இது 100 ஆவது பதிவு.. இது வரைக்கும் என்ன எழுதியும் சாதிக்கவில்லை என்பதுதான் உண்மை.

இங்கு எழுத ஆரம்பித்து நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள், சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தாலும் இப்படியும் ஒரு உலகம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். 100 ஆவது பதிவை எழுதும் போது எனக்கு தோன்றியது இனி நிறைய எழுதவேண்டும், நடுவே எதற்காகவோ யாருக்காகவோ எழுதுவதில் தடைகள் இருந்தன.. ஒரு முறை இல்லை மூன்று முறை இனிமேல் எழுதவே கூடாது என்று நினைத்தேன். ஆனால் இப்போது என்னுடைய குழந்தைக்கு எப்போதும் என்னுடைய எழுத்துக்கள் என்னுடைய நினைவுகளாக இருக்க வேண்டும் என்று நினைத்து தொடர்ந்து எழுத வேண்டும் என்று முடிவுடன் வந்துள்ளேன்.

100 என்றவுடன் சட்டென்று/பட்டேன்று நினைவுக்கு வந்த சில -

1. சச்சின் :))))))
2. போலிஸ்
3. 100 ரூபாய் அதில் காந்தி தாத்தாவின் சிரிப்பு
4. ரஜினிகாந்த் நடித்த ராகவேந்திரா..
5. கமல்ஹாசனின் ராஜபார்வை
6. பிளாகர்கள் எழுதும் அவர்களின் 100 ஆவது பதிவு....
7. 100 ஆவது நாள் - திரைப்படம்
8. எல்.கெ.ஜி யில் முழு ஆண்டு தேர்வில் ஆங்கிலோ இந்தியன் டீச்சரிடம் 100/100 என்று என்னுடைய சிலேட்டில் வாங்கிய மதிப்பெண். அதை அழிக்காமல் வீடு வரை கொண்டு வந்து காட்டி எல்லோரிடமும் முத்தம் பெற்றது.
9. பத்தாம் வகுப்பில் கணிதத்தில் 100 வாங்க முயற்சி செய்து 99 வாங்கி 1 மதிப்பெண்' ணில் 100 ஐ இழந்தது.
10. நமக்காக, நாட்டுக்காக உயிர் விட்ட ராணுவ வீரர்கள் பற்றிய பதிவர் சந்தோஷ்' சின் 100 ஆவது பதிவு.

உங்களுக்கு இந்த 100 என்ற எண்ணை பார்த்தவுடன் நினைவுக்கு வருவதை எழுதுங்களேன்...

அணில் குட்டி அனிதா : இந்த அநியாயத்த கேக்க ஆள் இல்லையா? எப்படிங்க இது அம்மணிக்கு 100 ஆவது பதிவாகும். கொஞ்சூண்டு லெப்ட் சைட் பாருங்க.. லேபல்ஸ் ல பாருங்க.. 17 பதிவு நான் எழுதி இருக்கேன். .இவிங்க என்னானா... 100 ஆவது பதிவுன்னு போடறாங்க... இதுல கணக்கல 99 மார்க் ன்னு வேற பீத்தல்... .. கவி.. இதை என்னால ஒத்துக்க முடியாது...... பதிவ மாத்தி எழுந்துங்க...

பீட்டர் தாத்ஸ்:- We cannot adopt the way of living that was satisfactory a hundred years ago. The world in which we live has changed, and we must change with it.