தயவு செய்து யாரும் பயந்துடாதீங்க... எல்லாம் திரு.ரஜினிகாந்த அவர்களின் பேட்டியை சற்று முன் சன் டீவியில் பார்த்ததின் பலன்.

திரு. ரஜினி காந்த் அவரின் ரசிகர்களின் கேள்விகளுக்கு சொன்ன பதில்... என்னத்த சொல்ல... திருப்பி ஒரு உய்ய்ய்ய்ய்ய்ய்!! ..ஒன்றும் இல்லைங்க.. விசில் தான்.. விசில் அடித்தாலும் அதிகமாக சத்தம் வராது. .ஆனாலும் இன்னமும் முயற்சியை கைவிடாமல் கற்றுக்கொண்டுத்தான் இருக்கிறேன்..

சரிங்க விஷயத்துக்கு வருவோம். திரு. ரஜினிகாந்த் அவர்களின் பேச்சு எந்திரன் திரைப்பட படப்பிடிப்பு முடிந்தவுடன் அரசியலுக்குள் நுழைவதற்கான முழு சாத்திய கூறுகள் இருப்பதாக தோன்றுகிறது.

இங்கு அவரின் பதிலை பதிவாக வெளியிட்டால்.. அவரின்

ஸ்டைல்...
ஹா ஹா.. சிரிப்பின் ஸ்டைல்...
இருக்கிற கொஞ்சம் முடியை கோதிவிடும் ஸ்டைல்.....
நடக்கிற ஸ்டைல்...
பேசற ஸ்டைல்...
யோசிக்கிற ஸ்டைல்...
வியற்வையை துடைக்கிற ஸ்டைல்...

எல்லாவற்றையும் விட...

மேடையின் பின்னால் எழுதி வைத்திருக்கின்ற வாசகத்தை படிக்க... வாவ்..!! அவர் சக்கர நாற்காலி சுழட்டி பார்த்த ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்டைல்ல்ல்ல்..!!

சிவாஜி படத்தின் "ஒரு கூடை சன் லைட்... ஒரு கூடை மூன் லைட் " பாடல் நினைவுக்கு வருகிறது.....

காத்திருப்போம் திரு.ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கும் வரும் நாளை நோக்கி...ஆனால்... வருவாரா...???? வந்தால்..சுயநலம் இல்லாத அவர் பிழைப்பாரா?.. அப்படி பிழைக்கத்தான் மற்றவர்கள் விட்டுவிடுவார்களா... கண்டிப்பாக யோசிக்கவைக்கிறது...

அணில் குட்டி அனிதா:- அம்மணியோட ஆர்ப்பாட்டம் தாங்கமுடியலைங்க.. வராத விசிலை.. 8 மணியிலிருந்து இழுத்து இழுத்து அடிக்கறாங்க..எங்க..காத்துத்தேன் வருது... திருந்தமாட்டாங்க.. விட்டுத்தொலைக்கனும்..!! ஹ்ம்..கேப்பாரு இல்ல........!!!

பீட்டர் தாத்ஸ்:- 1. Kedaikkaradhu kedaikkaama irukkaadhu. Kedaikkaama irukkaradhu kedaikkaadhu
2. Naan solradha dhaan seiven, seiyaradha dhaan solluven
3. Kadamaiyayi sai palanai ethir paar.
4. Panam Janam erandaiyum one'aa vaika koodathu.. vachomnu sonna.. anga arasiyal nuzhanjidum..!!