சங்கு ஊதனாங்களா...இல்லையான்னு- தொடருது............

பாவம் அம்மணிக்கு டிரிப்ஸ் ஒரு கையில ஒரு stage க்கு மேல ஏத்த முடியாம..போக......இன்னொரு கைக்கு மாத்தினாங்க. என்ன பிரச்சனைன்னு தெரியாமையே 3 நாளும் போய்ட்டு இருக்கு.. நம்ம கொசு அண்ணனால், மலேரியா வந்திருக்குமோன்னு ஒரு சந்தேகமே தவிர அதுவும் டெஸ்ட் ரிசல்ட் எதிலும் பாஸிட்டிவா இல்ல..பாஸிட்டிவா வரும்னு யூகத்திலேயே இத்தன டிரீட்மெண்டும் நடக்குது..................(ஒரு வேல சிக்குன் குனியவாக்கூட இருக்கலாம் னு நான் guess பண்னேன்..எதுவா இருந்தாலும்..அம்மணியோட இம்சை இல்லாம கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கும் எனக்கு......ஹி..ஹி...)

4வது நாள்....குடுத்த மருந்து, மாத்திரையால அம்மணி நிலைம ரொம்ப மோசமாயிடுத்து. மனசு இறங்கி, அவங்க hubby, டாக்டர் தம்பதிகளை ரொம்ப request பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாரு. வந்த பிறகு தான் தெரியுது, over dosage ஆல், அம்மணி வயிரெல்லாம் வெந்துபோய், தண்ணி க்கூட குடிக்க முடியாம ஆயிடுத்து. ஒரு ஸ்பூன்(ஆமாங்க நெசந்தான்) ஜீஸ் குடிப்பாங்க.. அப்படியே வாந்தி எடுப்பாங்க.. எதுவுமே உள்ளே போகல.. பேசற திராணிக்கூட இல்லாம போச்சு. திருப்பி டாக்டர் கிட்ட வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க.. வாந்தி எடுக்க பயந்துக்கிட்டு liquid food ஒரு ஸ்பூன், 2 ஸ்பூன் ன்னு குடிக்க யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க.......சாப்பிடவே முடியாம நிலைம ரொம்ப மோசமாயிடுத்து.........

அவங்க வூட்டுக்காருக்கு..ஒரே டென்ஷன்.. .வீட்டுல வந்து படுத்துக்கிட்டு ஓவரா சீன் போட்டு இம்சை கொடுக்கறாளே என்ன செய்யறதுன்னு தெரியல...... சரி என்ன ஆனாலும் ஆஸ்பித்திரியிலேயே ஆகட்டும்னு.. அம்மணிய நைஸ்ஸா ஏத்தி விட்டாரு.. எப்படி இருந்த உன்னை இப்படி ஆக்கிட்டாங்களேமா.. வா..போய் சண்டைப்போட்டுடு வரலாம்னு.. சொன்னதுதான்.. “சண்டை” ன்ற ஒரு வார்த்தைய கேட்டவுடனே...எங்க இருந்துதான் அம்மணிக்கு வீரம் வந்துதுன்னே...தெரியல.....” ஆமாங்க..விட கூடாது வாங்க போலாம்...” வரிஞ்சிக்கட்டிகிட்டு கிளம்பிட்டாங்க........

திருப்பியும் அதே ஆஸ்பித்திரி........அதே நர்ஸ் அக்கா.......ஆனா இந்த தரம் டாக்டர் அம்மா இல்ல டாக்டர் ஐயா..பார்த்தாரு.. கவிதாவோட கேஸ் ஹிஸ்ட்ரி (3 நாள்ல சாதரண ஜுரம் ஹிஸ்ட்ரி ஆயிடுத்து) படிச்சிட்டு, பெட்ல வந்து படுங்கம்மான்னாரு.
டாக்டர் “என்னமா ஆச்சு.?.”ன்னு .

(கவிதா செம கடுப்புல இருக்காங்க..அவங்கள பாத்து இந்த மாதிரியா அவரு கேப்பாரு)..

“ ம்ம்..சங்கு ஊதல ..அது ஒன்னுதான் பாக்கினாங்க..”

.டாக்டர் காதுல சரியா விழல.. உடனே..அவரு அவங்க hubby பக்கம் திரும்பி,

மேடம் என்ன சொல்றாங்க சார்?..
மேடத்தோட படத்துக்கு மால போடற நிலைமைக்கு கொண்டுவந்ததுக்கு நன்றின்னு மனசுல சொல்லிக்கிட்டு..

“டாக்டர், நீங்க ஹிஸ்டிரிய படிச்சிங்க..அவ்வளவு drugs கொடுத்த நீங்க அசடிட்டி கன்ட்ரோல் பண்ண ஒரு மருந்து கூட கொடுக்கல..அதனால அவங்களால தண்ணி க்கூட இப்ப குடிக்க முடியாம கஷ்ட படறாங்க..”

“ஓ..is it, அசடிட்டி கன்ட்ரோல் பண்ண மருந்து கொடுக்கலையா? “ஏன் கொடுக்கல.?”.

கவிதா வீட்டுகாரரும் டென்ஷன் ஆயிட்டாரு.. ‘என்ன டாக்டர் என்ன கேட்கறீங்க?”

