என்னுடன் பணிபுரிந்த தோழியிடமிருந்து, மனம் நொந்து ஒரு ஈமெயில் வந்து இருந்தது, அவளுக்கு போலியோ தாக்குதலினால் இரு கால்களும் நடக்க இயலாது, இருப்பினும், 3 சக்கர வாகனத்தை வைத்துக்கொண்டு வேலைக்கு வந்துக்கொண்டு இருந்தாள், கால்களுக்கு அவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஷீ அணிந்து நடப்பாள், என்னிடம் பலமுறை அந்த ஷீ’ வை போட்டு நடப்பதால் வரும் கடும் வலியையும் , அதனால் அவள் கால்களில் ஏற்பட்ட வடுவையும் காட்டியிருக்கிறாள்.அவளின் வலியை என்னால் எப்போதும் உணரமுடிந்தது,

இருவரும் வேறு வேறு வேலைக்கு மாறி விட்டாலும் தொடர்பு இருந்து வந்தது. அவளுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை. இப்போது 6 ஆம் வகுப்பிலிருந்து 7 ஆம் வகுப்பிற்கு செல்கிறான். கணவர் என்ற பெயருடன் ஒருவர் வீட்டில் இருக்கிறார், அந்த கதையை சொல்லவோ பேசவோ எனக்கு உரிமை இல்லை என்பதால் ஒரு வரியில் முடித்துக்கொள்கிறென். அவர்களின் குடும்பம் இவளின் வருமானத்தில் மட்டுமே நடக்கிறது.

இப்போது அவளின் வயது காரணமாகவும் தொடர்ந்து வேலை செய்து கால்களில் சுத்தமாக வலுவிழந்ததினாலும் அவளால் முன்பு போல் வேலைக்கு செல்ல இயலவில்லை, மேலும் சென்னை போக்குவரத்து நெறிசல் காரணமாக அவளால் வெகு தொலைவில் கிடைக்கும் வேலையையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, நடைமுறை பிரச்சனைகள், உடல் பலவீனம், வீட்டு சுமை, குழந்தையின் கல்வி என்று அவளால் சமாளிக்க முடியவில்லை.

இப்போது வேலை இல்லாததால், LIC Agent க்கு பயிற்சி பெற்று, என்னிடம் ஒரு பாலிசி எடுக்குமாறு கேட்டாள். நானும் எடுத்து க்கொள்கிறேன் என்று சொன்னேனே தவிர, அவளின் எதிர்பார்ப்புக்கு தகுந்தமாறு என்னால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பதில் அளித்து, பாலிசியை எடுக்க முடியவில்லை. அதற்கு என் தரப்பில் பல காரணங்கள் இருந்தாலும் நானும் முன்பு போல் இல்லாமல் மாறிவிட்டேன் என்று தான் நினைக்கிறேன். யார் எந்த நேரத்தில் அழைத்தாலும் அவர்களுக்கு பதில் அளித்தும், உதவிகள் செய்தும் வந்தேன், இப்போது ஏனோ அப்படி செய்ய முடியவில்லை என்பதை விட, செய்யும்படி என் மனநிலை இல்லை என்று சொல்லலாம். இந்த சுயநலத்தின் காரணமாக என் தோழியின் அழைப்பை மிக எளிதாக எடுத்துக்கொண்டு விட்டேன்.

ஆனால் அவளோ, மனம் நொந்து போய், நான் இறந்து போகலாம் என்றே நினைக்கிறேன், எல்லோரையும் போல் எனக்கும் கால்கள் இருந்தால் நான் இப்படி ஒரு துயரை சந்திதிருக்கமாட்டேன் என்று வேதனையாக எழுதியிருந்தாள். அவளின் இயலாமை அவளை இத்தனை வருடங்கள் கழித்து இப்படி யோசிக்கவைத்துவிட்டது. அதற்கு நானும் ஒரு காரணமக ஆகிவிட்டேன்.

இதை படிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள், அவள் குழந்தையின் கல்விக்கு இந்த வருடம் ரூ. 7000/- தேவைப்படுகிறது, உங்களால் முடிந்த அளவு அவளுக்கு பண உதவி செய்து குழந்தையின் கல்விக்கு உதவுமாறு கேட்டு க்கொள்கிறேன். ஏதாவது உதவும் குழுக்குள் அந்த குழந்தையின் வருங்கால படிப்பிற்கான செலவையும் எடுத்துக்கொள்ளுமானால், அவளின் சுமை 80% குறைந்துவிடும். அவள் Data Entry வேலையும் செய்வாள், தேவைப்படுபவர்கள் அவளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், இன்சூரன்ஸ் பாலிசி தேவைப்படுபவர்கள், அவளை தொடர்பு கொள்ளூங்கள், இல்லையேல், எனக்கு ஈமெயில் அனுப்பினால், நான் அவளை உங்களை தொடர்பு கொள்ள செய்வேன்.

தோழியின் பெயர் : சாவித்திரி
குழந்தையின் பெயர் : நவீன்
அவளின் தொடர்பு எண் : 9884269499
என் ஈமெயில் : gkavith@gmail.com

அணில் குட்டி அனிதா:- ஸ்ஸ்ஸ்…நிம்மதியா இருந்தேன்ங்க.. இந்த அம்மணி எழுத வரமாட்டாங்கன்னு நிம்மதியா இருந்தேன்…யாரோ தோழியாம்..சென்டிமென்ட்டா தாக்க, இவங்க நம்மள தாக்க வந்துட்டாங்கடோய்…. சரி மக்கா… பணம் அனுப்பறவங்க எல்லாம், சாவித்திரி அக்காவை நேரா கூப்பிட்டு கொடுங்க… கவிதா’ ஏதோ புது பிசினஸ், ஆரம்பிக்கறமாதிரி எனக்கு சந்தேகமாவே இருக்கு… உங்களுக்கு??????


பீட்டர் தாத்ஸ் :- It is not enough to have a good mind; the main thing is to use it well.