சேமியா புட்டு மிக எளிதாக, மிகவும் வேகமாகவும் செய்து விடலாம். விருந்தினர் வரும்போது செய்து வைக்கலாம். ஆவியில் வைத்து எடுப்பதால் உடலுக்கும் நல்லது.

தேவையான பொருட்கள் :-

வறுத்த சேமியா - ஒரு பாக்கெட்
தேங்காய் துருவல் - ஒரு சின்ன கப்
சர்க்கரை - தேவைக்கேற்ப
ஒரு ஏலக்காய் இடித்த பொடி (பிடித்தவர்கள் மட்டும் சேர்த்துக்கொள்ளலாம்)
நெய்- இதுவும் தேவை என்பவர்கள் மட்டும் சேர்த்துக்கொள்ளலாம்)
உப்பு :- 1 டீஸ்பூன்

செய்முறை:-

இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்துவிட்டு, ஒரு பேசினில் தண்ணீர் எடுத்து (சேமியா மூழ்கும் அளவு) அதில் உப்பு சேர்த்து கலக்கி ஓரளவு சின்ன சின்னதாக நொறுக்கிய வறுத்த சேமியாவை கொட்டி 1 நிமிடத்திற்கும் குறைவாக நனைத்து, தண்ணீரை வடித்து, இட்லி தட்டில் வைத்து மூடிவிடுங்கள். சேமியா நிறைய நேரம் தண்ணீரில் ஊறக்கூடாது. சேமியா முழுவதும் ஒரு முறை நன்றாக நனைந்தால் போதுமானது.

4-6 நிமிடத்திற்குள் வெந்துவிடும். எடுத்து பேசினில் கொட்டி, சூடு குறைந்தவுடன் உதிர்த்து, தேங்காய் துருவல், சர்க்கரை சேர்த்து கலக்கி பரிமாறவும். தேவையானவர்கள் மட்டும் ஏலக்காய் பொடி, நெய் சேர்த்து கலக்கிக்கொள்ளலாம்.

அணில்குட்டி அனிதா:- இன்னும் கிட்சன்ன விட்டு வெளியில வரைலியா நீங்க...??? இந்த கொடுமைய எப்ப நிறுத்துவீங்கன்னு என்னோட சேர்த்து நிறைய பேரு வெயிட்டிங்கு அம்மணி.. கொஞ்சம் அடுத்தவங்கள பத்தியும் யோசிங்கம்மா... ம்ம்.....எங்க....???????

பீட்டர் தாத்ஸ் :- “Good painting is like good cooking: it can be tasted, but not explained”