கிருஷ்ணாவை ஒரே ஒருமுறை சந்தித்து இருக்கிறேன்....அவரிடம் ஒரு வார்த்தைகூட பேச வாய்ப்பு இல்லை, ஏனோ தனியாகவே அவர் இருந்ததாக நினைவு. எப்போதோ பார்த்தது, இப்போது நடிகர் நகுல்'லை பார்க்கும் போது எல்லாம் கிருஷ்ணாவின் நினைவு வருகிறது. கிருஷ்ணா நீங்க தான் சொல்லணும் நீங்க நடிகர் நகுலை போல இருக்கீங்களா.. ?? புரிந்தாலும் புரியாவிட்டாலும் தொடர்ந்து அவருடைய பதிவுகளை படிப்பேன். இன்று ....இதோ கிருஷ்ணா நம்முடன்....

உட்காரவைத்து மரியாதையாக கேட்ட கேள்விகள்


கவிதா:- கிருஷ்ணா ... ஏன் லக்கியாக மாறினீர்கள்? ஏதாவது குறிப்பிட்ட காரணம் இருக்கா நீங்க லக்கியா இருப்பதற்கு?

லக்கிலுக் எனக்கு மிகவும் பிடித்த காமிக்ஸ் கேரக்டர். இப்போதிருப்பதைப் போலவே சிறுவயதிலும் ஒல்லியாக, சுறுசுறுப்பாகவே இருந்தேன். அப்போது நண்பர்கள் கிண்டலுக்காக வைத்த பெயர் பிடித்துப்போனதால் அப்படியே தொடர்கிறேன்.

கவிதா:- பதிவர் சந்திப்பு என்றாலே கிருஷ்ணா' இல்லாமல் இல்லை.. ?? நீங்களாக கமிட் செய்துக்கறீங்களா?

அதிஷா, முரளிகண்ணன் இல்லாமலும் பதிவர் சந்திப்பு நடப்பதில்லை. பதிவர் சந்திப்பின் மொக்கைத்தன்மை பிடித்திருப்பதால் தவறவிடாமல் கலந்துகொள்கிறேன்.

கவிதா:- பதிவர்கள் பற்றிய விவரங்கள் (தனிப்பட்ட மற்றும் பொதுவான) நான் கவனித்து பார்த்தது வரை உங்களுக்கு எல்லோரை பற்றியும் தெரிகிறது. எப்படி? குறிப்பாக யாரவது வெளியிடத்திலிருந்து வந்தால், திருமணம், இறப்பு இப்படி....

பதிவர்கள் பலரோடும் இணையம் தாண்டியும் பழகி வருவதால் இருக்கலாம். ஸ்பெஷல் காரணம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

கவிதா:- நீங்கள் ப்ளாக்'க்கு வந்த புதிதில் நிறைய அனானி பின்னூட்டகள் போடுபவராக இருந்தீர்கள். ஆனால் தீடீரென்று ஒரு மாற்றம், அவற்றை எல்லாம் விட்டுவிட்டு ரொம்ப நல்லவராக மாறிவிட்டீர்கள்? ஏன் இந்த மாற்றம்?

நான் எப்பவுமே கெட்டவன் தான். அனானி ஆட்டை அலுத்துவிட்டது என்பதைத் தவிர வேறெதுவுமில்லை. அதுவுமில்லாமல் பொட்டிக்கடை, வரவனை, செந்தழல் ரவி போன்ற செயல்வீரர்கள் பங்களிப்பின்றி அமுக வலுவிழந்துப் போனதும் இன்னொரு காரணம்.

கவிதா:- வேலை, வீடு , குடும்பம் இப்படி பலவற்றிற்கும் இடையே நீங்கள் தமிழ்மணத்தில் தினமும் குறைந்தபட்சம் ஒரு ஹிட் பதிவை எழுதிவிடுகிறீர்கள்? எப்படி சாத்தியமாகிறது.?

தினமும் இரவில் 9.30 டூ 10.30 எழுத்துப்பயிற்சி செய்வது வழக்கம். அதில் தேறும் எதையாவது மறுநாள் பதிவாக்கி விடுகிறேன். அது ஹிட் ஆவதும், ஃப்ளாப் ஆவதும்.. எல்லாம் அவன் செயல் :-)

கவிதா:- போலி விவகாரத்தில் எனக்கு அடுத்து போலியுடன் தொடர்புடைய ஒருவராக பார்க்கபட்டவர் நீங்கள். அதை பற்றிய உங்களின் கருத்து. (முடிந்துவிட்டாலுமே தெரிந்துகொள்ள ஆசை, எனக்கு தெரிந்து நீங்கள் நிதானமாக மிகவும் இருந்தாலும் மனதளவில் ரொம்பவும் வருத்தப்பட்டீர்கள் என்று அறிவேன்) உங்களின் நிலைப்பாடு எப்படி இருந்தது.

