முந்தைய பாகம்…4.

அனுஷா வெளியில் வருவதை பார்த்ததும் ரமேஷ்ஷிற்கு நெஞ்சு படப் படவென அடிக்க ஆரம்பித்தது……என்ன சொல்ல போறாளோ… பதட்டத்தை வெளியில் காட்டாமல் நின்று அவளையே பார்த்துக்கொண்டு நின்றான்….

தொலைவில் இருந்தே ரமேஷ்’ஷை பார்த்துவிட்ட அனுஷா…. சடன் பிரேக் போட்டது போன்று நின்றாள்.. முகம் இறுகியது… வேகமாய் மொபைலை எடுத்து சந்துருவை அழைக்க எண்களை அழுத்தினாள்….

================
சந்துரு அலுவலகத்தில்… ஸ்விட்ச் ஆப்ஃ செய்து வைத்து இருந்த மொபைலை பார்த்து அதையே அனுஷாவாக நினைத்து பேசிக்கொண்டு இருந்தான்…..……. “ம்ம்.. ட்ரை பண்ணு! ட்ரை பண்ணு….! எவ்வளவு பண்ணாலும் நான் லைன்ல வரமாட்டேனே….!!! ஆனா நீயும் விடமாட்டியே……. லேண்ட் லைன் வருவ………. அங்கேயும் சொல்ல்ல்லி வச்சிட்டோமில்ல……”

“சந்துரு….. “ ரிசப்ஷனிஸ்ட் இவன் கேபினை நோக்கி வந்துக்கொண்டு இருந்தாள். என்ன சந்துரு…நீ சொன்னமாதிரியே கரெக்ட்டா அக்கா ஃபோன் பன்றாங்க? “

“நான் சொன்ன மாதிரி ரிப்லை பண்ணியா? “ ….

“ம்ம்..பண்ணேன்.. ஆனா எப்ப மீட்டிங் விட்டு வருவான்? எவ்வளவு நேரம் ஆகும்…. நீங்க கூட பேசமுடியாதான்னு கேட்டாங்க?........”

“அவ கிடக்கிறா விடு…” என்று சிரித்தான்….

இங்கே அனுஷா, சந்துரு லைனில் கிடைக்காத எரிச்சல், ரமேஷ்ஷின் வரவு எல்லாம் சேர்த்து கோபத்தின் உச்சியில் இருந்தாள். ரமேஷ் சற்றும் எதிர்பார்க்காதவாறு விடுவிடுவென்று அவனை தாண்டி சென்று ஆட்டோவை கைக்காட்டி நிறுத்தி ஏறிவிட்டாள்.

ரமேஷ் உடனே சந்துருவிருக்கு ஃபோன் செய்தான்…..

“நீங்கள் அழைக்கும் வாடிக்கையாளர் எண் இப்போது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது….”

அடச்சே!!... சந்துரூஊஊ ஏன்டா இப்படி பண்ற….????…..வேகமாக லேண்ட் லைன் ட்ரை செய்தான்….……
===================

“டேய் வெண்ண… ஏண்டா மொபைல ஆஃப் பண்ணி வச்சி இருக்க….??

“அட இங்கபாருடா….! டேய் நீதானடா… அனு என்னை கூப்பிடக் கூடாதுன்னு ஆஃப் பண்ணி வைக்க சொன்ன…..??? இப்ப ஏண்டா வில்லன் மாதிரி கேள்வி கேக்கற? சரி மேட்டர சொல்லு ஏன் இவ்வளவு டென்ஷன் ?… திட்டினாளா?

“திட்டி இருந்தா பரவாயில்லையேடா….. கண்டுக்காம ஆட்டோல போய்ட்டாடா…??? “

“ஓஒ…… கண்டுக்களையா…? ஹா…ஹா…ஹா….இப்பத்தான் சந்தோஷமா இருக்கு…சரி அப்படியே திரும்பி உன் வீட்டுக்கு போய் வேலைய பாரு .!! போனை வச்சிடு ராசா…!!

“இல்ல இப்ப உன் வீட்டுக்கு போய் இரண்டுல ஒன்னு கேட்டுட்டு தான் இன்னைக்கு மறுவேலை…. ..!! “

“தெரியுமே...... நீ மட்டும் திருந்திட்டன்னு வையேன்….. எனக்கு எப்பவோ கல்யாணம் ஆகியிருக்கும் நீயும் திருந்தாம… அவளையும் திருந்த விடாம உங்க இரண்டு பேரால எனக்கு இந்த ஜென்மத்துல கொழந்த இல்ல…இல்ல இல்ல…இல்லவே இல்ல..…. !! ம்ஹிம்… நல்லாயிருடா.. நல்லாயிரு…..”

