சத்தம்……..

சத்தம் – அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கம், ஏதோ ஒரு சத்தம் எப்போதும் நம் காதுகளில் விழுந்துக்கொண்டே தான் இருக்கின்றன… சில சத்தங்கள் சங்கீதமாக சுகமாக இருக்கும்…... சில சத்தங்களின் பாதிப்புகளும் அதிகம்……

காலையில் எழுந்திருக்கும் போது, விடியலுக்கு என்று ஒரு சத்தம் இருக்கும்…எங்கோ தூரத்தில் சில வண்டிகளின் ஹாரன் சத்தம், படுக்கை அறையில் ஓடும் fan சத்தம்…. ஜன்னல் வழியே பக்கத்துவீட்டில் வாட்டர் டேங்க் தண்ணீர் நிரம்பி கொட்டும் சத்தம்……. எங்கேயோ…கத்தும் காக்கை…இப்படி.. சின்ன சின்ன சத்தங்களுடன் எழுந்துவந்தால்…..

சமையல் அறையில்….சமைக்க ஆரம்பித்தால்..எல்லாமே சத்தம்..தான், குக்கர், ஓவனில் ஏதோ சமைக்க வைத்தால் நேரம் முடிந்தவுடம் அது கொடுக்கும் அலாரம், மேலே அட்டை பெட்டியில் தூங்கி எழுந்த என் அணில்குட்டி கீச் கீச் என்று கத்திக்கொண்டு எகிரி குதித்து வெளியில் ஓடும், நடுவில் ரேடியோ, டிவி நிகழ்ச்சிகள்…. கதவிற்கு வெளியே படிகளை பெருக்கும் போது வரும் சத்தம்…. கைபேசி அழைக்கும்… பக்கத்து வீட்டில் துணி துவைக்கும் சத்தம்…. குழந்தைகளை அம்மாக்கள் அதட்டும் சத்தம்… கண்டுக்கொள்ளாமல் அவர்கள் கத்திக்கொண்டு மொட்டை மாடியில் ஓடி விளையாடும் சத்தம்… இதில் வீட்டில் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டால்…அதில் வரும் சத்தத்திற்கு அளவே இல்லை……..

சில நேரங்களில் வெறும் தரையில் படுத்தால்…மிக மெலிதாக கீழ்தளத்தில் fan ஓடும் சத்தம், சில நேரங்களில் அவர்கள் வீட்டு ஊஞ்சல் ஆடும் சத்தமும் இங்கே கேட்கும்….பக்கத்துவீட்டில் ஒவ்வொருத்தர் செருப்பை தேய்த்து நடக்கும் சத்தத்தை வைத்து யார் அவர் என்று அனுமானித்து விடலாம்… எட்டி பார்க்கவேண்டி இருக்காது… என் கணவர் சவரம் செய்யும் போது மெலிதாக சர் சர் என்று ஒரு சத்தம்….

வீட்டை சுற்றியே இப்படி என்றால்…அலுவலகம் பற்றி சொல்லவே வேண்டாம்… எல்லோருக்குமே என்னுடைய சத்தம் பெரிய தொல்லையாக இருக்கும் என்றாலும், ஒரு ஒரு அலுவலக பிரிவிலிருந்து வரும் சத்தமும் பல விஷயங்களையும், அனுபவத்தையும் நமக்கு கொடுக்கும்…. நாம் மட்டுமே வேலை செய்கிறோம், நமக்கு மட்டுமே வேலையால் மன அழுத்தம் அதிகம் என்று நினைத்து சோர்வு அடைந்தால் மற்ற பிரிவுகளிலிருந்து வரும் சத்தங்களிலிருந்து நாம் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றும்..

எத்தனை எத்தனை சத்தம்…….. எதை கேட்பது எதை விடுவது…..??....

கேட்கும் அத்தனை சத்தத்திலும் ஏதோ ஒன்று இருக்கிறது…… உணர்ந்து ரசிக்க பல சமயங்களில் நமக்கு நேரம் இருப்பதில்லை.. அல்லது அப்படி ஒரு சத்தம் வருகிறது என்று நாம் உணராமல் கூட வேறு வேலையில் லயித்து இருப்போம்… ஆனால் இதற்காக உட்கார்ந்து பார்த்தால் ஒரே நேரத்தில் எத்தனை சத்தங்களை நாம் உள்வாங்குகிறோம்.. அதற்கு பதில் அளிக்கிறோம்..அல்லது அதனை கண்டுக்கொள்ளாமல் நம் வேலையை செய்கிறோம் என்று உணர்வோம்….

