முந்தைய பாகம் - 5

அன்று ஞாயிற்றுகிழமை முகுர்த்ததினம், மீனாவின் அம்மாவும் அப்பாவும் ஒரு திருமணத்திற்காக செல்ல முன் தினமே திட்டமிட்டு இருந்தார்கள். ரமேஷ் சனிக்கிழமையே வந்து சென்றுவிட்டான். மீனா யோசித்துவைத்தபடி செயல் பட ஆரம்பித்தாள்.

அம்மாவும் அப்பாவும் கிளம்பிய அடுத்தவினாடி வேக வேகமாக இவளும் கிளம்பினாள். 7 மாதங்கள் நிறைந்துவிட்ட நிலையில், மீனாவின் மன வேகத்திற்கு உடம்பு ஒத்துழைக்கவில்லை. மூச்சு வாங்கியது.. அவளின் உடலை கஷடத்தை பொருட்படுத்தும் நிலைமையில் அவள் இல்லை.

கிளம்பிவந்தவள் ஒரு ஆட்டோவை பிடித்து நேராக அனுஷாவின் வீட்டிக்கு வந்தாள். எப்படியும் ரமேஷ் இன்று அங்கு இருப்பான் என்று நினைத்தவள், இன்று இரண்டில் ஒன்று பார்த்துவிடவேண்டும் என்று துடிப்புடன் விரைந்தாள்.

===============

அனுஷாவின் வீடு சாத்தியிருந்தது. காலிங்பெல்லை அழுத்திவிட்டு காத்திருந்தாள். கதவை திறந்த சந்துருவிற்கு.... ஆச்சிரியம்!!.. "வாங்க...மீனா." என்றான்.

மீனாவின் முகத்தில் கோபம் தாண்டவமாடியது......உள்ளே போகாமல் "அவர் இருக்காறா?"

சந்துரு..... "அவன் வரலையே.....உள்ள வாங்க... ஏன் வெளியில நிக்கறீங்க...?"

அதற்குள் பார்வதி அம்மாவும், அனுஷாவும் யாரென்று பார்க்க வெளியில் வந்தார்கள்.

பார்வதி அம்மா மீனாவை பார்த்ததும் புன்னகையுடன் :"வாம்மா..எப்படிம்மா இருக்க...?" என்றார்கள்

அனுஷாவும் "வாங்க மீனா" என்றாள்

இதை எதையுமே சட்டைசெய்யாத மீனா... நேராக அனுஷாவை பார்த்து.. "ஏண்டி ஒன் குடும்பத்துல யாருக்குமே வெக்கம் மானம் எதுவுமே இல்லையா? அடுத்தவ புருஷன வளச்சி போட்டு வச்சிக்கிட்டு இருக்க?.. நீ தான் அவரை வச்சிக்கிட்டு இருக்கேன்னா... அதுக்கு உங்க அண்ணன், உங்க அம்மா எல்லாரும் கூட்டா? என்ன குடும்பம்டீ உங்களது....? இப்படியெல்லாம் அடுத்தவ குடியை கெடுத்து நீங்க சந்தோஷமா வாழனுமா??"

சந்துரு, அனுஷா, பார்வதியம்மா செய்வதறியாது அதிர்ந்துபோனார்கள்..

சந்துரு அங்கு நிற்காமல் உள்ளே வந்து பின்புறம் இருந்த போர்டிக்கோவிற்கு சென்று படப்படக்கும் இதயத்தை நிதானத்துக்கு கொண்டுவர முயற்சி செய்தான்...

பார்வதியம்மா.. "மீனா... எதுவாக இருந்தாலும் உள்ள வந்து பேசுமா..,,அக்கம் பக்கம் இருக்கறவங்க தப்பா நினைப்பாங்க.."

மீனா."ஓ..உங்க பொண்ணு போடற ஆட்டம் இங்க யாருக்கும் தெரியாதா.. கேட்போமே... நாலு பேருக்கிட்ட நியாயம் கேட்போம்....வரட்டும்.." என்று சுற்றி யாராவது பார்க்கிறார்களா என்று நோட்டம் விட்டாள்.