“ம்ம்…உனக்கு கல்யாணம் ஒரு கேடு…!! தங்கச்சிக்கு கல்யாணம் பண்ண வழியில்ல…..உன் கல்யாணத்த பத்தி பேச வெக்காம இல்ல உனக்கு !! இதுல கொழந்த வேற….இடியட்….வைடா ஃபோனை..!! “

லைனை துண்டித்துவிட்டு கடுப்பாக வண்டியை உதைத்து கிளப்பினான்…. அனுஷாவின் வீட்டை நோக்கி வண்டி பறந்தது.
==================

உள்ளே வேகவேகமாக நுழைந்த ரமேஷ்…..”ஆண்ட்டி எங்க அவ…??

“இன்னும் வரலையே…….. வாங்க எப்படி இருக்கீங்க… மீனா எப்படி இருக்காங்க? “

“இன்னும் வரலையா…எனக்கு முன்னே கிளம்பினாளே? …….”

“உங்களுக்கு முன்னையா? ….” எப்படி எங்கே என்று தெரியாமல் விழித்தார்கள் பார்வதியம்மா…

பெருமூச்சி விட்டவாறு சோபாவில் தொம் என்று உட்கார்ந்தான் ரமேஷ்..

பார்வதியம்மா அவனுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்கள். “என்னப்பா ஆச்சு… அவ ஆபிஸ்’க்கு போனீங்களா? “

“ம்ம்….போனேன்.. என்கூட வராம.. ஆட்டோல ஏறிட்டா….ஆன்ட்டி….”

“ஓ….வந்துடுவா.. டிராஃபிக் அதிகமா இருக்கு இல்ல……… “சொல்லிவிட்டு சமையல் அறையுள் சென்றுவிட்டார்கள்.

ரமேஷ்’ஷின் கண்கள் .டிவி’யை பார்த்தனவே தவிர.. மனசு அனுஷாவையே சுற்றி சுற்றி வந்தது……..

15 நிமிடங்கள் சென்றிருக்கும் அனுஷா வந்தாள்…. இவனை கண்டும் காணாமல் ரூமிற்குள் சென்றாள்.

ரமேஷ் வேகமாக எழுந்து “நில்லு அனுஷா… நான் ஒருத்தன் இருக்கறது உனக்கு கண்ணு தெரியல.. ஆபிஸ்’ ல நான் உனக்காத்தான் நிக்கிறேனு தெரிஞ்சும் ஆட்டோல வர.. ..என்னை பாத்தா கேனயன் மாதிரி தெரியுதா உனக்கு……….?.”

அனுஷா நிற்காமல் ரூமிற்குள் சென்றுகொண்டு இருந்தாள். இவனும் கத்தியவாறே பின்னால் சென்றான்.

“நில்லுடி….!! “

நின்று நிதானமாக திரும்பி, “எதுக்கு வந்தீங்க நீங்க? உங்களை வரக்கூடாதுன்னு சொன்னேன் இல்ல? “ உங்களுக்குன்னு ஒரு குடும்பம் வந்தாச்சு இல்ல ..இங்க என்ன வேலை உங்களுக்கு… கிளம்புங்க..” என்றாள்.

..............

இருந்த கோபம் இன்னும் தலைக்கு ஏறியது……..அவளை நேருக்கு நேர் பார்த்தவனாக மூச்சை நன்கு இழுத்துவிட்டு கோபத்தை அடக்க முயற்சி செய்தான்…..

“….அப்ப நான் இங்க வரக்கூடாது இல்ல?

“ஆமா வரக்கூடாது……”

“வருவேன்னு உனக்கு அன்னைக்கே சொல்லிட்டேனே….”

“நானும் வரவேண்டாம்னு அன்னைக்கே சொல்லிட்டேனே…….”

“அனு……. கல்யாணம் செய்துக்கறேன்னு சொல்லு….. நான் வரத நிறுத்திக்கிறேன்……

“கல்யாணம் ஒன்னுத்தான் முடிவுன்னு நீங்க நினைக்கறீங்க….அது தான் உங்களுக்கு சந்தோஷம்.. ..என்னால வேற ஒரு ஆளை கல்யாணம் செய்துக்க முடியாது…. ……கல்யாணம்னு பேசறதா இருந்தா இங்க வராதீங்க… என்னை பார்க்காதீங்க.. ……..

‘புரியமா பேசாத.. .கனவுலையும் கற்பனையிலும் காதல் வேணும்னா சுகமா இருக்கும்.. ஆனா வாழ்க்கை முழுசும் சுகமா இருக்காது.. .நரகமா ஆயிடும்…. எனக்கு தான் கல்யாணம் ஆயிடிச்சின்னு வராதன்னு சொல்ற இல்ல, கல்யாணம் ஆனா என்னை ஏன் இன்னும் நினைச்சிட்டு இருக்க ? ....அது உனக்கு தப்பா தெரியலையா?