இதை எல்லாசத்தத்தை விட…….. மனத்திற்க்குள் நாம் நமக்குள்ளேயே பேசும் சத்தம்…. ரொம்ப பெரிய சத்தம்……….. வெளியில் தெரியாத சத்தம்…..

அணில் குட்டி அனிதா :- ம்ஹிம்…..சத்தத்த பத்தி இன்னொரு சத்தம் பேசுது.. .என்னத்த சொல்ல… இவங்கள சுத்தி இருக்கறவங்க எல்லாருமே சொல்லிட்டாங்க… பெத்த அம்மாவிலிருந்து பெத்து போட்ட புள்ள வரைக்கும் “சவுண்ட குறை..”னு.. எங்க…. இவிங்க சவுண்டு இன்னமும் குறையலப்பா…!!! … வாசுகி மேடம் க்கு துணையா பீட்டர் தாத்ஸ் யை கூட்டிட்டு வந்தாச்சி……

மிஸஸ் வாசுகி:
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு

பீட்டர் தாத்ஸ் :- Whatever thing, of whatsoever kind it be, Ii is wisdoms part in each the very thing to see.

கடவுள் – சில கேள்விகள் பதிலகள்

பல காரணங்களுக்காக, திரை விமர்சனம் எந்த படத்திற்கும் எழுதுவதில்லை என்று இருக்கிறேன். ஆனால் இதை எழுதியே தீர வேண்டும் என தோன்றியது..."அறை எண் 305-கடவுள்" – படம் இன்னும் பார்க்கவில்லை, தொலைக்காட்சியில் சில காட்சிகளை பார்க்க நேர்ந்தது.. பார்க்கும் போது எல்லாம் எரிச்சல் தரக்கூடிய வசனங்கள்….படத்தின் இயக்குனர் தான் வசனகர்த்தாவா என்று தெரியவில்லை, கூகுள்'உதவவில்லை.. எவ்வளவு தேடியும் கிடைத்ததகவல் இயக்குனர் சிம்புதேவன் மட்டுமே. சரி எரிச்சல் தரும் விஷயத்திற்கு வருவோம் –

பிரகாஷ்ராஜ் கதாபாத்திரம் கடவுள் – டெல்லிகணேஷ் என்ற கதாபாத்திரத்தை பார்த்து கேட்கும் கேள்விகள் –

1.நீங்கள் ஆள் இல்லாத மலை உச்சிக்கு ஒத்தைஅடி பாதையில் நடந்து போயிருக்கிறீர்களா?
2. நடுகடல் வரை படகு பயணம் செய்து இருக்கிறாயா?
3. ஏழை 10 பேருக்கு சாப்பாடு போட்டு இருக்கிறாயா?

கேட்பது மட்டும் இல்லை இது எல்லாம் செய்யாமல் எப்படி உங்கள் வாழ்க்கை நிறைவடைந்தது என்று நினைக்கிறீர்கள் என்ற கேள்வி நிறைவு வேறு????

தனிமனிதனின் விருப்பம் என்பது வேறு..ஒருத்தருக்கு பிடித்த ஒரு விஷயம் நிம்மதி, சந்தோஷம், நிறைவு எல்லாம் எப்படி மற்றவருக்கு நிறைவை தரும். எனக்கு பச்சை நிறம் பிடிக்கும், அதனால் பிடிக்காத அல்லது பச்சை நிறம் பற்றி தெரியாத ஒருவரை பார்த்து உனக்கு பச்சை நிறம் பிடிக்கவில்லை (அ) தெரியவில்லை அதனால் உன் வாழ்க்கையில் நீ நிறைவடையவில்லை என்று சொல்ல முடியுமா?... முட்டாள் தனமான ஒரு சிந்தனை என்றே சொல்லலாம்.

மேல் உள்ள மூன்று விஷயங்களுமே செய்யாமல் எத்தனையோ பேர் நிம்மதியோடும், மிக பெரிய சாதனைகள் செய்தும் , சந்தோஷத்துடனும் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
சில உதாரணங்கள் :-

1. குடும்பம், குழந்தை , கணவன், சமையல் அறை, உறவுகள், டிவி சீரியல்கள், மதிய நேர தூக்கம், கண்ணில் வைக்கும் மை, தினமும் செய்யும் பூஜை, பக்கத்துவீட்டு கதை, புதிதாய் வந்த புடவை டிசைன் மட்டுமே உலகம் சந்தோஷம் என்ற நிறைவுடன் இருக்கும் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது போதும்…இதற்கு மேல் தேவையில்லை… இதை முழுமையாக அவர்கள் பெற்றாலே அவர்களின் சந்தோஷத்தை முகத்தில் பார்க்கமுடியும்…..

