அலுவலக வேலையாக பெங்களூர் செல்ல வேண்டி இருந்தது. என் நெருங்கிய நண்பர் அங்கு தான் இருக்கிறார். இருவரும் சந்தித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டுன. போகும் முன் எங்கு இறங்க வேண்டும், எங்கு என்ன சாப்பிடவேண்டும், ஆட்டோவிற்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று ஒவ்வொன்றையும் அவரிடம் கேட்டு தெரிந்துகொண்டேன். லேப்பியை பத்திரிமாக எடுத்துவாங்க, ரயிலில் திருடி விடுவார்கள் என்றார், இது மட்டுமே அன்றைய பயணத்தின் போது இரவு முழுவதும் தூக்கம் வராமல் போனது, கழிவறை செல்ல கூட பயந்து எப்படியோ போய் சேர்ந்தேன்.

இதில் ரயில் ஏறியவுடன் எனக்கு ஒரு மிஸ் கால் கொடுங்க, இறங்கியவுடன் எனக்கு ஒரு மிஸ் கால் கொடுங்க.. நடுராத்தியில் போன் செய்து ரயில் எங்கு வந்துகொண்டு இருக்கிறது? பத்திரமாக இருக்கீங்களா? தூங்கறீங்களா?.. அய்யோ ஜனா.. ??? வந்து விடுகிறேன்..உங்களிடம் நான் பெங்களூர் வருகிறேன் என்று சொன்னது தப்பாகிவிட்டதா..? இது தான் என் தோழன்..:))) அன்பை பொழிந்து போதும் ..!! போதும் என்று சொல்லும் அளவுக்கு ஆக்கிவிடுவார்.

காலையில் அங்கு சேர்ந்துவிட்ட என்னை விமானத்தில் வந்து சேர்ந்த என் முதலாளி காருடன் வந்து அழைத்து சென்றார். நேராக அவரின் சொந்தகாரர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கே எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. 85 வயதான அவரின் ஆன்ட்டி ஒருவர் தனியாக ஒரு வீட்டில் (big bazaar பக்கத்தில் மிக அற்புதமான மிக அழகாக வடிவமைக்கப்பட்ட, உள் அலங்காரம் செய்யப்பட்ட வீடு) அமைதியான இடத்தில் அமைந்த வீடு. என் முதலாளியை பார்த்தவுடன் அவரை கட்டி அணைத்து முத்தமிட்டார். பின்னால் சென்ற என்னை அறிமுகம் செய்தவுடன் என்னையும் அணைத்துக்கொள்ள கையை நீட்டினார். அவரை போலவே நானும் அவரை அணைத்தேன், எனக்கும் முத்தமிட்டார். என் முதலாளி "Kavitha, u just talk to her I ll be back" என்று கூறுவிட்டு மாடிப்படி ஏறி எங்கோ சென்று விட்டார். புதுவீடு, தெரியாத மனிதர்கள் என்று எந்த பிரச்சனையும் எனக்கு எப்போதும் இருந்ததில்லை. ஆச்சரியத்தை விட்டுவிட்டேனே.. அந்த 85 வயது மூதாட்டி கலக்ட்ராக இருந்து ஓய்வு பெற்றவர், ஆங்கிலம் நுனி நாக்கில் தாண்டவம் ஆடுகிறது, நல்ல நிறம், கேரளாவை சேர்ந்த அவர் வேலையாளிடம் சொல்லி தேநீர் கொடுக்க சொல்லிவிட்டு என்னிடம் பேசியவாரே ஒரு 5 நிமிடம் சமையல் அறை உள்ளே சென்றார் வந்துவிட்டார். திருமணம் செய்து கொள்ளவில்லை தனியாக இருக்கிறார், நானும் அவரை ஏன் என்று கேட்டேன். அவர் சொன்ன பதில் " அந்த காலத்திலேயே அதிகம் படித்துவிட்டேன், மிகவும் அழகாக இருந்தேன்.. அதற்கு தகுந்தார் அல்லது என்னை விட எல்லாவற்றிலும் சிறந்த ஒரு ஆணை எதிர்பார்த்தேன், மணக்க நினைத்தேன் ஆனால் கிடைக்கவில்லை" சொல்லிவிட்டு வெடி சிரிப்பு சிரித்தார். வாழ்க்கை தனியாக உங்களுக்கு போர் அடிக்கவில்லையா என்றேன். இல்லை மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.. இப்படி பேசிமுடிப்பதற்குள் அவல்'லில் செய்த புட்டை எங்களுக்கு பரிமாறினார். இதைதான் ஆச்சரியம் என்றேன். எப்படி இவ்வளவு எளிதாக வேகமாக 5 நிமிடத்தில் அவரால் இந்த வயதில் உணவை தயாரிக்க முடிந்தது?. சாப்பிட்டவுடன் இருவரும் கிளம்பினோம்.

