..இதுல ஒரெ மாதிரி இருக்கும் இவர்களை எப்படி அடையாளம் கண்டுப்பிடிப்பது. அதுவும் ஒரு ஒரு வீட்டிலும் எப்படியும் 7, 8 என்று பிள்ளைகள் அவர்களின் மனைவிகள், கணவர்கள், அவர்களின் பிள்ளைகள், சொந்தகள் என்று அனுமார் வால் மாதிரி போய் கொண்டே இருக்கும்.

இது கணவருக்கு தெரிந்தால் -

"ஏன்டி உனக்கு யார்க்கிட்டயுமே நாசுக்கா பதில் சொல்ல தெரியாதா? உண்மைய பேசறேன்ன்னு ஏன் என் மானத்தை வாங்கிட்டு வரே" திருந்தவே மாட்டியா நீ.? உனக்கு மெச்சுரிட்டீயே வராதா? - இப்படி கண்டிப்பாக ஒரு ஒருமணி நேரத்திற்கு எனக்கு உபதேசம் கிடைக்கும். எப்படியும் இந்த காதில் வாங்கி அந்த காதில் அதை விட்டுவிடுவேன் என்பது வேறு விஷயம், இருந்தாலும் அந்த ஒரு மணி நேரம் அவரின் பேச்சை கேட்கவேண்டுமே! சரி இந்த முறை கணவரிடம் என் சாமார்த்தியமான பேச்சை பற்றி சொல்லி நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று, புத்திசாலிதனமாக பேச முயற்சி செய்தேன்.

"நீங்க........... "..ஹி ஹி..என்று சிரித்தேன்...

"நான் தான் கற்பகம்..."

கற்பகமா.....??? எனக்கு தெரிந்த ஒரே கற்பகம் சென்னையில் உள்ள கற்பகாம்பாள் கோவில் கற்பகம் தான்.. இந்த அம்மா என்ன "ஜார்ஜ் புஷ்" ன்னு சொல்லுகிற மாதிரி "கற்பகம்" என்று சொல்லிகிறார்கள்,...புத்திசாலித்தனம் ஓடிப்போனது...

"தயவுசெய்து மன்னிச்சிக்கோங்க.. நீங்க யாருன்னு எனக்கு தெரியலைங்க.... நீங்கலே சொல்லிடுங்க......" .

"நான் உங்க கூட படிச்சேன்... விழுப்புரம்..ஸ்கூல்.. ஞாபகம் இல்லையா...."

"ஓஓஓஒ.... என்று இழுத்தேனே தவிர ஞாபகம் வரவே இல்லை.. என்னோட க்ளாஸா... ? " என்றேன்..

"இல்லை நான் 9th C... "

"ஸ்..ஓ அதான்ப்பா எனக்கு நினைவில்லை..நீங்க என் க்ளாஸ் இல்லை.. நான் 9th F ஆச்சே.. சரி எப்படி இருக்கீங்க.... நான் இந்த மாப்பிள்ளைக்கு சொந்த சித்தி..!! மாப்பிள்ளையோட அப்பாவோட தம்பியோட ஒயிஃ .."

"..ம்ம்... நீங்க என்ன செய்றீங்க..எங்க இருக்கீங்க?"

"நான் சென்னையில இருக்கேன்..."

"வேலை செய்யறீங்களா? என்ன வேலை செய்யறீங்க? "

" ம்ம் செய்யறேன்... HR ஆ இருக்கேன்.."

"HR ..ன்னா?"

திரு திருவென்று விழித்தேன்... " ப்ர்சனல் டிபார்ட்மென்ட்' தான் இப்ப எல்லாம் HR " என்றேன்.

"நான் டீச்சரா இருக்கேன்................பக்கத்தில் ஒரு கிராமத்தில்...."

"ஓ வெரிகுட் .... ஏன் என்னை இப்பத்தான் பார்க்கிறீங்களா.. நான் இந்த வீட்டு மருமகள்.. எப்பவும் எல்லா விஷேத்திலும் என்னை பார்க்கலாமே ஏன் என்னிடம் நீங்க பேசல..?"

"இல்லை இன்று தான் நான் வந்தேன்..இது வரையில் என் வீட்டு பெரியவர்கள் மட்டுமே வந்தார்கள்.."

கற்பகத்தின் கணவர் மற்றும் குழந்தையை அறிமுகம் செய்து வைத்தார்கள்.... அவர்களிடமும் பேசினேன்.. கற்பகத்தின் கணவர் என் கணவரின் பெயரை சொல்லி..ஓ அவரோட ஒய்ஃ'ஆ நீங்கள் என்றார்.

ஒரு ஆட்டோகிராப் படம் ஓடியது.... ஒரே பள்ளியில் படித்த இருவர், எங்கெங்கோ இருக்கிறோம்... பார்த்து பேசும் போது,செய்யும் வேலையை பற்றி சொல்லுவதில் ஒரு தயக்கம், அதுவும் கிராமத்தில் என்று சொல்லும் போது அந்த குரலில் இருந்த தோய்வு.. ஆசிரியர் பணி செய்ய கொடுத்து வைத்து இருக்கவேண்டும் இல்லையா...?.. நம்மை எல்லோரையுமே உருவாக்குபவர்கள் அவர்கள் தானே..?.. என்னை அடையாளம் கண்டு அந்த பெண் பேசியது சந்தோஷமான ஒரு நினைவு........

அணில் குட்டி அனிதா:- மக்கா மேட்டர புடிச்சீட்டீங்களா இல்லையா?.. கவி பத்தி நல்லா தெரிஞ்சவங்க மேட்டர புரிஞ்சி இருப்பாங்க....என்ன சொல்ல வராங்க தெரியுமா.. அவங்கள எல்லாரும் அடையாளம் கண்டுக்கற மாதிரி அன்னையிலிருந்து (ஸ்கூல் டேஸ்'ல) இருந்து இன்னைக்கு வரைக்கும் இளைமையோட அப்படியே இருக்காங்கங்களாம்... அதான் எல்லாரும் இவிங்கள அடையாளம் கண்டுக்கறாங்களாம்.. இதுக்கு மேல நீங்களாச்சி அம்மணியாச்சி...... :)))

பீட்டர் தாத்ஸ்:- The difference between school and life? In school, you're taught a lesson and then given a test. In life, you're given a test that teaches you a lesson. ~ Tom Bodett