பார்வதியம்மா., நிதானத்தை வரவைத்துக்கொண்டு.."மீனா.. இப்படி கண்டபடி பேசறது சரியில்லமா.. உனக்கு என்னவேணும்னாலும் உள்ள வந்து பேசு்மா.... நீ நினைக்கறபடி எதுவும் இல்லைம்மா....நீ தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கிற......"

மீனாவின் கோபம் தறிக்கெட்டு ஓடியது........."தப்பா புரிஞ்சிக்கிட்டேனா?.. நானா? நல்லாயிருக்கு... அம்மாக்காரியே பொண்ணை இப்படி வளர்த்து வச்சிக்கிறதை இப்பத்தான் பார்க்கிறேன். .என் புருஷன் என்னை வந்து பாக்கறதோட உங்க பொண்ணைப்பார்க்க இங்கத்தான் அடிக்கடி வராரு.....ஏன்.. ???? கட்டின பொண்டாட்டி நானு , வாயும் வயிறுமா இருக்கேன்.. ஆனா.. எந்த நேரமும் அவரு இங்கத்தானே இருக்காரு... ??? " உங்க பொண்ணு அப்படி சொக்குப்பொடி போட்டு என் புருஷனை மயக்கி வச்சிக்கிட்டு இருக்கா...."

அனுஷாவும் அதற்கு மேல் நின்று மீனாவின் பேச்சை கேட்கமுடியாமல் உள்ளே சென்று கட்டுப்படுத்தமுடியாமள் அழ ஆரம்பித்தாள்...

பார்வதியம்மாவும் நிதானம் இழக்க ஆரம்பித்தார்கள் "மீனா.. நாக்கை அடக்கி பேசும்மா... ? நீ யாருன்னு கேக்கக்கூட என் பொண்ணுக்கு எல்லா உரிமையும் இருக்கு.....நீ வாழற இந்த வாழ்க்கை அவ உனக்கு கொடுத்தது.. அவள பத்தி தப்பா பேசினா உனக்கு நல்லது இல்லைம்மா...."

"ஓ நான் யாருன்னு கேப்பாளா? எங்க கேக்க சொல்லுங்க! இன்னைக்கு ஒன்னுல இரண்டு எனக்கு தெரிஞ்சாகனும்.. அவருக்கு நான் பொண்டாட்டியா இல்ல உங்க பொண்ணு... பொண்டாட்டியான்னு ..தெரியாம இங்க இருந்து போகமாட்டேன்...."

"மீனா.... உள்ளவாம்மா .இப்படி எங்களை வெளியில இருந்து பேசி அசிங்கபடுத்தாத...." பார்வதியம்மா திரும்பவும் அவளை உள்ளே அழைத்தார்கள்.

"உங்க குடும்பத்தை பத்தி அக்கம் பக்கம் இருக்கறவங்க தெரிஞ்சிக்கட்டும்... அடுத்தவ புருஷன உங்க பொண்ணு வச்சிக்கிட்டு இருக்கான்னு எல்லாருக்கும் தெரியட்டும்.. அப்பத்தான் அந்த வீட்டு பொம்பளைங்க தன் வீட்டு ஆம்பளைய பத்திரமா வச்சிக்குவாங்க..."

பார்வதியம்மாவின் கண்கள் குளமாயின.........."என் பொண்ணு தினம் தினம் மனசால செத்துக்கிட்டு இருக்கா... அவள இப்படி பேசிறியே.. நீ வாழற வாழ்க்கை அவ கொடுத்தது............அவ இப்ப நினைச்சாக்கூட ரமேஷ்ஷை உன்கிட்ட இருந்து பிரிக்கமுடியும்.. ஆனா அவத்தான் உன்னை இன்னமும் அவனோட வாழவச்சிக்கிட்டு இருக்கா.. இதுக்கு மேல இங்க நின்னு பேசாத.... உன் புருஷனை இங்க வாராம நீ பாத்துக்கோ...என் பொண்ணு இப்படித்தான் இருப்பா என்ன செய்யனுமோ செய்துக்கோ " என்றார்கள்.

