பொன்ஸ் எல்லோரும் அறிந்த ஒரு பதிவர், இவரை கண்டாலே எனக்கு எப்போதும் பிடிக்காது... :))) அல்லது என்னை கண்டாலே அவருக்கு பிடிக்காது.. :)) இதில் எதில் உண்மை என்று எங்களுக்கே தெரியவில்லை. அவருக்கு பரிந்து என்னை திட்டி எழுதிய சில பதிவுகளை நான் படித்திருக்கிறேன். இருவருமே பெண்களுக்காக அதிகமாக பேசும் பதிவர்கள் என்றாலுமே எனக்கும் அவருக்கும் எண்ணங்களில், கருத்துக்களில் நிறைய வேறுபாடுகள் உண்டு. நிறைய நிறைய உண்டு.

பொன்ஸ்' சில மலரும் நினைவுகள். முதல் முதலில் நான் இந்த ப்ளாக் உலகத்திற்கு வந்தபோது பதிவர் பாலா (பாரதி) அவர்கள் பொன்ஸ்' ஐ எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். பொன்ஸ் என்னிடம் முதலில் கேட்ட கேள்வி நான் உங்களுக்கு எப்படி உதவமுடியும் என்று நினைக்கிறீர்கள்?. பெயரை பார்த்து அவர் ஒரு ஆண் என்றே நினைத்தேன். :)) அப்போது எல்லாம் ப்ளாகில் அவர் பெயர் இல்லாத இடமே இருக்காது. எல்லோரும் "பொன்ஸ் அக்கா" என்றுதான் அழைப்பார்கள். எனக்கோ பொறாமையாக இருக்கும் என்ன ஒருவரும் நமக்கு மரியாதை கொடுக்க மாட்டேன் என்கிறார்களே. .எல்லாவற்றிக்கும் இந்த அணிலு தான் காரணம் என்று நினைப்பேன். அதையும் பாலாவிடம் சொல்லி அவர் அக்காவென்று அழைக்க ஆரம்பித்தார்.

பொன்ஸ்' ஸுடன் ஜி-டாக்கில் அதிகமாக பேசியிருக்கிறேன். என்னின் தனிப்பட்ட எண்ணங்களை புரிந்துகொண்டு இருக்கிறார், தனிமனித நேயம் அவரிடம் அதிகம் பார்த்திருக்கிறேன், என் ஆதாங்கங்களை புரிந்து பதில் சொல்லுவார். ஒரு பெண்ணாக என்னால் உங்களை புரிந்து கொள்ள முடிகிறது கவிதா என்பார். ஒரு பிரச்சனை வநத போது "கவிதா நீங்கள் எல்லோரையும் எளிதாக நம்பி விடுகிறீர்கள்", எளிதாக உங்களை ஏமாற்றலாம் !! , அதனால் ஜாக்கரதையாக இருங்கள் என்றார். இது எந்த அளவு உண்மை என்பதை அடிக்கடி இப்போதும் உணருவேன். ஏமாற்றுபவர்கள் இன்னும் இருந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள், நானும் ஏமாந்துக்கொண்டு தான் இருக்கிறேன்.

பொன்ஸ்'க்கு பிரச்சனை என்ற போது நான் என்ன செய்தேன்..என்று அடிக்கடி நினைத்துக்கொள்வேன். பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. அமெரிக்காவிலிருந்து என்னுடன் பேசினார், மிக தைரியமாக இருந்தார். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நான் அந்த சூழ்நிலையில் என்ன செய்து இருப்பேன் என்று தெரியாது ஓவர் ரீயாக்ட் செய்து எல்லோரையும் பயமுறித்து ஒருவழி ஆக்கியிருப்பேன்.

அவரிடம் பிடித்ததை மட்டுமே இங்கே சொல்லியிருக்கிறேன்.. எனக்கு பிடிக்காத விஷயங்கள் உண்டு அவையும் கருத்துக்களுடன், எண்ணங்களுடன் மட்டுமே நிற்கிறது. தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்கும் பிரச்சனை என்று பலர் நினைத்து வருகிறார்கள் அதனை விளக்கவே இந்த பதிவும். ஒரு பதிவர் சொல்லுவார், "உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உங்கள் உடன் பிறவா சகோதரி ஓடோடி வருகிறார்களே? எவ்வளவு பாசம் அவர்களுக்கு? எங்களை கண்டுக்கொள்ள ஆள் இல்லை" என்பார்.

பலருக்கு பல விஷயங்கள் எளிதில் புரிந்துவிடுவதில்லை.. இப்படி சொல்லி புரியவைத்தால் மட்டுமே உண்டு... on the paper..!! in Black & white....:)))))))))

அவர் இப்போது எங்கு எப்படி இருக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை... ஆனால் அவரைப்பற்றி பல சமயங்களில் நான் நினைவுகூறுகிறேன் என்பது மட்டும் நிஜம்...இன்னும் பொன்ஸ்' ஐ போன்று என் நெஞ்சத்தில் சில நண்பர்கள் வந்து போய் கொண்டுத்தான் இருக்கிறார்கள்..... :))

அணில் குட்டி அனிதா:- சரி இப்ப என்னா மேட்டர்...எதுக்கு இப்ப பொன்ஸு அக்காக்கு இத்தன ஐஸ் பொட்டி...???? எனக்கு பிரியல ..மக்கா உங்களுக்கு பிரியுதா? .. பொன்ஸ் யக்கா உனக்காது பிரியுதா பாருக்கா.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....ப்பா..முடியல இந்த அம்மணியோட ...!!

பீட்டர் தாத்ஸ் :- "The most I can do for my friend is simply to be his friend." -- Henry David Thoreau