அணில் குட்டி அனிதா:- கவிதா வை ரொம்ப நல்லவங்க.. வல்லவங்க.. நியாமானவங்க.. அப்படின்னு ஊரு உலகத்துல பேசிக்கறாங்கன்னா... அதான் இல்லீங்கோ... சமீபத்தில் தெரிஞ்சவங்க ஒருத்தங்க அவிங்க எப்படி எல்லாம் டபுள் கேம் விளையாடாறாங்கன்னு அவங்களுக்கு புரிய வச்சாங்க பாருங்க.. அசந்து போன கவிதா, கண்டுபிடிச்சவங்க அறிவையும், புத்திசாலித்தனத்தையும் கண்டுக்குனு இன்னமும் டைலி ஒரே பாராட்டு மழத்தான் போங்க.. சரி எனக்கு தெரிஞ்சி இவிங்க ஆடின டபுள் கேம் ஐ இப்ப பாக்கலாம்..

HEL(L)met ஆல் வரும் பிரச்சனைகள்' னு நடுவுல ஒரு பதிவப்போட்டு எல்லார் உயிரையும் எடுத்தாங்க இல்ல.. அதுக்கு அப்புறமும் HEL(L)met போடாமத்தான் வண்டி ஓட்டனும்னு முடிவு பண்ணி அப்ப்டியே போய்கிட்டு இருந்தாங்க.. ஒரு நாளு ஹால்டா சிக்னல் கிட்ட நம்ம போலிஸ் மாமாங்க.. கவிதாவை வளச்சி புடிச்சாங்க... கவிதாக்கு ஒன்னும் பிரியல.. ஓ..லேடீஸ்'ஐ கூட இப்ப எல்லாம் விடறது இல்லையா.ன்னு மனசுல நெனச்சிக்கிட்டு....

கவி :- என்ன சார்...

போலிஸ் மாமா:- ஹெல்மெட் எங்கம்மா?

கவி :- வீட்டுல இருக்கு சார் (புத்திசாலித்தனமா பதில சொல்றாங்களாமா...)

போலிஸ் மாமா:- ஓ வீட்டுல வச்சிட்டு நீ ஏம்மா வந்த?? ரூல்ஸ் தெரியாதாம்மா..? சிரியல் பாப்பியே நீயூஸ் பாக்கறது இல்லையோ..? அங்க கொஞ்சம் திரும்பி பாரும்மா உன் ஃபிரண்டு ஒன்னமாதிரியே வந்து பணம் கட்டது..

(என்னா இவரு டூ மச்சா பேசறாரு?? (கவி'க்கு அவங்க மட்டும்தானே பேசனும்,அடுத்தவங்க பேசினா எப்பவும் டூ மச்..!! ) .யாரது என் ஃபிரண்டு..?? ஒன்னியும் பிரியாமல் கவி வேகமா திரும்பி பாத்தாங்க, அங்க ஒரு பொண்ணு இன்னொரு போலிஸ் மாமாவிடம் மொய் எழுதிக்கிட்டு இருந்துச்சி... அதை பாத்தவுடனே..ஆஹா பணம் பாக்காம விடமாட்டங்க போல... சரி அவரு ஒரு முடிவுல இருந்தா நாமலும் ஒரு முடிவுல இருக்கலாம்னு.. டயலாக் டெலிவரி பண்ண ஆரம்பிச்சாங்க..)

கவி : :((((.... ...சார்...சார்... HEL(L)met போட்டா எனக்கு காது கேக்கல சார்ர்ர்ர்.......(மொகத்த ரெம்ப பாவமா வச்சிக்கிட்டு இருந்தாங்க.., நீங்க யாராச்சும் அந்த மூஞ்சிய பாத்திங்க. அய்யோ கவிதா ன்னு அழ ஆரம்பிச்சி இருப்பீங்கன்னா பாருங்களேன்...)...

போலிஸ் மாமா: எ..எ.....என்னது..? (அவருக்கு இப்ப காது கேக்காம போச்சி..)..காது கேக்கலையா.. இது என்னா புது மேட்டரா இருக்கு...??? எந்த காதுமா.?

கவி:- (ஓ இவரு டூ இன் ஒன் போல.. டாக்டர் +போலிஸ் ஸோ..?? ) இரண்டு காதுமே கேக்கல சார்ர்ர்...(நோட் அதே பாவமான மூஞ்சி) HEL(L)met போட்டா பின்னாடி வர வண்டி ஹாரன் அடிச்சா கேக்கல.. முன்னாடி போற வண்டி நிக்கும் போது பிரேக் போட்டா சத்தம் கேக்கல.. போய் போய் இடிச்சி அடிக்கடி ஆக்ஸிடன்ட் ஆகுது சார்.. .அதுக்கு பயந்துதான் HEL(L)met போடறதில்ல சார்ர்ர்....