சந்துரு அம்மா தடுமாறுவதை கவனித்துவிட்டு வேகமாக வந்தான்... ..! "மீனா.. !! நீங்க உள்ள வந்து பேசினா பேசுங்க இல்லைன்னா கிளம்புங்க... இப்படி நடந்துகிறது சரியில்லைங்க..." என்று சொல்லிவிட்டு அம்மாவை பார்த்து... ."அம்மா நீங்க உள்ள வாங்க" என்றவன்.. அம்மாவை இழுத்துவந்து உள்ளே விட்டுவிட்டு... வெளியில் சென்று கதவை மூடிவிட்டு...

மீனாவிடம் கொஞ்சம் அதட்டலாக குரலை உயர்த்தி .. "வாங்க ......... நீங்க இப்படி நிதானம் இல்லாமல் பேசறது உங்க உடம்புக்கு தான் நல்லது இல்லை. ரமேஷ் இனிமே இங்க வரமாட்டான், வராம நான் பார்த்துக்கிறேன்.. முதல்ல கிளம்புங்க " என்றான்..

அவளை வெளியே வரும்படி செய்ய தானும் அங்கிருந்து வேகமாக நடந்து வெளியே வந்தான்... மீனா சந்துரு உயர்த்திய குரலுக்கு கொஞ்சம் பயந்துதான் போனாள். அவனை பின் தொடர்ந்து எதுவும் பேசாமல் அவனை தொடர்ந்து நடக்க ஆரம்பித்தாள். சந்துரு பக்கதிலிருந்த ஆட்டோ நிறுத்ததிற்கு வந்து அவளுக்கு ஒரு ஆட்டோவை பிடித்து சைகையால் ஏறசொன்னான்.

மீனா ஏறியவுடன் அவனும் ஆட்டோவில் ஏறினான். சந்துரு எதுவும் பேசாமல் பார்வதி அம்மாவை மொபைலில் அழைத்தான், "அம்மா, மீனாவை வீட்டுல விட்டுட்டு வந்துடறேன்.. "

".........................."

"சரிம்ம்மா....."


"................."

"ம்ம் சரிம்மா......"


மீனாவிற்கு அவன் எதற்கு சரியென்று சொல்லுகிறான் என்று புரியவில்லை... சத்தம் போட்டு பேசியதில் அவள் உடம்பும் மனதும் ரொம்பவும் தளர்ந்து போய் இருந்தது. ஆட்டோவில் அப்படியே சாய்ந்து உட்கார நினைத்தவள் அவளை அறியாமல் மயக்கமானாள். பக்கதிலிருந்த சந்துரு...என்ன செய்வது என்று அறியாமல் ஆட்டோக்காரரை ஏதாவது ஆஸ்பித்திரியில் நிற்க சொன்னான்.

ஞாயிற்று க்கிழமை என்பதால் பார்க்கும் ஆஸ்பித்திரிகள் எல்லாம் மூடி இருந்தன. எப்படியோ அங்கும் இங்கும் சுற்றி ஒரு 24 மணி ஆஸ்பித்திரியை அடைந்து மீனாவை நர்ஸ்'கள் உதவியுடன் உள்ளே அழைத்து சென்றான். அனுஷாவிற்கு போன் செய்து அவளை உடனே வர சொன்னான். ரமேஷ்க்கும் போன் செய்து ... எதையுமே சொல்லாமல். .அவன் மட்டும் அங்கு இருப்பது போல் சொல்லி வரவைத்தான்

அனுஷா முதலில் வந்து சேர்ந்தாள், சந்துருவும் அனுஷாவும் மீனாவின் பக்கத்திலேயே பதட்டத்துடன் நின்றிருந்தார்கள். மீனாவை பரிசோதித்த டாக்டர் "ஒன்றும் பயப்பட அவசியமில்லை. லோ பிபி, அதான் மயக்கம், தேவையான சிகச்சை கொடுத்துவிட்டோம். சரியாயிடுவாங்க கூட்டிட்டு போகலாம்" என்றார்கள்.

ரமேஷ் ஆஸ்பித்திரி வந்தவுடன், சந்துருவை போனில் அழைத்து எங்கிருக்கிறான் என்று தெரிந்துகொண்டு வந்தவனுக்கு, மீனாவை பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. மீனா எங்கிருந்து இங்கு வந்தாள்? ஒன்றும் புரியாமல் சந்துருவை பார்க்க...

