முந்தைய பாகம் ......

இரண்டு நாட்கள் மீனாவுடன் மெளனமும், முறைப்புமாக கடந்தது. மாமானார் எப்போது ஃபோன் செய்வார் என்று ஒருவித தவிப்போடும் அவரசத்தோடும் இருந்தான் ரமேஷ்.......

அழைப்பும் வந்தது...... அலுவலகத்தில் இருந்தான்... மாமனார் சாப்பாட்டு நேரம் தெரிந்து சரியாக அழைத்திருந்தார். வேக வேகமாக அலுவலகத்தை விட்டு வெளியில் வந்து பேசினான்.

"சொல்லுங்க மாமா"

"நாளைக்கு வரோம் மாப்பிள்ளை....."

"மீனாவை கூட்டிட்டு போகத்தானே........." சந்தேகத்தோடு இழுத்தான்...

"..ஆமாம்மாப்பிள்ள... சுகுணாக்கிட்ட பேசிட்டேன்.. மீனாவ நம்மக்கூடவே பிரசவம் வரைக்கும் வச்சி இருந்தா நல்லதுன்னு ஜோசியர் சொன்னாருன்னு சொன்னேன்... அவங்களும் ஒருவழியா சம்மதம் சொல்லிட்டாங்க.. அதனால நாளைக்கு வரோம்....."

"மாமா.. நான் ஆபிஸ்ல இருக்கும் போதே வந்துடுங்க......எனக்கு வீட்டுல இருந்து ஃபோன் பண்ணி சொல்லிடுங்க..."

"அது நல்லா இருக்காது.. நாங்க காலையிலேயே வரோம்..ஆனா நீங்க வந்த பிறகு சொல்லிட்டு கிளம்பினா தான் சுகுணாக்கு மனசு திருப்தியா இருக்கும்....... நீங்க வீட்டுல இல்லாதப்ப கூட்டிட்டு வந்தா நல்லா இருக்காதுங்க......"

".............ம்,,ம்..சரிங்க மாமா...மீனா நிம்மதியா இருக்கனும் அவ்வளவுதான்....."

"நாளைக்கு பாக்கலாம் மாப்பிள்ள, நான் வச்சிடட்டுமா......? "...

"ம்ம்..."

ஃபோனை கட் செய்துவிட்டு நிம்மதி பெருமூச்சு விட்டான்...இரண்டு நாளாக இருந்த டென்ஷன் ஒரு வழியாக குறைந்தது.......அடுத்த மணித்துளி அனுஷா'வின் நினைவு வந்தது........குறைந்த டென்ஷன் திரும்பவும்............

==========

அடுத்த நாள் அலுவலகத்தில் இருக்கும் போதே மீனாவுக்காக வேண்டி, மாமனார் ஒருமுறை இவன் செல்'லில் அழைத்து தாங்கள் வீட்டுக்கு வந்திருப்பதாகவும் மீனாவை அழைத்து செல்ல போவதாகவும் அனுமதி கேட்டார். இவனும் புரிந்து கொண்டு அவருக்கு தகுந்தார் போன்று பேசி விஷயத்தை முடித்திருந்தான்.

அலுவலகம் விட்டு வீட்டுக்குள் நுழையும் போதே மாமியாரின் குரல் கேட்டது..... "மீனா...எதையும் மறக்காம எடுத்து வச்சிக்கிட்டையா... வீட்டுக்கு வந்த பிறகு அதை விட்டுட்டு வந்துட்டேன் இதை விட்டுட்டு வந்துட்டேன்ன்னு.. சொல்லாத ..."

மாமனார் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டு இருந்தார். ரமேஷ்'ஐ பார்த்ததும் எழுந்து "வாங்க மாப்பிள்ள....." என்று புன்முறுவல் செய்தார்.. "ம்மா...சுகுணா..மாப்பிள்ள வந்துட்டார் பாரு........என்று உள்ளே பார்த்து குரல் கொடுத்தார்.

மாமியார், பின்னால் மீனா தொடர வெளியில் வந்தார்கள். "வாங்க மாப்பிள்ள...எப்படி இருக்கீங்க...??? செளக்கியமா?.. "

"வாங்க....நல்லாயிருக்கேன்ங்க....." என்று புன்முறுவலுடன் சொல்லிவிட்டு வேகமாக உள்ளே சென்றுவிட்டான்.

