அப்படி என்ன நான் எதிர்ப்பார்க்கிறேன்? அதுவும் மிருகங்களிடம் மட்டும் கிடைக்க.. ? மனித குணத்திலிருந்து சற்றே மாறுபட்டாலும் நாம் அவர்களை மிருகம் என்கிறோம். அப்படி இருக்க..மனிதனிடம் இல்லாத ஒன்று அப்படி என்ன மிருகங்களிடம் இருக்கிறது? .

சரி விஷயத்திற்கு வருவோம்.. . ஏதோ ஒரு நிறைவற்ற தன்மை, எப்போது பார்த்தாலும் யாரை பார்த்தாலும் ஒரே புலம்பல். மனிதர்களிடம் உள்ள நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துக்கொண்டே வருகிறது. யாரை பார்த்தாலும் பிடிப்பதில்லை. இவர் எப்போது நம்மை ஏமாற்றுவார் என்று தோன்றும். தனிமை மட்டுமே மிகவும் பிடித்திருக்கிறது. ஏன் இப்படி மனிதர்கள் இருக்கிறார்கள். சொந்தங்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? நண்பர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?. சுயநலவாதிகளாக, சந்தர்ப்பவாதிகளாக, பச்சோந்திகளாக நிறம் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்?

என்னுடைய நண்பர் என் புலம்பல்களை கேட்டுவிட்டு, சொன்னார் "நீ நல்ல டாக்டராக சென்று பார்".

நான் சொன்னேன். "நான் இன்னும் பைத்தியம் ஆகவில்லை, அப்படி நான் பைத்தியம் என்று தெரிந்தால் நானே டாக்டரிடம் சென்று விடுவேன் நீ அதைப்பற்றி கவலை படாதே". நான் யாருக்கும் தொநதரவாக இருக்கமாட்டேன் "என்றேன்.

என்னை டாக்டரிடம் செல்ல சொன்ன அந்த நண்பரிடம் மேற்கொண்டு நான் பேச பேச என்னுடைய பேச்சில் இருந்து நீ எதிர்பார்ப்பது மிக மிக அதிகமானது. அது மனிதர்களிடம் கண்டிப்பாக கிடைக்காது. "நீ எதிர்ப்பார்ப்பது மிருகங்களிடம் மட்டுமே கிடைக்கும்....." என்றார். என்னிடம் கூட அதை எதிர்ப்பார்க்காதே... நானும் ஒரு மனிதன் தான் என்றார்....:)))

மனிதர்களிடம் கிடைக்காத ஒன்று அது என்ன மிருகங்களிடம் மட்டும் கிடைக்கிறது. உங்களுக்கு அது என்ன தெரிந்தால் பின்னூட்டத்தில் இடுங்கள். உங்களில் எத்தனை பேர் இதை உணர்ந்திருக்கிறீர்கள் என்று பார்க்கலாம்..... .

அணில்குட்டி அனிதா:- எந்த பைத்தியம் இதுவரைக்கும் நான் பைத்தியம் ன்னு சொல்லி இருக்கு.........?? அய்யய்யோ.. கவி முட்டைகண்ணால முறைக்காதீங்க....பயம்மா இருக்கு......நான் உங்களை சொல்லுவேனா.. சொல்லுங்க......ஹி..ஹி..ஹி...ஆனா கவி நான் இருக்கும் போது உங்களுக்கு என்னாத்துக்கு இன்னொரு மிருகம் ? உங்களையும் என்னையும் பிரிக்க யாரோ சதி செய்யறாங்க உஷாரா இருங்க.. இல்லன்ன என்கிட்ட சொல்லுங்க..அவங்களை நான் பாத்துக்குறேன்....!!

பீட்டர் தாத்ஸ் :- It's difficult to understand why people don't realize that pets are gifts to mankind