."......இல்லடா.. நீ எங்க வீட்டுல இருக்கன்னு நினைச்சு வந்தாங்க... நீ இல்லைன்னு சொன்னவுடன் கிளம்பிட்டாங்க ,....ஆட்டோடல ஏத்திவிட்டேன்... நானும் தான் கூட வந்தேன்.. ஆட்டோல வந்துக்கிட்டு இருக்கும் போது மயக்கமாயிட்டாங்க. .அதான்........:

அனுஷாவை சாடையாக பார்த்துவிட்டு, மீனாவின் அருகில் சென்ற ரமேஷ்.. மெதுவாக "மீனா..........என்று அழைத்தான்....கட்டிலில் அமர்ந்து அவளின் உள்ளங்கையை தன் கையுடன் கோர்த்துக்கொண்டு.. ..திரும்பவும் "மீனா..என்று அழைத்தான்...

அதுவரை அங்கு நின்றுக்கொண்டிருந்த அனுஷா..... அதற்குமேல் அங்கு நிற்கமுடியாமல்..வெளியே வந்துவிட்டாள். அவளை தொடர்ந்து சந்துருவும் வெளியே வர...

அனுஷா சந்துருவிடம்..." சரி வீட்டூக்கு போறேன். .அதான் ரமேஷ் வந்தாச்சு இல்ல.. நீ இருந்து வீட்டுல விட்டுட்டு வா.... ரமேஷ்க்கு எதுவும் தெரியவேண்டாம்.. " என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பாராமல் கிளம்பினாள்.

மீனா கண்விழித்து ரமேஷ்'ஷை பார்த்தாள், பக்கதிலிருந்த சந்துருவையும் பார்த்தாள். சந்துரு ரமேஷ்ஷின் பின்னால் இருந்து மீனாவிற்கு "எதுவும் ரமேஷ்க்கு தெரியவேண்டாம் என்று ...." கண்களால் சைகை செய்தான்... மீனாவும் புரிந்துக்கொண்டாள்..சந்துருவை நன்றியுடன் பார்த்தாள்.

ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு அங்கிருந்து மூவரும் ஒரு கால் டாக்ஸி பிடித்து மீனாவின் வீட்டிற்கு வந்தார்கள். அதுவரையில் மாமனார் மாமியார் வந்திருக்கவில்லை.

ரமேஷ்ஷை தனியே அழைத்த சந்துரு.. "மீனாவிடம் ஏன் எங்கவீட்டுக்கு வந்தான்னு கேட்டு வைக்காதே.. அப்படியே விடு.. அவங்களுக்கு உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு. .இப்ப தேவையில்லாம எதுவும் பேசி பிரச்சனை வேண்டாம்.." என்றான்..

ரமேஷ்.. அமைதியாக.. என்ன நடந்தது என்று எதையும் ஊகிக்கமுடியாமல் "ம்ம்ம்..சரி.." என்று சொல்லிவைத்தான்.

===================

மாமனார் மாமியார் வந்தவுடன், ரமேஷ்ஸும், சந்துருவும் கிளம்பினார்கள்....

ரமேஷ் ..சந்துருவின் வீட்டிற்கு இருவரும் செல்லலாம் என்று சொல்ல...... சந்துரு.. அவர்களின் இத்தனை வருட நட்பில் முதன் முறையாக...

ரமேஷ்.. "இனுமே நீ வீட்டுக்கு வரவேண்டாம்டா................."

"........................."

"வேண்டாம்டா.... எல்லாரும் சந்தோஷமா நிம்மதியா இருக்கனும்னா.. நீ வராம இருக்கறது நல்லதுடா....."

ரமேஷ், சந்துருவை ஆழமாக ஒருமுறை பார்த்துவிட்டு "சந்துரு நீ கிளம்பு நாம அப்புறம் பேசலாம்...."

இருவரும் வேறு வேறு திசையில் நடக்க ஆரம்பித்தார்கள்...............

நிழல் தொடரும்........................