டூ விலரிலிருந்து இறங்கிய அனுஷாவின் முகத்தில் சோகம் அப்பி கிடந்தது. ரமேஷ் இடம் எதுவும் பேசாமல், தளர்ந்த நடையுடன் வீட்டை நோக்கி நடந்தாள்...

ரமேஷ் வண்டியை பார்க் செய்து கொண்டே அவளையே பார்த்தான்...

அவள் திரும்பவில்லை......

பெருமூச்சுடன் தெருவிலேயே சிறுது நேரம் நின்றுவிட்டு.....பேசித்தானே ஆகவேண்டும்.. என்று வீட்டுக்குள் நுழைந்த ரமேஷின் முகம் இறுகி, சிவந்து கிடந்தது.

அனுஷா...நேரே ரூமுக்குள் சென்று ஹேன்ட் பேகை வைத்துவிட்டு, அங்கிருந்தே குரல் கொடுத்தாள்.. “அம்மா.. சூடா காஃபி தரியா.. ரமேஷ்’சும் வராரு அவருக்கும் சேர்த்து போடு..”

ரமேஷ் கேட்டுக்கொண்டே ஹால் சோபாவில் சோர்வாக உட்கார்ந்தான்......ஏன் இந்த பொண்ணு இப்படி நம்மை இம்சை கொடுக்கிறா......?!! மனசுக்குள் பேசிக்கொண்டான்.

-------------------------------------------------------------------------------
அது ஒரு முன்று அறைகள் அட்டேச்ட் டாய்லெட் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு, அனுஷா வீட்டையும் சேர்த்து மொத்தம் 2 வீடுகள் ஒரு தளத்தில் இருந்தன, மொத்தம் 8 வீடுகள். இவர்கள் முதல் தளத்தில் இரண்டாவது வீட்டில் இருந்தனர்.

மூன்று அறைகளில் ஒன்று அனுஷா’வுடையது, மற்றதில் ஒன்றில் அவளின் அண்ணன் சந்துரூ’ வும் இன்னொன்றில் அவளின் அம்மா பார்வதியும் இருந்தனர்.
இதை தவிர ஒரு டைனிங் அட்டேச்ட் மெயின் ஹால், கிட்சென், ஒரு சின்ன சாமி அறை, காமன் டாய்லட், காற்றோட்டமான தெருவை பார்த்த பால்கனி.

--------------------------------------------------------------------------------

முகம் கழுவி துடைத்துக்கொண்டே ரூமை விட்டு வந்த அனுஷா.. ரமேஷை பார்த்தாள்.....” என்ன மனசுக்குள்ளையே திட்டறீங்களா?.. ரூம்ல டவல் வச்சி இருக்கேன்.. முகம் கழிவிட்டு வாங்க..” புன்முறவலோடு கிட்சென்க்குள் சென்றுவிட்டாள்.

கிட்சென்னில் பார்வதியம்மா காப்பியை ஆற்றிக்கொண்டே “என்னடி..சண்டையா?..”

“இல்லமா.. கல்யாணம் பத்தி பேசவேண்டாம்னு சொல்றேன் திருப்பி திருப்பி அதை பத்தியே பேசி...............................வேற ஒன்னும் இல்ல............”

ரமேஷ்................... “தோசை செய்யறேன்.. தொட்டக்கறத்துக்கு என்ன வேணும்.. சொல்லுங்க....”அனுஷா கிட்சனிலிருந்து குரல் கொடுத்தாள்.

“இல்ல காப்பி போதும்........ நான் கிளம்பறேன்.. மீனு..வெயிட் பண்ணுவா..”

கிட்சென்லிருந்து எட்டி ரமேஷை பார்த்தாள்.....”எப்படியும் நீங்க வீட்டுக்கு போக இரண்டு மணி நேரம் ஆகும், அதுவரைக்கும் பசிதாங்க மாட்டீங்க.. சாப்பிட்டுட்டு போங்க.....”

“ஏண்டி ! ஒன்னுமே நடக்காதது மாதிரி இப்படியே எவ்வளவு நாள் நீ இருக்க போற....”. ரமேஷ் குரலை உயர்த்தி கத்தினான்..

“கதவு திறந்து இருக்கு ரமேஷ்”..............அனுஷா திறந்திருந்த கதவை கண்களால் சுட்டி காட்டினாள்.

ரமேஷ் வேகமாக எழுந்து..கதவை அடித்து சாத்தினான்..

“ஆண்ட்டி..! அவ நடந்துகறதையும் பேசறதையும் பாத்திங்களா.. இவளால நான் தினம் தினம் சாகறேன்.. கொஞ்சமாவது என்னைப்பத்தி நினைக்கறாளா..? இவள பாக்க பாக்க எனக்கு ஏன் நான் உயிரோட இருக்கேன்னு தோனுது.. “

“இப்பத்தான் மீனு வெயிட் பண்ணுவா’ ன்னு சொன்னீங்க.. அதுக்குள்ள சாகறத பத்தி பேசறீங்க..?!! “ அனுஷா சிரித்தாள்..