ரமேஷ்’ஷின் இந்த எதிர்பாராத கேள்வி அனுஷாவை தட்டு தடுமாற வைத்தது…….. மனசு உடைய தொடங்கியது.............“உங்க கூட என்னோட வாழ்க்கைதான் இல்லைன்னு ஆயிடுத்து……உங்களை நினைக்கக்கூட எனக்கு உரிமை இல்லையா….” பரிதாப குரலில் அவனை நேராக பார்த்து கேட்டாள்…..

அவளின் பார்வையை சந்திக்க இயலாதவனாய்.. பேச்சற்று சோர்ந்து வெளியில் வந்தான்…..

பார்வதியம்மாவிற்கு கடந்த பல மாதங்களாய் இவர்களின் இந்த பேச்சும் சண்டையும் பழகிபோயிருந்தது. அவர்கள் சமையல் அறையை விட்டு வெளியே வரவேவில்லை.

ரமேஷ் சோபாவில் சோர்வாக செய்வது அறியாது உட்கார்ந்து இருந்தான். சற்று நேரத்தில் சந்துரு வந்து சேர்ந்தான். இவன் முகத்தை பார்த்தே ஏதோ நடந்திருக்கிறது என்று ஊகித்தவன் சத்தமில்லாமல் ரமேஷ்ஷை அழைத்துக்கொண்டு அவன் ரூமிற்குள் சென்றான்.

“நான் தான் உன்னை வீட்டுக்கு போன்னு சொன்னேன் இல்ல ஏண்ட கேக்க மாட்ற? .. அவளோட பிடிவாதத்தை பத்தி உனக்கு நல்லா தெரியும் இல்ல.. “

“சந்ரூ.. அதுக்காக என்னை மட்டும் பாத்துக்கிட்டு அவள அப்படியே விட்டுவிட முடியுமா?”

“நான் அவளோட அண்ணன்டா நானே சொல்றேன் இல்ல…. உனக்கு கல்யாணம் ஆயிடுத்து, உன்னோட லைஃபை பாரு… மீனாவை நல்லா பாத்துக்கோ……… நாம நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னு… ஆனா அதுக்காக அதையே பேசிக்கிட்டு இருந்தா மேல ஒன்னுமே நம்மளால செய்ய முடியாதுடா.. .அனுவை விடு நான் பாத்துக்குறேன். . அவளுக்கு வாழ்க்கைய பத்தி தெரியல…புரியல. தனியா இருக்க முடியும்னு நம்பறா… கொஞ்சம் கொஞ்சமா நானும் அம்மாவும் மாத்தறோம். நீ இப்படி அவளுக்காக இன்னமும் உன்னை ஏண்டா கஷ்டபடுத்திகற…..? “

அவளோட வாழப்போறேன்னு சொல்லி அவளை நான் ஏமாத்திட்டேன்டா. ராத்திரி படுத்தா நிம்மதியா தூக்கம் வரல.. இந்த பொண்ணோட நினைப்புத்தான். எப்படிடா நிம்மதியா இருக்க முடியும்..?

ரமேஷ்..கூல்.. எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான்… சரியாயிடும்.. அவள மாத்திடலாம்… நீ அவக்கிட்ட இனிமே கல்யாணத்தை பத்தி பேசாதே… விட்டுடு. .அவளுக்கு கொஞ்சம் டைம் கொடு… பாக்கலாம்….

=======================

நாட்கள் ஓடின …………மாதங்களாக மாறின….அனுஷாவின் பிடிவாதம் மாறவில்லை… ரமேஷ்’ அவர்கள் வீட்டுக்கு சென்று வருவதையும் நிறுத்தவில்லை. எப்படியாவது அவளை மாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் தினம் தினம் அவளுடன் இதைப்பற்றி பேசி பேசி தோற்றுபோனான். நடுவே வாரம் ஒருமுறை மீனாவையும் சென்று பார்த்துவந்தான். இல்லையென்றால் மாமனார் கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுவாரே.

ஆனால் அங்கே மீனாவுக்கு, ரமேஷ் மீதிருந்த சந்தேகம் தீராமல் நாளுக்கு நாள் அதிகமானது……. தன்னை வந்து பார்ப்பதைவிட அனுஷாவை அவன் தினமும் அவன் சென்று பார்ப்பது அவளை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியது. எல்லையற்ற கோபத்திற்கும் எடுத்து சென்றது. தன் கணவனை தனக்கு மட்டுமே சொந்தமாக்க வேண்டும் என்ற எண்ணம் தீவிரமானது. அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த மீனா யாருமே எதிர்பார்க்காமல் அத்தனை பேரும் அதிர்ச்சியாகும்படி ஒரு வேலையை செய்தாள்………..

நிழல் தொடரும்……..