நேற்று அலுவல் வேலையாக மயலாப்பூர் செல்ல நேரிட்டது.. ஏன் போனோம் என்றாகிவிட்டது. டிரைவரோ' மேடம் 2 நாட்களாக இந்த பகுதியில் கோயிலை சுற்றியுள்ள சாலைகள் அடைக்கப்பட்டு விட்டன. உள்ளே செல்ல முடியாது, வண்டியை இங்கேயே நிறுத்திவிடுகிறேன், நீங்கள் வேலையை முடித்துவிட்டு ஃபோன் செய்யுங்கள் வருகிறேன் என்றார்.

என்ன கொடுமைப்பா இது, சென்னையில் இருந்தாலும் எல்லா இடங்களும் பழக்கப்படாத நிலையில் அதுவும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை போலிஸ், போலிஸ், போலிஸ்.. மக்கள் வண்டிகளுடன் வேறு வேறு பாதைகளுக்கு சென்று முயன்றாலும் போலிசாரால் தடுக்கப்பட்டு திருப்பி விடப்பட்டவாறே இருந்தனர். இப்படி ஒரு கூட்ட நெரிசலான இடத்தில் என்னத்தான் நடக்கிறது இங்கே..என்றுப்பார்த்தால்.. கட்சிக்கூட்டம்.. :))

மக்கள் நடமாட்டம் குறைந்த இடத்தில் அரசு கட்சிக்கூட்டங்களை வைக்கக்கூடாதா? ஒரு வழி, ஒரு வழி என்று வளைந்து வளைந்து வீடு வருவதற்குள்.... நடுராத்திரி ஆகிப்போனது.. இதில் போக்குவரத்து நெரிசலில் பொறுமை இழந்து ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு கொண்டதும் பார்க்கமுடிந்தது.

இன்றைய நாட்களில் தினமும் வேலைக்கு சென்று திரும்புவதே சிரமமாக இருக்கும் போது, இப்படி மக்கள் அதிகமாக புழங்கும் இடத்தில் எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு.. மயிலாப்பூர் மக்கள் எப்படி சமாளிக்கிறார்களோ தெரியவில்லை.

நிஜமாகவே மயலாப்பூர் ஏரியா எனக்கு புதிது என்பதால் வழித்தெரியாமல் திக்குமுக்காடி போனேன். கோயிலை தவிர எங்குமே சென்றதில்லை. தோழிக்காக ஒருமுறை முண்டக்கண்ணி அம்மன் கோயில் சென்றேன்.. கேட்டு கேட்டு கண்டுப்பிடித்து போனேனே தவிர இன்னொரு முறை போகச்சொன்னால் திரும்பவும் கேட்டு கேட்டுத்தான் செல்லவேண்டும், அப்படி நெருக்கமான தெருக்கள்..மக்கள் கூட்டம். வாகனங்களில் சாதாரணமான நாட்களில் செல்வதே கடினம். ஒரு நோக்கத்தோடு சென்றதால் அப்போது என்னவோ சிரமம் தெரியவில்லைதான், ஆனால் நேற்று வேண்டாம்ப்பா மயிலாப்பூர்....!!!

அணில் குட்டி அனிதா:- ஆமாண்டா.. அடுத்த "அம்மா" இவிங்கத்தான் இவிங்க எங்க போறாங்கன்னு பாத்து ஊறடங்கு உத்தரவு போட்டு பட்டு விரிப்பு வரவேற்ப்பு வைங்கப்பா... நாட்டுல அவன் அவன் நடக்க இடம் கிடைச்சுதே அதுவே போதும்னு நெனச்சி சந்தோஷப்படறான்.. இவிங்க என்னான்னா...

பீட்டர் தாத்ஸ் :- Before the beginning of great brilliance, there must be chaos. Before a brilliant person begins something great, they must look foolish in the crowd