திரும்பவும் முதலாளி அவரை கட்டியணைத்தார். நான் புன்னகையுடன் தள்ளி நின்றேன் விடவில்லை என்னையும் கைநீட்டி அழைத்தார், நானும் கட்டியணைத்தேன். என்னை கட்டி அணைக்கும் போது "என்னை மேடம் என்று அழைக்காதே" என்றார். சரி ஆன்ட்டி என்றேன்..!! சந்தோஷப்பட்டு திரும்பவும் நடக்க ஆரம்பித்த என்னை கூப்பிட்டு இறுக அணைத்துக்கொண்டார். உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, அடிக்கடி வா என்றார். even if your boss doesnt visit, you please visit, I love you..I wait for you, next time you stay with me ok.." என்றார். பிரியாவிடை! கொஞ்சம் நடந்து திரும்பி பார்த்தேன். திரும்பவும் என்னை பார்த்து கையை நீட்டினார், நானும் சிரித்துக்கொண்டே சென்று அணைத்துக்கொண்டேன்... "I too miss you aunty, next time sure, I ll stay with you , I cook for you ..I ll give you company, we ll chat lot ok...." என்றேன். சின்ன குழந்தையை போன்று கைக்காட்டி வழியனுப்பி வைத்தார். சந்தோஷமாக இருக்கிறேன் என்று அவர் சொன்னது வார்த்தையில் மட்டுமே என்று புரிந்தது.

சிலரின் அன்பு ஏன் என்றே புரியவில்லை இப்படி எனக்கு நிறைய அனுபவங்கள் இருந்தாலும் இது கொஞ்சம் புதிது. இப்படி உறவினர்கள் இடையே கட்டியணைப்பது எல்லாம் நம்முடைய கலாசாரத்தில் இல்லை. கொஞ்சம் புதுமையான அனுபவம்.

காலையில் இந்த அவல் மட்டுமே உணவு.. ஒரு மணி நேரம் தாங்கவில்லை பசிக்க ஆரம்பித்தது. முதலாளிக்கு உடல் நலம் சரியில்லை. அதனால் மதியம் சாப்பிட எங்கேயும் அழைத்து செல்லவில்லை. கிளையன்ட் அலுவலகத்தில் உட்கார்ந்து அவர்கள் வர நேரம் எடுக்க காரில் எனக்கு பெங்களூரை சுற்றி காட்டினார். நடுவே ஒரு ஹோட்டலில் டீ வாங்கிக்கொடுத்தார். வாழ்க்கையை பற்றி நிறைய தத்துவங்கள் அவரின் அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார். பொறுமையாக அவரின் பேச்சை கவனித்துக்கொண்டு இருந்தேன். புத்தி என்னவோ கிளையன்ட்டை எப்படி எதிர்கொள்வது என்றே வேலைசெய்து கொண்டு இருந்தது. பசி வேறு கேட்கவும் முடியவில்லை அவரை பார்த்தாலும் பாவமாக இருந்தது. ஒரு வழியாக கிளையன்ட்ஐ பார்க்க முடிந்தது.

3.5 மணி நேரம் இடைவெளி இல்லாத பேச்சு. நான் பேச கிளையன்ட் பேச என்னுடைய முதலாளி ஒரு 10 நிமிடங்கள் எனக்கு துணையாக பேசிவிட்டு நாற்காலியை பின்னால் நகர்த்தி கைக்கட்டி சாய்ந்து உட்கார்ந்தவர் தான் என்ன ஏதுவென்று கேட்கவில்லை. சில சமயம் மிகவும் எரிச்சல் அடைந்து "Kavitha go with his rates, dont argue more let us fix this rate, he is also correct in his views.. !!" , " Yes Sir!, I do agree but..we dont get margin, no use of fixing this rate with this low margin, "It is ok, you better stop argue with him and go with his rate". முதலாளிகள் சொல்லுவதை நாம் கேட்டுத்தானே ஆக வேண்டும். அவ்வபோது லேப்பியில் நம்பர்களை அவருக்கு சைகை மூலம் காட்டி ஒப்புதல் பெற்று கிளைன்ட்; இடம் பிராஜக்ட் 'ஐ கையெழுத்திட ஏற்பாடு செய்தாகிவிட்டது. வந்த வேலை என்னவோ நல்ல படியாக முடிந்தது பசி தான் தாங்கமுடியவில்லை. மணி மாலை 6.15, முதலாளிக்கு விமானத்திற்கு நேரம் ஆக வண்டி பறந்தது. அவரை விமானநிலையத்தில் இறக்கிவிட்டு, ஸ்ஸ்..ப்பா... போன் முதலில்.ஜனாவிற்கு தான். "ஜனா ரொம்ப பசிக்குது எங்க சாப்பிடட்டும் சொல்லுங்க.. ஊர் உலகத்தை எல்லாம் தாண்டி எங்கையோ இருக்கேன்." ஜனாவிற்கு நான் பேசுவது கேட்கிறது எனக்கு கேட்கவில்லை. நான் பசியில் இருப்பதை புரிந்து கொண்ட டிரைவர் மேடம் அர்ச்சனா ஹோட்டல் இருக்கு சாப்பாடு நல்லா இருக்கும் போய் சாப்பிட்டுவாங்க என்று நிறுத்தினார். எப்படி போய் தனியாக சாப்பிடுவது. சரி பார்சல் வாங்கி வந்துவிடலாம் என்று போனேன். பசியில் மயக்கமே வந்துவிடும் போல இருந்தது. கூட்டம் இல்லை 2 தோசை ஆர்டர் ஒன்று பார்சல் வாங்கிக்கொண்டு, ஒன்று சாப்பிட்டேன்.