போலிஸ் மாமா:- தலையை வேகமாக சொறிந்தார்.... (பொடுகு நிறைய இருக்கும் போல) என்னப்பா இது புது கேஸ்'ஸா இருக்கு..ன்னு தூரத்துல இருந்த இன்னொரு மாமாவை கூப்பிட்டாரு.... இங்கப்பாருப்பா.. இவங்களுக்கு HEL(L)met போட்டா காது கேக்கலையாம்.. போட்டும் ட்ரை பண்ணாங்களாம்.. ஆக்சிடன்ட் ஆச்சாம்.. என்ன பண்ணலாம் சொல்லு..

கவி :- முகத்தை இன்னும் கொஞ்சம் பாவமா வச்சிக்கிட்டு... ஆமா சார் நெஜம்தான் சார்.. நெஜமாவே காது கேக்கல சார்...

போலிஸ் மாமா 2 :- ஏம்மா HEL(L)met போடாட்டி கேக்குதா?

கவி:- (ஆஹா கொக்கி போடாறாங்கப்பா..).. ஏதோ கேக்கும் சார்.. ரோடுல வண்டி ஓட்டற அளவுக்கு கேக்கும் சார்..ஆனா..HEL(L)met போட்ட சுத்தமா கேக்கல சார்...

(ரெண்டு பேரும் கொஞ்சம் தள்ளிப்போய் ஏதோ பேசினார்கள்... கவி'யும் காதை நல்லா தூக்கி என்ன பேசறாங்கன்னு கவனிக்க ஆரம்பிச்சாங்க... மாமா 1 :- யோவ் பாவம்யா காதுகேக்காத பொண்ணுபோல விட்டுடலாம்.. ..மாமா 2 :- சரி சரி வுடு.. இதுக்கிட்ட டைம் வேஸ்ட் பண்ணாம அடுத்த ஆள கவனி...)

போலிஸ் மாமா 1 :- சரிம்மா.. நீ கிளம்பு நல்ல டாக்டரா பாரும்மா..HEL(L)met அ போட்டு எங்கையும் ஆக்சிடன்ட் பண்ணிடாதம்மா...

கவி :- சரிங்க சார்ர்ர்ர்...ரொம்ப தாங்ஸ் சார்... (சேம் ஃபேஸ் மெயிண்டனிங்கு....!! ) தூரத்தில் இருந்த போலிஸ் மாமா-2 வை திரும்பி பாத்து சிரிச்சி...(தேவையா???) ரொம்ப தாங்ஸ் சார்...

அடுத்த வினாடி அங்க வண்டி நிக்கல.. கிளம்பினவங்க தான்..வீட்டுல வந்து நின்னு..ஸ் ஸ் ஸ்யப்பா.... ஒரு வழியா காசு கொடுக்காம தப்பிச்சோம்..ன்னு பெருமூச்சி விட்டாங்க..

வீட்டில் :- தன்னுடைய சாமார்த்தியத்தை புள்ளக்கிட்ட சொல்ல.. புள்ள என்ன சொன்னான்னு கேட்டுட்டு நீங்களும் கவி'ய அதே கேள்விய கேட்டுட்டு போங்க..ஓகே..

புள்ள :- அம்மா.. இனிமே..நீ...... இவன் ரூல்ஸ் ஃபோலோ பண்ணல..அவன் ரோட்ல குப்பைக்கொட்டறான்.. இவன் லஞ்சம் வாங்கறான்.. அவன் சாக்கடைய ஒழுங்கா கட்டல.. இவன் மரத்தை வெட்டிட்டான்னு , அவன் ஒழுங்கா சினிமா எடுக்கல..ன்னு வந்து நியாயம் பேசனைன்னு வை...... .. இல்ல இனிமே நீ பேசித்தான்..பாறேன்..!!!

கவி :- டேய்..!! நிஜமாவே எனக்கு காது கேக்கலடா...

புள்ள :- ஹும்...என்கிட்டயேவா... சரி வா டாக்டர் கிட்ட போய் கேக்காத அந்த நொல்ல காதை நோண்டி எடுத்துடலாம்... உனக்கு அது இருந்தா என்ன இல்லன்னா என்ன...??

கவி : (தி எஸ்கேப்பு...........!)

பீட்டர் தாத்ஸ் :- For every beauty there is an eye somewhere to see it. For every truth there is an ear somewhere to hear it. For every love there is a heart somewhere to receive it.”