"மீனா அவருக்கு குடிக்க ஏதாது கொடு.. ....என்ற அம்மாவிடம் "போம்மா..நீயே போய் கொடு..." என்றாள்..மீனா.

"என்ன பொண்ணும்மா நீயி...".என்று முனகியவாரே அவரே சென்று ரமேஷ்'க்கு காபி கலந்து வந்தார்கள். அதற்குள் உடை மாற்றி வந்த ரமேஷ் , ஹாலில் மாமனாருடன் பேச அமர்ந்தான்.....

மாமனார் தொடங்கினார் "மாப்பிள்ள நாங்க ரெடியா இருக்கோம்..நீங்க வரட்டுமேன்னு வெயிட் பண்ணோம்... நாங்க கிளம்பரோமே.. .நேரம் ஆச்சி ரொம்ப டிராஃபிக் அதிகமா இருக்கு ..போய் சேர ரொம்ப நேரம் ஆயிடும்.. மாசமா இருக்க பொண்ண ரொம்ப ராத்திரியல கூட்டிட்டு போறது நல்லது இல்ல......"

"சாப்பிட்டிட்டு போலாமே......? என்றான் ரமேஷ்..

"இல்லைங்க ரொம்ப நேரம் ஆயிடும்...." என்றார் மாமியார்...

"சரி..கிளம்புங்க.. நான் வரணுமா..?....டிரைவர் புதுசா இருக்காறே... ??"

"பழைய டிரைவர் இன்னைக்கு வர முடியலைன்னு சொல்லிட்டாரு.. இவரு அவர் அனுப்பி வைச்ச டிரைவர் தான் ஒன்னும் பயமில்ல..."

"அப்ப சரி... " என்ற ரமேஷ் மீனாவை பார்த்தான்... அவளின் முகத்தில் சந்தோஷமோ சோகமோ எதுவும் இல்லை.. விரக்தியாக இருப்பதை போன்று இவனுக்கு தோன்றியது.

எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.

"மீனா இங்க வா.. என்று அழைத்த ரமேஷ்... அவளின் கையை பிடித்து லேசாக இழுத்தவாறு ரூமிற்குள் சென்றான். ..நேரத்திற்கு ஒழுங்கா சாப்பிடு நான் வாரம் வாரம் வரேன்... எதையும் போட்டு குழப்பிகாத ...எல்லாம் சரியா ஆயிடும்... சந்தோஷமா இரு..அப்பத்தான் நம்ம குழந்தை நல்லா பிறக்கும்.. சரியா..?..." என்றான்..

"மீனா.. அவனின் கையை விடுவித்து......"நான் சந்தோஷமா இருக்கேனோ இல்லையோ.. நீங்க இருப்பீங்க.. ஏன் என்னன்னு கேட்க இனிமே யார் இருக்கா இங்க... " அவள் கண்கள் குளம் ஆனாது....

"கிளம்பும் போது அழாத.... உங்க அப்பா அம்மா தப்பா நினைக்க போறாங்க... நீ நினைக்கற மாதிரி எதுவும் நடக்காது.. ... உடம்பை பாத்துக்கோ... " என்று அவளின் கண்களை துடைத்துவிட்டு வெளியே அழைத்து வந்தான்.

மீனாவின் மனமும் முகமும் கொஞ்சம் மலர தொடங்கியது........ அதோடு அவர்களை வழி அனுப்பிவிட்டு..... அனுஷாவை பற்றி யோசிக்கலானான்.

==========

ஒரு வருடமா இரண்டு வருடமா...? 6 வருடம்.. அனுஷாவை தவிர யாரையுமே நினைத்துக்கூட அவன் பார்த்தது இல்லை.... அவளும் அப்படித்தான்.. இன்னமும் அப்படித்தான் இருக்கிறாள்.. அவனின் தேவதையாக தான் இருந்தாள்... நினைவிலும் நிஜத்திலும் எப்போதும் அவனுடனே இருந்தாள்... ஆனால் இப்போது ....எப்படி நாம் நினைத்தது திட்டம் போட்டு இப்படித்தான் இவளுடன் தான் தன் வாழ்க்கை என்பது நடக்காமல் அப்படியே வேறு விதமாக நடந்துவிட்டது..? இதை "இது தான் விதி" என்று நினைத்துக்கொள்ளலாமா. .இல்லை இவளுடன் தான் என்னுடைய வாழ்க்கை என்று யாரோ எப்பவோ திட்டமிட்டுவிட்டார்களா? அப்படி நம் வாழ்க்கையை நிர்ணயிக்க அவர்கள் யார்?...

