அணில் குட்டி அனிதா :- பொதுவா யாராவது ஜோக் அடிச்சா நாம சிரிப்பா சிரிப்போம்..ஆனா..நம்ம கவிதா இருக்காங்க பாருங்க..யார் கிட்டையாவது வாய கொடுத்து …அவங்க திருப்பி கவிதா’வ சுத்தி சுத்தி பேசவிடாம ஓட்டுவாங்க பாருங்க.. அப்ப…கவிதா “ஞே’ ன்னு முழிக்கறத “பாத்தா… அட போங்க… சொல்ல எல்லாம் முடியாது… உருண்டு உருண்டு சிரிக்கறமாதிரி இருக்கும்.. உங்களுக்காக சில சேம்பல்ஸ்… நீங்களும் உருளுங்க.. என்னோட சேர்ந்து…..

கவி அவங்க பிரண்டுக்கு மாட்டு பொங்கலுக்கு வாழ்த்து சொன்ன கதைய கேளுங்க..

கவி :- ஹேப்பி மாட்டு பொங்கல் ..பா….!! (சொல்லிட்டு இவங்களே ஹிஹி ஹிஹி ஹிஹி ன்னு சிரிச்சிக்காறாங்க…)

கவி பிரண்டு :- போதும் பொதும் இளிச்சது…அத “பன்னி பொங்கல்” கொண்டாடறவங்க சொல்லக்கூடாது….

கவி : (“ஞே” ன்னு முழுச்சிக்கிட்டு ) சைலன்ட்’ டா எஸ் ‘ ஆயிட்டாங்க..

ஆனா இவங்களுக்கு ஒரு டவுட்.. “பன்னி பொங்கல்” ன்னு ஒன்னு இருக்கா?.. இன்னமும் டவுட் ல தான் இருக்காங்க… யாராவது இந்த அறிவு ஜீவி க்கு விளக்கமா சொல்லுங்கப்பா…

========================================================
கவிதா ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்ட ஆரம்பிச்ச பிறகு அடிக்கடி சில்லறை பொறுக்கறாங்க…….அதுல ஒரு வாட்டி மவுண்ட் ரோடு ல சில்லறை பொறுக்கி, செம உள்காயம் பாவம்..வெளியில சொல்ல முடியாத அளவு உள்ளடி…15 -20 நாள் அம்மணிக்கு ஒழுங்கா நடக்க முடியல… அப்ப முதல் மாடியில இருக்க ஆபிஸ்க்கு லிஃட் ல போய்ட்டு வந்துக்கிட்டு இருந்தாங்க.. ஒருநாள்..ஆபிஸ் விட்டு வரும் போது லிஃட் ‘ட தொறந்து உள்ளே போய் கீழ போறத்துக்கு பட்டனை அமுத்த போக…. அம்மணி’ யோட ஒரு பிரண்டு வெளியில நின்னுக்கிட்டு,

“கவிதா…ஏன்… சிரமபடறீங்க.. நீங்க லிஃட்’ குள்ள ஏறி நின்னா போதும், அது தானா கீழ போகும்..எதுக்கு ஸ்விட்ச் எல்லாம் அமுத்துக்கிட்டு….!! “

கவி :………………………..


=============================================================
ரெம்ப டிராஃபிக் இருந்ததுன்னு எல்லாரும் புட்பாத் மேல வண்டிய ஓட்டிக்கிட்டு போக அம்மணியும்… (தேவையா???? ) அவங்க பின்னாடியே போக… புட்பாத் முடியும் போது ஒரு 2 அடி க்கு கீழ ரோடு இருக்கு… போனவங்க எல்லாம் தட்டு தடுமாறி வண்டிய எப்படியோ இரக்கி கொண்டுபோக .. .அம்மணிக்கு தெரியல.. அப்படியே நின்னுக்கிட்டு இருந்தாங்க. .போற வரவங்க யாருமே கண்டுக்கல.. எல்லாருமே.. ஏம்மா நாங்களே அவரசத்துல இருக்கோம் நீ..வேற நடுவுல நின்னுக்கிட்டு ன்னு திட்டிட்டு வேற போனங்க… யாரும் ஹெல்ப் பண்ணாத கடுப்பை ஆபிஸ்’ல வந்து அம்மணி கோவத்தோட புலம்ப…...வழக்கம் போல..

கவி பிரண்டு :- ஏதோ டீன் ஏஜ் பொண்ணுங்க நின்னுக்கிட்டு இருந்தா நாங்க எல்லாம் ஓடி போய் உதவி செய்வோம்……

ஆபிஸ்’ல எல்லாரும் கவிதா;வை பார்த்து சிரிக்க……..

கவி : வழக்கம் போல “ஞே” த்தான்………..


