சென்னை கிரிம்ஸ் ரோடில், ஹெச்.சி.ல் அலுவலகம் இருக்கும் சாலை மிகவும் நெருக்கமான சந்தாக இருக்கும், எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும், சமீபத்தில் ஒருநாள் அந்த சாலையில் செல்லும்போது வண்டிகள் வரிசையாக நெரிசல் காரணமாக நிற்க ஆரம்பித்தன, நானும் என்ன பிரச்சனை என்று எட்டி ப்பார்த்தேன், தொலைவில் இருந்த எனக்கு தெருவின் நடுவில் ஒரு சிறுமி குனிந்து நின்று என்னவோ செய்துக்கொண்டு இருந்தாள், அவள் ஒருத்திக்காக அத்தனை வண்டிகளும் நின்று க்கொண்டு இருந்தன, அவளை புறக்கணித்து போக முடிந்த வண்டிகள் முன்னே செல்ல, நானும் மெதுவாக முன்னே சென்றேன், என்னுடைய ஆர்வம், அந்த சிறுமி என்ன செய்து க்கொண்டு இருக்கிறாள் என்பதிலேயே இருந்தது.

அருகில் சென்று பார்த்தவுடன் அசந்தும், அதிசயித்தும் போனேன்…அங்கு நான் பார்த்தது இன்னமும் எனக்கு வியப்பாக உள்ளது..இப்படியும் நம்மில் சிலரா?.. எனக்கு உடம்பும் புல்லரித்து போனது. அந்த சிறுமியை போன்று நாம் ஒவ்வொருவரும் இருந்துவிட்டால்..இந்தியா எங்கோ சென்று விடும் அல்லவா?..

அப்படி அந்த சிறுமி என்னத்தான் செய்தாள்?... அவள் சாலை ஓர வண்டி கையேந்தி பவன் கடைகளில் ஏதோ ஒரு கடைக்கு சொந்தமான (அ) வேலை செய்யபவளாக இருக்கவேண்டும், அவர்கள் டீ, டிபன், சமையல் பாத்திரங்களை கழுவும் தண்ணீரை கீழே ஊற்றாமல், ஒரு பாத்திரத்தில் சேமித்து வைத்து, அது நிரம்பியவுடன், தெருவின் நடுவே இருக்கும் பாதாளசாக்கடையின் மூடியில் (மூடியையும் திறக்கவில்லை) இருக்கும் ஒரு சிறிய துவாரம் வழியாக , கையுடன் கொண்டு வந்து இருந்த ஒரு பெரிய புனலின் வசதியோடு, நிதானமாக அந்த கழிவுநீரை சாக்கடைக்குள் ஊற்றினாள்.

அவள் அதை ஊற்றிமுடிக்கும் வரை வாகனங்கள் எதுவும் செல்ல முடியவில்லை, அவளும் வாகனங்கள் அவளுக்காக காத்திருக்கின்றன என்ற பதட்டம் இல்லாமல் தன் வேலையை செய்துக்கொண்டு இருந்தாள். எனக்கு என்னவோ நான் இப்படி ஒரு நிகழ்வை வாழ்க்கையின் முதன் முறையாக பார்க்கிறேன்…

எனக்கு தெரிந்து சாலையோர கையேந்தி பவன்கள் எல்லாம், கழிவுநீரை தெருவில் இறைத்துவிட்டு சென்றுவிடுவார்கள். இந்த சிறுமியின் செய்கையும், சமூகம் சார்ந்த பொறுப்பும் எனக்கு வியப்பை அளித்தது…இப்படியும் இருக்கிறார்களா?.

அணில் குட்டி அனிதா:- அட அம்மணி இன்னும் பிளாக்’கை விட்டு போலையா? சாவித்திரி அக்காவை சாவி ஆக்கி திருப்பி உள்ள வந்துட்டாங்க...போல...??!! ஹீம்…! அடுத்து யாராவது பெரிய அளவுல பிரச்சனை பண்ணாம அடங்கமாட்டாங்கன்னு நினைக்கிறேன்…..பாக்கலாம் எத்தனை நாளைக்குன்னு…. சரி.. கவி பாத்த குட்டிப்பாப்பா மாதிரி நீங்களும் யாராவது சாக்கட தண்ணியை தெருவில ஊத்தறத பாத்த… இந்த ஐடியாவை சொல்லுங்க...சூப்பர் ஐடியா ப்பா…முதல்ல கவி வீட்டுக்கிட்ட இப்படி ஏதாவது இருக்கான்னு பாத்து எல்லாருக்கும் அம்மணி செலவுல ஒரு புனல் வாங்கி தரனும். நான் ஒரு ரவுண்டு போய்ட்டு வரேன்……..


பீட்டர் தாத்ஸ் :- The highest wisdom is kindness