எனது நிலைப்பாடு நீங்கள் குறிப்பிட்டது போலவே வருத்தமாக இருந்தது. முகத்துக்கு நேரில் நட்பு பாராட்டி, பின்னால் போய் முதுகில் குத்தியவர்கள் சிலரை அறிந்துகொள்ள முடிந்தது. போலி பிரச்சினையின் சீரியஸ்னஸ் என்னுள் ஏதும் பெரிய இம்பேக்டை ஏற்படுத்திவிடவில்லை, நான் நேரிடையாக போலியால் பாதிக்கப்படாததால் இருக்கலாம், ஆனால் மறைமுகமாக பாதிக்கப்பட்டிருக்கிறேன். போலியால் பாதிக்கப்பட்டோம் என்று ஓலமிடுபவர்களில் சிலர் போலியை விட ஆபத்தானவர்கள் என்பது என்னுடைய கருத்து. போலி ஒழிந்ததில் மகிழ்ச்சியோ, வருத்தமோ எதுவுமில்லை. ஆனால் ஒழிக்கப்பட்டதால் என்னை 'நோண்டு'பவர்கள் தொல்லை குறைந்திருப்பதால் கொஞ்சம் நிம்மதி.

கவிதா:- அடுத்த போலி நீங்களாக வந்துவிடவேண்டுமேன்று சிலர் நினைக்கிறார்களா? இல்லை வரவைப்பதற்கான முயற்சி நடக்கிறதா? யாரோ ஒருவர் வந்தால் அது கிருஷ்ணா'வாக பார்க்கபடுமா? ஏன்? (யாருமே வரக்கூடிய சாத்தியகூறுகள் இல்லை காரணம் நம் சைபர் போலிஸ் என்றாலும் இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள்)

ஆபாசத்தை விடுங்கள். போலி எப்படி அந்த விவகாரத்துக்காக அவ்வளவு நேரம் ஒதுக்கி கடுமையாக உழைத்தார் என்பது என்னளவில் ஆச்சரியம். போலியளவுக்கு நான் உழைப்பாளியுமல்ல, இப்போது எனக்கு அவ்வளவு நேரமுமில்லை என்பதால் அடுத்த போலியாக நான் உருவாகுவதற்கான வாய்ப்பு குறைவு. அடுத்த போலியை உருவாக்கக் கூடிய வல்லமை காண்டு கஜேந்திரன் சாருக்கு மட்டுமே உண்டு. அவர் யாரை நோண்டி உருவாக்குவார் என்பதற்கு காலம் தான் விடையளிக்க வேண்டும்.

அணில்குட்டி:- அண்ணே உங்க பதிவுக்கு வந்தா ஒரு சைட்ல.. "வெட்கபடாதீங்க சார்" ன்னு போட்டு வச்சிருக்கீங்க..... எனக்கு நீங்க சொல்லிட்டாலுமே ரெம்ப வெக்க வெக்கமா இருக்கண்ணே.. அதை கண்டுக்காம படிக்கவேண்டியாத இருக்குன்னே.. தனியா வச்சி பாத்துக்க கூடாதாண்ணே..? நாங்க எல்லாம் எப்படிண்ணே உங்க பக்கம் வரது?

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மொள்ளமாறியும், முடிச்சவிக்கியும் இருப்பதால் 'வெட்கப்படாதீங்க சார்'ஐ வேலை மெனக்கெட்டு அப்டேட் செய்ய வேண்டியிருக்கிறது. சும்மா டைம்பாஸ் மச்சி வலைப்பூ ஒரு குமுதம். இங்கே இதுவும் கிடைக்கும். ரொம்ப வெட்கப்படுபவர்கள் ஃபீட் பிளிட்ஸிலோ, கூகிள் ரீடரிலோ சந்தாதாரராகி பதிவை மட்டும் படித்துக் கொள்ள வேண்டியது தான்.

கவிதா:- மத்திய அமைச்சர் ராசா / தயாநிதி மாறன் ஒப்பிடுக.

ராசாவை விட தயாநிதி சிறப்பாக செயல்பட்டார் என்று கருதுகிறேன்.

கவிதா:- சூடு சொரணை இல்லாத, வக்கில்லாத கருணாநிதி - (இன்னும் பல வசைகள்) இப்படி எல்லாம் மீடியாக்களிலும், மேடைகளிலும் கொஞ்சமும் சபை நாகரீகம் இல்லாமல் பேசும் அம்மையார் ஜெயலலிதா (இப்படித்தான் கலைஞர் இப்பவும் அவரை குறிப்பிடுகிறார்) பற்றி உங்களின் கருத்து.