==============================================================
அம்மணிக்கு தான் பொய் சொன்னா பிடிக்காதே… அவிங்க பிரண்டு ஒருத்தர் பொய் சொல்றது பிடிக்காம… செம டென்ஷனா…..

கவி :- உங்க வாயில புழு தள்ள போது பாருங்க….

கவி பிரண்டு :- (செம கூல்’லா) ஹோ.. ரொம்ப தேக்ஸ் கவிதா… நான் அப்படியே சைனா போய் ஒரு பாஸ்ட் புட் கடை ஆரம்பிச்சிடுவேன்….!!

கவி :- “ஞே” த்தான்…..
அதே பிரண்டுக்கிட்ட திரும்பவும் :-

கவி:- நீங்க பொய் சொல்லாம இருக்கணும்னு, நாக்குல வேல் குத்தி போடறேன்னு சாமிக்கு வேண்டிக்கிட்டேன்……

கவி பிரண்டு :- ….. நான் கூட உங்க இம்சை தாங்க முடியலன்னு… முதுகுல டின்’ கட்றேன் ன்னு வேண்டிக்கிட்டேன்…. இரண்டு பேருமா வேண்டுதல நிவர்த்தி செய்யலாமா????

கவி:- டின்’ ஆஆஆஆஆஅ???? (வழக்கம் போல “ஞே” த்தான்…..)


==============================================================
அம்மணி எப்பவும் இவிங்கள பாத்து ஊரே பயப்படுதுன்னு நினெப்புல இருப்பபாங்க. .இவிங்க பிரண்ட்ஸ் யாருமே.. இவிங்கள மதிக்கறது இல்ல… அது தெரியாம… சில சமயம் … இவங்களுக்கு பிடிக்காம ஏதாவது செய்துட்டா மணி கணக்கா திட்டி தீப்ப்பாங்க.. ஓவர் அட்வைஸ் வேற……

ஒருவாட்டி அப்படித்தான் ரொம்ப ஆவேசமா வசனம் எல்லாம் பேசி அவிங்க பிரண்டை திட்ட.. ..

கவி:- இவ்வோ நேரம் திட்டறனே அட்லீஸ்ட் கவனிக்கறீங்களா நீங்க?? கொஞ்சமாது உங்களுக்கு பயம் இருக்கா… ?

கவி பிரண்டு :- அய்யோ…கவி….. நீங்க பேசினத தவிர வேற எதையுமே நான் கவனிக்கல… பாருங்க..பயத்துல… உடம்பு நடுங்குது….. ஹிஹிஹி….…டவுசர் கூட நனஞ்சு போச்சி……..…

கவி:- ……………………… (வேற என்னங்க.. அதே “ஞே’…தான்)


=======================================================
கவி அவங்க பிரண்டு வீட்டுக்கு போனாங்க. .இவிங்க வராங்கன்னு அவங்க பிரண்டோட அம்மா விதம்விதமா சாப்பாடு செய்து வச்சி இருந்தாங்க… அம்மணி க்கு அவங்க அம்மா படற சிரமத்தை பாக்கமுடியாம….

கவி:- ஆன்ட்டி !! நான் ரொம்ப சிரமம் கொடுக்கிறேனா…?!! (அம்மணி என்னவோ… திருப்பி அவங்க…. "இல்லமா. .நல்லா சாப்பிட்டு ரெஸ்டு எடு உன் ஒரு ஆளால எனக்கு என்னமா சிரமம் ன்னு" கேப்பாங்க ன்னு நினச்சாங்க…ஆனா…)

ஆன்ட்டி :- “ஆமா கவிதா… ரொம்ப சிரமமா இருக்கு..பேசமா.. சாப்பிடறத அப்படியே வச்சிட்டு வீட்டுக்கு கெளும்பும்மா…. “ மிச்சமீதியாவது எங்களுக்கு இருக்கட்டும் ன்னு செம சீரியஸா சொல்ல…. “

கவி:- ……………………… (வேற என்னங்க.. அதே “ஞே’…தான்)


=============================================================
அம்மணி ஆபிஸ் ல ஏதோ பிரச்சனை…. இவிங்கள யாரோ செமத்தியா திட்டிட்டாங்க… (அது எப்பவும் நடக்கறது தானே…) கவலையும் கம்பலையுமா.. .வூட்டூக்காரர் ஏதாவது உதவி செய்வாறுன்னு சொன்னாங்க..

கவி:- ப்பா…. நான் ஒன்னுமே தப்பு பண்ணாம என்னோட கிளையன்ட் என்னை “இடியட்” ன்னு திட்டிட்டான்…. . ……

கவி வூட்டுக்காரர் :- ஓ….அவனுக்கும் தெரிஞ்சிப்போச்சா……….

கவி:- …………………….

===============================================================

பீட்டர் தாத்ஸ் :- Imagination is your power house where you can shape your plans and make them a reality.