தன்னையே நம்பி மனைவியாகிவிட்ட மீனா.. ?? அவளும் பாவம் தானே.... வேண்டாம் வேண்டாம் என்று சொன்ன பிறகும் உன்னை போன்ற உண்மையானவன் எனக்கு கிடைக்க மாட்டான் என்று விடாப்பிடியாக நின்று திருமணம் செய்து கொண்டு இப்போது நிம்மதி இல்லாமல் இருக்கிறாள்...எப்படி அவளை சந்தோஷமாக வைத்துக்கொள்வது.?

எல்லாவற்றிக்கும் மேல் வாழ்க்கையின் ஒரே ஆசை, தான் காதலித்த பெண்ணை வாழ்க்கை முழுதும் பக்கத்தில் வைத்து கொள்ளவேண்டும் என்று நினைத்தவன் இப்போது இல்லாமலேயே போன் இந்த் வாழ்க்கை.. "நிம்மதியே நீ எங்கே?" என்று கேட்கும் படி ஆகிபோய் விட்டது.


ரமேஷ்'ஷின்... நினைவுகள் மீனாவையும் அனுஷாவையும் மாறி மாறி அசைப்போட்டுக்கொண்டே இருந்தது. நினைவுகளுடனே சாப்பிடக்கூட மறந்து உறங்கிபோனான்....

========

காலையில் சீக்கிரம் எழுந்தான்...சந்துருவை அழைத்தான்.... .."மச்சி அனு எப்படி இருக்காடா... வீட்டுக்கு தான் கிளம்பரேன்..."

" நீ ஒன்னும் வரவேணாம் ஆபிஸ்க்கு போற வழிய பாரு.. .இத்தனநாளா எப்படி கூட்டிட்டு போனேனோ அதே மாதிரி நானே அவளை ஆபிஸ்ல டராப் பண்றேன்... ஈவினிங் வேணும்னா போய் பிக்கப் பண்ணு.. ஆனா தெய்வம் என்ன சொல்லுமோ நீயே அதையெல்லாம் மேனேஜ் பண்ணிக்க்கோ..நீயாச்சி தெய்வமாச்சு ..." ...

"ம்ம்..சரி.. நான் பாத்துக்குறேன்.. நான் வருவேன்னு அவகிட்ட நீ சொல்லாத.."

"ரொமப தேவடா எனக்கு..போட போ... உஙக ரெண்டுபேரு சகவாசமே எனக்கு வேணாண்டா.....அது ஒரு தெய்வம்.. .நீ ஒரு வேலவெட்டி இல்லாத ஜென்மம்..... ஏதோ தங்கச்சியாச்சே அண்ணன் கடமைய செய்யணுமேன்னு கூட்டிட்டு போய் விடறேன்... அதோட என் வேல முடிஞ்சிது......."

"டேய் ஓவரா பேசற...நிறுத்திக்கோ........"

"டேய் வென்று.. !! நீ முதல்ல நிறுத்துடா ......நாங்க அப்புறம் ஆட்டோமேட்டிக்கா நிறுத்திக்குவோம்..... " ஹாஆ.. இங்க தெய்வம் நோட்டம் விடுதுடி.. மாட்டினா... அட்வைச் பண்ணியே காலங்ககாத்தால என்னை சாகடிப்பா.... கட் பண்ணிக்கோடா என் கண்ணு....!! ! "....

=========

அன்று மாலை, ரமேஷ் சரியான நேரத்திற்கு, அனுவின் ஆபிஸ் வாசலில் நின்றான்...... அனு எப்படி ரியாக்ட் பண்ணுவா? என்று யோசித்தவாறே நின்று அவள் வரும் வழியையே பார்த்துக்கொண்டு இருந்தான்...

அனுஷாவும்...வந்தாள்.........

நிழல் தொடரும்......