“ஏண்டி என்னை இப்படி கொல்ற.....”

“மீனு மட்டும் இல்ல.. இப்ப குட்டி ரமேஷ் வேற வெயிட்டிங்........” .அனுஷா சந்தோஷத்துடன் சொன்னாள்.

அதிர்ச்சியான பார்வதியம்மா இவளை உள்ளே இழுத்தார்..... “அனு..நெஜமாவா?.. என்னடி சொல்ற..?? “

“ஆமாம்மா.. வரும் போது தான் சொன்னாரு..........”

“என்னடி இப்படி செய்துட்டாரு...... இனிமே என்னடி பண்றது....” பார்வதியம்மா குரலில் கவலை தோய்ந்து இருந்தது.

“இதுக்கு முன்னாடி மட்டும் நாம என்ன செய்ய முடிஞ்சிது .............??”

பார்வதியம்மா’வும், அனுஷாவும் கிட்செனை விட்டு வெளியில் வந்தார்கள்,

அனுஷாவிடமிருந்து காப்பியை வாங்கி கொண்ட ரமேஷ், ஆண்ட்டி என்ன கேட்க போகிறார்களோ என்று அவரின் முகத்தையே பார்த்தான்.

“என்ன ரமேஷ், அனு சொல்றது...............”பார்வதியம்மா இழுத்தார்கள்..

“ஆமா..ஆண்ட்டி!................. மீனு மாசமா இருக்கா.. நெத்திக்கு தான் கன்ஃபார்ம் ஆச்சி........”

“என்ன ரமேஷ்..... நீங்க சொன்னது எல்லாம் என்ன ஆச்சி....” .கவலையுடன் பார்வதியம்மா கேட்க..........

........................................ரமேஷ் மெளனம் சாதித்தான்....................

அனுஷா இடைமறித்து.. “அம்மா... என்னமா நீ?.............விடு..விடு அவரை எதுவும் கேட்காதே ..... ரமேஷ் கேட்டேன் இல்ல.. தொட்டுகறத்துக்கு என்ன வேணும்..”

“ஏதாவது செய்...................”

பார்வதியம்மா.. அவருடைய ரூம்மிற்குள் சென்றுவிட..அனுஷா. .டிபன் செய்ய கிட்சென்க்குள் சென்றாள்.

ரமேஷ்ஷும் பின் தொடர்ந்தான்....

“அனு.!. ஏன் அனு நீ கூட என்னை புரிஞ்சிகலையா? “

“ம்ம்..நல்ல புரிஞ்சிக்கிட்டேன்..........அதான்...மீனா மாசமா இருக்காங்ளே..............”

“அனு..அது.. வந்து..............கல்யாணம் ஆன நடக்கற ஒரு சாதாரண விஷயம்.... “

“ஓ................சாதாரண விஷயம்.........” அனுஷா கரகரத்த குரலில் இழுத்தாள்..

“அனு..............”

“ப்ளீஸ்...ரமேஷ்....நாம இதை பத்தி பேச வேண்டாம் நீங்க சாப்பிட்டுட்டு கிளம்புங்க..”

“அனு.......................”

“ஹால்’ல போய் உட்காருங்க.. வாங்க..இங்க..” விடுவிடுவென்று ஹாலுக்கு அவனை இழுத்து வந்துவிட்டு, டிவி யை ஆன் செய்து..... ரிமோட்டை அவன் கையில் கொடுத்துவிட்டு கிட்சனுக்குள் சென்றுவிட்டாள்.

ரமேஷ், டிவியை ஆஃப் செய்துவிட்டு திரும்பவும் கிட்சனுக்கு வந்தான்......

“அனு.............................”

அனுஷா தேங்காயை சிறு துண்டுகளாய் வெட்டிக்கொண்டே”............ம்ம்....”

“என்னை நீயும் புரிஞ்சிக்கலையா? “

நிமிர்ந்து............அவனை நேராக பார்த்தாள்................

அவளின் பார்வையை சந்திக்க முடியாமல்.....முகத்தை கவிழ்த்தான் ரமேஷ்...

திரும்ப தேங்காய் வெட்டுவதை தொடர்ந்த அனுஷா.. “ரமேஷ்..இப்ப புரியுதா.. என்னை உங்களால நேராக்கூட பாக்க முடியல..........நீங்க என்க்கிட்ட இப்படி இருக்கனும்னு நான் நினைக்கல...... உங்களை இப்படி பார்க்கவும் பிடிக்கல.....கல்யாணம் ஆயிடுத்து, இப்ப குழந்தையையும் வர போகுது..... சந்தோஷமா இருங்க..

