வேளிச்சேரி்..!!! மிக குறுகிய காலத்தில், மிக வேகமான வளர்ச்சியை எல்லாவிதங்களிலும் பெற்றுவிட்ட ஒரு இடமாகிவிட்டது.. நாங்கள் கடந்த 1991 ஆம் ஆண்டில் வேளச்சேரியில் குடியேறியபோது அக்கம் பக்கம் இருக்கும் காலி இடங்களில் எப்போதும், (ஆண்டு முழுதும்) தண்ணீர் தேங்கி இருக்கும், மதிய நேரங்களில் சூரியன் உச்சத்தில் இருக்கும் போது அந்த ஒளியில், தண்ணீரில் நீந்தும் பெரிய பெரிய மீன்’களையும், பாம்பு களையும் எங்கள் வீட்டு சன்னல் வழியாக நின்று கவனிப்பேன். தினம் எனக்கு இது தான் பொழுதுபோக்காக இருந்தது.

ஆனால் இப்போது, வேளச்சேரியில் காலி இடங்கள் கிடைப்பதே அறிதாகிவிட்டது, கிடைத்தாலும், விலையைப்பற்றி பேசி நம் இரத்த அழுத்ததை அதிகபடுத்திக்கொள்ள வேண்டாமே.

இப்படி, ஏரிக்குள்ளேயே நாம் குடியேறி எல்லா இடங்களையும் ஆக்கரமித்து விட்டோம். அதனால் ஒவ்வொரு மழைக்காலத்திலும் வேளச்சேரி தான் தண்ணீரில் மூழ்கும் இடங்களில் முதல் இடத்தில் இருக்கும். தண்ணீர் இனிமேல் தேங்காமல் இருக்க., போன வருடத்தில் இருந்து அரசாங்கம் ஒரு புது திட்டத்தை அறிமுகப்படுத்தி செயற்படுத்தியும் வருகிறது. அதாவது, வேளச்சேரி தண்ணீர் அதிகம் நிற்கும் இடங்களிலில் , தெருக்கலின் ஒரு ஓரமாக வாய்க்கால் வெட்டி, அதனை தெற்கு வேளச்சேரியில் உள்ள ஒரு ஏரிக்கு கொண்டு செல்கிறார்கள். 5 x 5 ஆழமும் அகலமும் இருக்கும் இந்த வாய்க்கால் எனக்கு தெரிந்து வேளச்சேரி பைப்பாஸ் ரோட்டில் உள்ள ஏரி இருக்கும் இடத்தில் இருந்து ஆரம்பித்து தெற்கு நோக்கி வருகிறது.

பிரச்சனை என்ன?.. முன்னேமே நாம் இருப்பது ஏரி பள்ளத்தில், இதில் எப்படி இந்த வாய்க்கால் நமக்கு தண்ணீரை தேக்காமல் ஏரிக்கு எடுத்துச்செல்லும், அதற்காக சரியான முறையில் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை தண்ணிர் தேங்காதவாறு வாய்க்கால் வடிவமைக்கப்பட்டு இருக்கிறதா? நிச்சயமாக இல்லை. காண்ட்ராக்டில் விடப்பட்ட இந்த வேலை, வாய்க்காலை முடிக்கும் தீவிரத்தில் செயல் படுகின்றனவே தவிர, சரியான முறையில் சரிவான மட்டத்தை கடைப்பிடிக்கப்படவில்லை.

அதனால் தெருவில் தேங்கும் தண்ணீரை தவிர இனி, இந்த வாய்க்கால்களிலும் தண்ணீர் தேங்கும். தெருவில் தேங்கும் தண்ணீராவது 2, 3 நாளிலில் இரங்கிவிடும்..ஆனால் இந்த வாய்க்கால்களில் தேங்கும் தண்ணீரால், கொசு அண்ணன்களின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. நன்றாக இருந்த எங்களில் ஏரியாவெல்லாம் இப்போது கொசுக்கள் சொகுசாக வளரும் இடமாக ஆகிவிட்டது.

2, 3 நாள் தண்ணீர் நிற்பதே பரவாயில்லை, இந்த வாய்க்கால்களால் ஆண்டுமுழுதும் தொல்லை. அதுமட்டுமல்ல, நம்முடைய நகராட்சி தெருக்கள் எல்லாம் அகலமான தெருக்கள் இல்லை, இதில் இந்த வாய்க்கால்கள் ஒரு பகுதியில் கட்டிவிடுகின்றனர். அதன் வடிவமைப்பு அதன் மேல் வண்டிகள்,பாதச்சாரிகள் செல்ல இயலாதவாறு மேடும் பள்ளமுமாக கட்டப்படுகின்றன. அதனால் வாய்க்கால் இல்லாத மீதமுள்ள குறுகிய ரோட்டை தான் பாதச்சாரிகள், வண்டிகள் உபயோகிக்க வேண்டியுள்ளது.

இதில் கொசுவின் தொல்லை தாங்காமல், நிறைய வீட்டுக்காரர்கள் தெருவிற்கும், வாய்க்காலுக்கும் இடையே தண்ணீர் செல்ல அமைக்கப்பட்டிருக்கும் வழிகளை மண்ணைக்கொண்டு மூடிவிடுகின்றனர். நிச்சயம் அவர்கள் மேல் எந்த தப்புமும் இல்லை, இந்த கொசுக்களால் அவர்களுக்கு வரும் பிரச்சனையை விட இது ஒன்றும் பெரிய தவறாகவும் தெரியவில்லை. இப்போதே மழை இல்லாத இத்தனை வெயிலிலும் இந்த வாய்க்கால்களில் தண்ணீர் தேங்கிகிடப்பது… வாய்க்கால் வடிவமைப்பின் லட்சனத்தை எடுத்துறைக்கிறது….!!

அணில் குட்டி அனிதா:- கவி..நீங்க அந்த காண்ட்ராக்டரை நொய் நொய் ன்னு கேள்வி க்கேக்கும் போதே நெனச்சேன்.. பிளாக்ல எழுதப்போறீகன்னு.. எழுதிட்டீங்களா.. ப்பாத்து… காண்ட்ராக்டருக்கு கோவம் வந்து வாய்க்கல்குள்ள போட்டு மூடிட போறாங்க… ஒரே நாள்ல காலியாய்டுவீங்க…...!

பீட்டர் தாத்ஸ் :- Rather fail with honour than succeed by fraud.