டாக்டர், கவிதாவின் வயிரை அவரால் முடிந்த அளவுக்கு அழுத்தி (சோதனை பண்றாராமா) பார்க்க..

கவிதா..“டாக்டர்..ப்ளிஸ்..ரொம்ப வலிக்கது..”

டாக்டர்..”எங்கமா வலிக்குது..இங்கயா..இங்கயா..” என்று வயிறை ஒரு இடம் விடாம அழுத்த...

கவிதா..”டாக்டர்ர்ர்ர்ர்ர்..ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..நீங்க அழுத்தறதுதான் வலிக்குது..” விட்டுடுங்க...” என்றார்கள்

டாக்டர் ”இல்லமா..உங்களுக்கு என்ன problem ன்னு தெரிய வேண்டாம..பொருத்துகோங்க...”

“ டாக்டர் நான் தான் சொன்னேனே அசடிட்டி problem“ என்றார் கவிதாவின் வீட்டுக்காரர்.

“ஓ is it soo..” சரி சரி வாங்க உட்காருங்க.. உங்களுக்கு நான் புரியரமாதிரி சொல்றேன் “ ன்னு சொல்லிட்டு, நர்ஸ் அம்மாவை கூப்பிட்டு “அந்த 106 நம்பர் ரூம் ரெடி பண்ணுங்க..மேடம் ரொம்ப சீரீயஸ்யா இருக்காங்க..அட்மிட் பண்ணனும்..”

சார், மேடம் நிலைமைய பார்த்தா ஒரு 2 days complete rest and observation ல இருக்கணும், அதுக்கு அப்புறம் தான் என்ன ப்ராப்ளம்னு சொல்லவே முடியும்.....அதனால் நான் அவங்கள அட்மிட் பண்ணிக்கிறேன்..

(கவிதா “அது எப்படி புருஷனும் பொண்டாட்டியும் ஒரே மாதிரி பேசி, ஆளமடக்கறீங்க” ன்னு மனசுலதான் நினைச்சிக்கிட்டாங்க.. வெளியில சொல்லவா முடியும்.)

“இல்ல அட்மிட் எல்லாம் வேண்டாம் டாக்டர், அசிடிட்டிக்கு மருந்து கொடுங்க போதும், அவங்கள வீட்டுல வச்சே நாங்க பார்த்துக்கறோம் “ என்றார் கவிதா வீட்டுக்காரர்.

கொஞ்ச நேரம், டாக்டரும், கவிதா வீட்டுக்காரரும் அட்மிஷன் பற்றி விவாதத்தில் இறங்க.. கவிதா..என்னடா இது வம்பா போச்சு திருப்பியும் நம்மை அட்மிட் பண்ணிடுவாங்களோன்னு பயந்து போய்,..........

“ Excuse me டாக்டர்,” என்று சொல்லிவிட்டு.........முடியாட்டாலும்....:ஓட்டமும் நடையுமா..ஆஸ்பித்திரிய விட்டு வெளியில வந்து..........அவங்க வண்டி பக்கதுல வந்து நின்னக்கிட்டு...ஸ்.ஸ்ஸ்ஸ்… தப்பிச்சேன்..ன்னு பெருமூச்சி விட்டாங்க..!

அப்புறம் என்ன, அசடிட்டிக்கு மருந்து சாப்பிட்டு, கொஞ்சம் கொஞ்சமா நார்மல் ஆனாங்க.....இதில இன்னும் ஒரு வாரம் ஆயிடுத்து….

ஆஸ்பித்திரியிலிருந்து வந்த பிறகு அம்மணி நினைச்ச அளவுக்கு நிஜமாவே இளைச்சுதான் போய் இருந்தாங்க.. கொஞ்சம் நார்மல் ஆன பிறகு office போனவங்கள..”யாரு நீங்க” இந்த சீட்டுல வேற ஒருத்தங்க இல்ல இருந்தாங்க..நீங்க நுயூ அப்பாயின்மெண்டான்னு” கேக்கற அளவுக்கு ஆளு இளைச்சு போய் இருந்தாங்கன்னா..பாருங்களேன்... 

இதான வேணாங்கறது.. எப்படி இருந்த கவிதா இப்படி இளைச்சாங்கன்னு சொன்ன நான்..அவங்க actual weight என்னன்னு சொல்லலையேன்னு நீங்க கேட்கறது புரியுது.. அதெல்லாம் கேக்கப்பாடது........ஏன்னா சொல்லவே முடியாது.....அம்மணி இன்னமும் அடங்காம........கொசு அண்டாத ஜிம்’மா கண்டுபிடிச்சி போய்க்கிட்டு தானே இருக்காங்க.. ......

யாருக்காவது வெயிட் குறையனும்னா.. தனி மெயில் அனுப்புங்க.......... அந்த ஆஸ்பித்திரி அட்ரஸ் தரேன்.....நேரா போனீங்கன்னா..அவங்களே அட்மிட் பண்ணிடுவாங்க.. அப்புறம் வெயிட் என்ன வெயிட்..............டேரக்ட் சங்குதாண்டீஈஈஈஈஈஈஈஈ.........................

பீட்டர் தாத்ஸ்:- Everything you need for a happy life is within yourself.