ரயில் நிலையத்திற்கு வந்து உட்கார்ந்து நேரம் பார்த்தால் 8.30 , எனக்கு ரயில் இரவு 11.45. ஜனா என்னை பார்க்க ரயில் நிலையம் வருவதாக சொன்னதால் வெளியிலேயே காத்திருந்தேன். 9.00 இருக்கும் வந்தார்கள், வந்தும் வராமல் "வாங்க பசிக்குதுன்னு சொன்னீங்க இல்ல ஹோட்டல் போலாம்". மிக கேவலமாக பார்த்து சிரித்தேன்.. "அப்போ பசிக்குது சொன்னா இப்ப வந்து நிக்கறீங்க.? .சரி வேலையைவிட்டு நேராக வரூவீங்கன்னு உங்களுக்கு நான் தோசை வாங்கி வந்து இருக்கேன். சாப்பிடுங்க." என்றேன். அதற்குள் எஸ்.எம்.எஸ்;ல் என் தோழி, ஜனாவை வீட்டுக்கு போய் சாப்பிட சொல்லு, நீயே அந்த தோசையையும் சாப்பிடு ஒரு தோசை உனக்கு பத்தாது என்று அனுப்பி இருந்தாள். அதை ஜனாவிடம் காட்ட... "யார் அவ, புது பிரண்டா...எவ்வளவு நாளா பிரண்டு.. என்ன பண்றா எங்க இருக்கா..??? " ஜனா "வாயை மூடிட்டு சாப்பிடுங்க.. " என்றேன். சாப்பிட்டு முடித்தவுடன் மீதம் இருந்த..சாம்பார், சட்னியை கட்டி அந்த ரெஸ்ட் ரூம் டேபிள் மேல் வைத்தார். ஜனா மணி 9.30 ஆக போகுது இதற்கு மேல் இதை யாரும் சாப்பிட மாட்டார்கள் குப்பை தொட்டியில் போடுங்கள் என்றேன். இல்லை சாப்பிடுவாங்க வேஸ்ட் பண்ண வேண்டாம்..என்றார்.

ஜனா..சொல்லிக்கிட்டே இருக்கேன்.. அது கெட்டு போய் நாற்றம் அடிக்கும், ஏன் இப்படி இருக்கீங்க.. ? குப்பை தொட்டியில் போடுங்க..ன்னு சொல்றேன் இல்ல...

நான் உங்க ஃபிரண்டு கவிதா.. உங்களின் மிரர்... உங்கள மாதிரித்தான் இருப்பேன்... ... வீணா போவது யாராவது பசிக்கறவங்க சாப்பிடுவாங்க இல்லையா...? எவ்வளவு பேரு இது இல்லாம கஷ்டப்படறாங்க.. என்னை திட்டினா உங்களை திட்டறமாதிரி அதனால திட்டாதீங்க.. சரியா.. :)))

இருவரும் ஒன்றாக சிரித்தோம்...

நேரம் ஆகிவிட்டது wife காத்திருப்பாங்க.. பத்திரமாக போங்க என்று சொல்லிவிட்டு சென்ற அந்த தோழன் என் தோழன் என்று சொல்லிக்கொள்வதில் எத்தனை பெறுமை எனக்கு......

அணில் குட்டி அனிதா: ம்ஹிம்... கவிதா மாதிரி கதை அளக்க யாராலும் முடியாதுடி.. சரி நீங்க இரண்டு பேரும் கர்ணனும், துரியோதனனும் மாதிரி சொல்லுங்க.. ஆனா நீங்க லேடி யாச்சே... வேற எப்படி சொல்லலாம்... வேற 2 பேரு இருக்காங்க சொல்லவா...? சொன்னா கோச்சீபீங்க வேணாம் உடுங்க...

பீட்டர் தாத்ஸ்: Who finds a faithful friend, finds a treasure. -- Jewish Saying