நம்பியார் இல்லாமலிருந்தால் எம்.ஜி.ஆர் சினிமாவில் சாகாவரம் பெற்றிருக்க முடியாது. ஜெயலலிதா அரசியலில் இருப்பதும் கூட கலைஞருக்கு சிறப்பு தான். வரலாறு ஜெ.வை எப்படி அடையாளப்படுத்தும் என்று ஜெ.வுக்கே தெரிந்திருக்கும். நாமென்ன சொல்வது?

கவிதா:- எம்.ஜி.ஆர், வை.கோ, தயாநிதிமாறன் இவர்களை இழந்தது தி.மு.கா விற்கு நெருக்கடியை கொடுத்தது, இனிமேலும் கொடுக்கும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. உங்களின் கருத்து?

எம்.ஜி.ஆர் தவிர்த்து மற்ற இருவரால் கட்சிக்கு அரசியல்ரீதியாக எந்த பாதிப்புமில்லை. திமுகவுக்கு எதிர்காலத்தில் பிரச்சினையாக இருக்கப்போவது கொள்கைகள் நீர்த்து வருவதே.

கவிதா:- தயாநிதிமாறனுகென்று ஒரு இடம் எதிர்காலத்தில் கண்டிப்பாக இருக்கிறது. சரியா/ தவறா?

குங்குமம் ஆபிஸில் அவருக்கு ஒரு சீட் கண்டிப்பாக இருக்கும்.

அணில்குட்டி :- டவுசரை பத்தி ரவி அண்ணனை கேட்டா நீங்கத்தான் அவருக்கு டவுசர கழட்ட சொல்லி கொடுத்தீங்கன்னு சொன்னாரு...ஏன் உங்களுக்கு இந்த வேலை??

ஸ்கூல் டைமில் கட் அடித்துவிட்டு சினிமாவுக்கு போகும்போது யார் டிக்கெட் எடுப்பது என்று நண்பர்களுக்குள் சண்டை போடுவோம். போனவாரம் நான் தானேடா செம்பருத்தி படத்துக்கு டவுசர் அவுத்தேன் என்று அடித்துக் கொள்வோம். அதாவது டவுசர் அவுப்பது என்பது செலவிடுதலை குறிக்கும். யதேச்சையாக ஏதோ ஒரு பதிவில் இவ்வார்த்தையை பயன்படுத்தினேன். இணையத்தில் இப்போது எது எதற்கோவெல்லாம் டவுசர் அவுக்கிறார்கள் :-(

ஓடவிட்டு அடித்து கேட்ட கேள்விகள் :-

1. நீங்கள் கட்டியிருக்கிற வீடு பற்றி

அரைகுறையாக தான் கட்டியிருக்கிறேன். இதற்கே ஈ.எம்.ஐ. கட்டி தாவூ தீருகிறது. லோன் டாப் அப் செய்து வீட்டை முழுமையாக்க வேண்டும்.

2. உங்களின் பொழுதுபோக்கு?

கண் திறந்த நொடியில் இருந்து பார்க்க இயலும், கேட்க இயலும் எல்லாமே பொழுதுபோக்கு தான்.

3. "டவுசர் கிழிய " என்ற வார்த்தை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும் ?

அறவே பிடிக்காது.

4. உங்களின் பிடித்த உங்களின் பதிவுகள் சில

இன்னா
அப்பாவி அடிமைகளுக்கு

5. சாரு நிவேதிதா - விடம் பிடித்த சில குணங்கள்

ஆணவம், கர்வம், கோபம், வெள்ளந்தித் தன்மை

6. உங்களுக்கு பிடித்த பெண் பதிவர்?

பொன்ஸ்

7.நீங்கள் என்னை திட்டி ஒரு பதிவு எழுதி இருக்கிறீர்கள். அதை இப்போது ஒருமுறை படித்துவிட்டு சொல்லுங்கள் இப்போது என்ன உணர்கிறீர்கள்?

எனக்கு ஞாபகமறதி அதிகம். ஞாபகமறதி ஒரு வரம். அது இல்லாவிட்டால் பலபேர் தற்கொலை செய்துகொள்வோம்.

8. அரைகுறை ஆடையுடன் நீங்கள் இடம் படங்கள் பற்றி

நானும் ரசிக்கிறேன், நான் ரசிப்பதை மற்றவர்களும் ரசிக்கிறார்கள்.

9. பெண் எப்படி இருப்பது அவளுக்கு நல்லது?

பெண் பெண்ணாகவே இருக்கலாம்.

10. மடிப்பாக்கதில் உங்களுக்கு பிடித்த இடம். ஏன்?

ஐயப்பன் கோயில். தாவணி ஃபிகர்களை இங்கு மட்டும் தான் இப்போதும் தரிசிக்க முடிகிறது.

கிருஷ்ணா'வின் இன்றைய தத்துவம் :- அதிக பின்னூட்டம் ஆபத்துக்கு உதவாது...