மும்பையில் வேலை விஷயமாக தங்கி உள்ளதால், பொழ்துவிடிந்து பொழுது போனால் டென்ஷன். முன்பு நடந்த வட இந்தியர்கள் தாக்குதல் போதும் மிகுந்த டென்ஷனில் இருந்தோம்.

ரூம் கிடைப்பதிலேயே தென்னிந்தியர் என்று நிறைய மாராட்டியர்கள் வீட்டில் விரட்டியடிக்கப்பட்டார். இதில் ஏகப்பட்ட அன் அஃபிசியலா ஷேரிங் பேசிஸில் வீடு தருகிறோம் என்று ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் அழைத்தார்கள். (இந்தியாவில் தான் இருக்கிறோமா?) அதில் இருந்து அவர் தப்பிப்பதே பெரும் பாடாக இருந்தது. இப்போது கூட போலிஸ் நேரடி ஆய்விற்கு பிறகு ஒரு இடத்தில் தங்கி இருக்கிறார். அங்கு வீடு எடுத்து தங்க போலிஸில் நேரடியாக சென்று அவர்களின் ஒப்புதல் கிடைத்த பிறகுதான் தங்கமுடியுமாம். இது கூட தீவரவாதிகள் ஊடுருவல் அதிகமாக இருப்பதால் அரசாங்கம் செய்து வைத்துள்ள முதல்நிலை சோதனை. தமிழ்நாட்டை விட்டு தாண்டினால் எத்தனை பிரச்சனைக்கு உள்ளாக வேண்டியுள்ளது. இங்கு நாம் அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

சரி முமபை கதைக்கு வரலாம், மீடியா ஒரு பக்கம் இருக்கட்டும், வதந்திகளால் தான் என் கணவர் மிகுந்த டென்ஷாகவும், என்ன செய்வது எங்கே போவது என்று தெரியாமல் இருக்கிறார். சாப்பாட்டிற்கு சாதாரண ஹோட்டல்களுக்கு செல்ல கூட ரொம்பவம் கஷடமாக இருப்பதாக சொன்னார். தீடிரென்று ஒரு வதந்தி, ஒரு குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் தீவரவாதிகள் புகுந்து விட்டார்கள், எல்லோரையும் தாக்குகிறார்கள் என்று, முன் திட்டத்துடன் அவர்கள் வந்து இருப்பதால் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் அவர்கள் நுழையக்கூடும்.

இந்த ரயில் நிலைய வதந்தியில் தான் மக்கள் ரொம்பவும் பயந்து போய் இருக்கின்றனர். மும்பை நகரை பொருத்த்வரை அதிக மக்கள் நெருக்கடி உள்ள இடங்களில் ரயில் நிலையமும் ஒன்று. ஒரு நாள் எல்லாம் இந்த வதந்தி இருந்து வந்தது. மாலை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு இந்த செய்தி ஒரு வதந்தி, உண்மையில்லை என்று தெரிந்து வீட்டில் இருப்பவர்களும் அலுவலகம் சென்றவர்களும் நிம்மதி அடைந்து உள்ளனர்.

செய்திகள் ஒரு பக்கம் இருக்கட்டும் நம் பதிவர்கள் எல்லோரும் மும்பை பற்றி எழுதும் செய்திகளையும் படித்து வருகிறேன். அவ்வபோது என்ன நடக்கிறது, சந்தேகம் வந்தால் உடனே ஃபோன் என்று நாட்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தியாவிற்குள்ளே இப்படி என்றால்... ?? வெளிநாடுகளில் வேலை செய்யும் கணவரை (காதலரை, காதலியை) பிரிந்து இருக்கும் ஒவ்வொருவரும் என்ன டென்ஷனில் இருப்பார்கள் என்பதை இப்போது உணரமுடிகிறது.

எப்போது போனில் பேசினாலும் வந்து விடுங்கள் வேலை போனால் போகட்டும் சென்னையிலேயே இருக்கலாம் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேன். மும்பையில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருக்கும் அனைவருக்காகவும் கடவுளை பிராத்தனை செய்வதை தவிர வேறு எதுவும் செய்யமுடியாத நிலையில்...

அணில் குட்டி அனிதா: அம்மணி ரெம்ப டீசன்டா பதிவு போட்டுடாட்ங்க போல ஆனா வீட்டுக்குள்ள அமக்களம் தாங்கல.. "டேய் எடுறா அந்த Gun ஐ flight ஐ புடிடா... போய் அந்த தீவரவாதியில ஒருத்தனையாவது இந்திய சிட்டிசனா சுட்டுடு வரலாம்னு " இவிங்க தீவரவாதியா ஆகறதும் இல்லாம இவிங்க புள்ளையையும் ஆக்க பாக்கறாங்க..என்ன கொடுமைடா இது !!

புள்ள என்ன சொல்லிச்சி தெரியுமா? இல்லாத Gun அ எடுக்க சொல்லாத.. உன்னை மாதிரி எல்லாரும் கையில வெபன் எடுக்க முடியாது.. அதுக்கு தான் போலிஸ்ஸும், ஆர்மியும் இருக்காங்க... ரொம்ப ஓவரா சீன் போட்டு நாட்டை காப்பத்தறேன்னு கிளம்பின உன்னை முதல்ல தூக்கி உள்ள வைப்பானுங்க.. அடக்க ஒடுக்கமா அமைதியா இரு.. வூட்டுகாரு மேல அவ்லோ அக்கற இருந்தா கூட்டியாந்து இங்கேயே வச்சிக்கோ..தயவுசெய்து சவுண்டயும், பீட்டரையும் கொர, முடியல, கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு அம்மாவை கொடுத்த...??!! "..ஹா..ஹா.. கவிதாக்கு தகுந்த புள்ளைங்க. .இப்படி ஒரு புள்ள இல்லைனாலும் இவிங்கள அடக்க முடியாது.. !!

சூப்பர் ஐடியா ..பேசமா அம்மணிய மும்பை அனுப்பி பாட சொல்லலாம்.. தீவரவாதி அத்தனை பேரும் 2 பாட்டுக்கே சரண்டர் ஆயிடுவாங்க..கோவம் அந்து போட்டு தள்ளினாலும் லாபம் தான்.. ஹி ஹி..... !!


பீட்டர் தாத்ஸ் :- A terrorist is someone who has a bomb, but doesn't have an air force