அணில் குட்டி அனிதா:- அம்மணி சுசிலா அம்மாவோட பாடல்களை பாடறேன்னு பாடி...என்னோட காதை அல்ரெடி டெமேஜ் செய்துட்டாங்க..ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..வலி தாங்க முடியல.... நான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெறட்டும்னு ஒரு நல்ல எண்ணத்தோட.......

:)))) ஹ ஹா ஹா ஹா ஹா....... உலகத்தை நினைச்சேன்.. சிரிச்சேன்.. :))) அம்மணியோட அட்டூழியம் தாங்க முடியல....


Get this widget | Track details | eSnips Social DNA

பீட்டர் தாத்ஸ்: “Always keep a song in your heart - it's like karaoke for the voices in your head”

கவிதா: என்னுடைய எழுத்து, பாடல், கதை கவிதை எல்லாமே அப்பாவிற்காகத்தான். .அப்பாவிடமிருந்து தான் எனக்கு இவை எல்லாம் கிடைத்தன.. ஆனாலும் பாடல்கள் தனியாக அவருக்காகமட்டுமே.. :)) நான் முதன் முதலில் பள்ளியில் முதல் பரிசு பெற்ற போது பாடிய பாடல் அப்பா சொல்லிக்கொடுத்தது.. ஆசிரியர் இல்லாமலே ஏகலைவன் போல இசை, இசை கருவிகள் எல்லாவற்றையுமே பயின்றவர் அவர். அதனால் பாடும் பாடல்கள் அனைத்தும் அப்பாவிற்கே..... !!

(நல்ல வேலை அவர் உயிருடன் இல்லை இருந்தால் இப்படி பாடியதற்கு என்னை "முட்டாளு முட்டாளு இப்படியா பாடறது சுருதி சரியா இல்லையே" ஏன்னு சொல்லி சிரிச்சி சரியா பாட வைத்து இருப்பாங்க")