2. என் நண்பர் ஒருவர் உதவி கேட்கும் போது ரூ.1500/- கொடுத்தார் ஆனால் அவரே கேளிக்கைக்கு ரூ.5000/- மும் அதற்கு மேலும் செலவு செய்யவும் தயாராக இருந்திருக்கிறார், இருக்கிறார். அவரிடம் கேட்பதற்கு முன் நானே என்னை கேட்டு கொண்டு கேள்விகள். அவரின் சம்பாத்தியம் ,அவருக்கு அதை எப்படி செலவு செய்யவேண்டும் என்ற உரிமை உள்ளது…அவரின் சந்தோஷம் – ஏழைக்கு உதவும் போது இருப்பதை விட கேளிக்கைகளில் ஈடுபடும்போது இருக்கிறது.

3. சமீபத்தில் நீயா நானா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டு இருந்த போது ஒரு பெண் தனக்கு ஹை ஹீல்ஸ் அணிவது மிகவும் பிடிக்கும், அதை அணியவிடக்கூடிய, அணிந்தபிறகும் தன்னைவிட உயரம் அதிகம் உள்ள ஒருவரை மணக்க வேண்டும் என்று சொன்னார். மிக சாதாரணமான அல்லது ஆண்களை பொருத்தவரை கேலிக்குறிய, நக்கல் செய்யக்கூடிய ஒரு விஷயமாக இது இருக்கலாம் ஆனால் அந்த பெண்ணை பொருத்தவரை அது தான் சந்தோஷம், நிம்மதி மனதளவில் நிறைவு.

மனநிறைவை தரக்கூடிய எந்த செயலும் அவரவரை பொருத்தவரை வாழ்க்கையின் சாதனையே… வாழ்க்கையின் நிறைவும் கூட….. ஆசைகள், கனவுகள், கற்பனைகள் அத்தனையுமே ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தனித்தனி…….அதையும் தாண்டி ஒருவரை ஏதோ விஷயத்திற்காக பிரகாஷ்ராஜை (கடவுள் கதாபாத்திரம்) போன்று- இதை செய்தால் நீ நிம்மதியாக இருப்பாய், சாதனை புரிவாய், சந்தோஷமாக இருப்பாய், வாழ்க்கையில் நிறைவை பெருவாய் என்று உணர்த்துவாரானால். உணர்த்துபவரின் பங்கு அதில் என்ன என்பதை பார்க்கவேண்டும்…

கேள்விகள் மிக எளிதாக கேட்கமுடியும்…..ஆனால் பதில்………….

அணில் குட்டி அனிதா:- ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்….ஆரம்பிச்சிட்டாங்கய்யா 'தருமி சீவி…ஹோ'..சாரி…டங் ஸ்லிப்ட்… அறிவு ஜீவி…. சரி கவி மேட்டர விடுங்க.. நம்ம பீட்டர் தாத்ஸ் கவி இம்சை தாங்க முடியாம ஓடிட்டாரு.. சோ…நான் கொஞ்சம் தீவிரமா யோசிச்சி…மிஸஸ்.வாசுகி ய இண்ட்ரோ கொடுக்கிறேன் யாருன்னு பாக்கரீங்களா… அதாங்க நம்ம திருவள்ளூஸ்’ ஒயிஃப் வாசுகி இல்ல அவிங்கதான்… …வூட்டுக்காரு எழுதினத உங்களுக்கு தினம் ஒன்னு சொல்லபோறாங்க.. வாசுகி மேடம் யூ ஸ்டார்ட்… ஆல் தி வெரி பெஸ்டூஊஉ…

மிஸஸ். வாசுகி:-
அன்போடு இயந்த வழக்கென்ப ஆருயிருக்கு
என்போடு இயந்த தொடர்பு


அன்பு-பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் பண்பை நல்கும். அஃது எல்லோரிடத்திலும் நட்பு என்ற அளவுகடந்த சிறப்பையும் தரும்.

-Of precious soul with bodys flesh and bone, The union yields one fruit, the life of love alone.

வேலையினூடே ஒரு நாள் (A Day at Work)

கைப்புள்ள அறிவித்துள்ள புகைப்பட போட்டிக்காக -

1. சுற்றலா பயணிகளுக்காக உணவு தயாரித்து விற்கும் பெண் -

Photobucket

2. டார்ஜிலிங் மலையில் - சுற்றுலா பயணிகளுக்காக தேநீர் கடை நடத்தும் பெண் -

Photobucket