.............................

“என்னை விட்டுடுங்க.. நான் இப்படியே இருக்கேன்.. இன்னொருத்தர கல்யாணம் செய்துக்கிட்டு, நிச்சயமா...புள்ள எல்லாம் என்னால பெத்துக்க முடியாது...........உங்களுக்கு கல்யாணம் ஆகி 4 மாசம் ஆச்சி..... நான் நல்லாத்தானே இருக்கேன்.. அப்படியே எப்பவும் என்னால இருக்க முடியும்..”

“அனு.....அறிவில்லாம பேசாத.. நீ இப்படி இருந்தா நான் எப்படி நிம்மதியா இருப்பேன் சொல்லு.. எனக்காக எனக்காக ன்னு சொல்ற.. என்னை நிம்மதியா இருக்க விட மாட்டியா? “

திரும்பி ரமேஷ்ஷை உற்றுப்பார்த்தாள்...... “எது உங்களுக்கு நிம்மதி..... நான் கல்யாணம் செய்துக்கறதா?.. ஏன் இத்தன சுயநலமா இருக்கீங்க..? நீங்க கல்யாணம் செய்துக்கிட்டதால நான் நிம்மதி இல்லாம இருக்கேனே..அது தெரியலையா உங்களுக்கு?................”

ரமேஷ்ஷின் செல் சினுங்கிது........

நம்பரை பார்த்துவிட்டு, போனை ஆன் செய்து காதில் வைத்தான்.. இறுக்கமான குரலில்....”சொல்லு...........”

....................................

“இங்கத்தான் நுங்கபாக்கத்தில் இருக்கேன்.. “

....................................

“இன்னும் ஒன் ஹவர்ல அங்க இருப்பேன்....”

....................................

“அனுவை ட்ராப் பண்ண வந்தேன்..”

....................................

“இல்ல.....அவளுக்கு தனியா போக தெரியாது.. நான் தான் கூட்டிட்டு வரணும்... “
....................................

“அவளுக்கு என்னை விட்டா யாரும் இல்ல... “

.......................................

“இங்க பாரு மீனா..நீ சொல்ற படி எல்லாம் என்னால இருக்கமுடியாது............... நான் என்ன செய்யனும்னு நீ சொல்லாத.............”

அனுஷா.. வேகமாய் வந்து ரமேஷ்ஷின் செல்’லை பிடுங்கி கட் செய்தாள்.....

ரமேஷ் ! “உங்க மனசுல என்ன நெனச்சிக்கிட்டு இருக்கீங்க?.. என் மேல இருக்கற கோவத்தை ஏன் அவங்கக்கிட்ட காட்டறீங்க..? .அவங்க மாசமா இருக்காங்க. .இப்ப போயி அவங்க கிட்ட இப்படி எல்லாம் பேசிக்கிட்டு.....சாஃப்ட்டா பேசுங்க ப்ளீஸ்.....”

போன் திரும்பவும் சினுங்கியது...

“ம்ம்..சொல்லு மீனா........”

..................................

“இல்லமா........... நான் கட் பண்ணல...”

....................................

“தெரியலமா.. தானா தான் கட் ஆயிடுத்து..”

....................................

“இல்லமா நீ பண்ணுவேன்னு நான் பண்ணல...”

....................................

“இதோ..கிளம்பிட்டேன்.. வந்துடறேன்.. வீட்டுக்கு வந்து பேசறேன்.. “

....................................

“மீனு..... சொல்றேன் இல்ல....................வந்துடறேன்ன்னு சொல்றேன் இல்ல..”

....................................

“ரமேஷ் அனுஷாவை வேதனையோடு பார்த்துக்கொண்டே”

.......................
“ம்ம்..சரி’

.........................

“சரி..வரேன்”

...................................

“இல்ல...நீ தான் முக்கியம்”

............

“ம்ம்......... தெரியும்”

....................

“சரி”

..............

“இன்னையோட லாஸ்ட்”

......................

“சரி”

...........................

போனை நிறுத்திய போது அவன் கண்கள் கலங்கியிருந்தது.............. சிறிது நேர மெளனத்திற்கு பின்............

“அனு.......! தப்பு நான் மட்டும் பண்ணல .....என்னைக்கு நான் வேற ஒருத்திய கல்யாணம் பண்ணிக்கறேன்ன்னு சொன்னேனோ அன்னைக்கே நீ உறுதியா வேண்டாம்னு சொல்லியிருக்கனும்................. நீ மட்டும் அப்படி சொல்லியிருந்தா......”

இடைமறித்தாள் அனுஷா.. “சொல்லியிருந்தா..? நான் சொல்றத நீங்க கேட்டு உடனே.. என்னை கல்யாணம் செய்துக்கிட்டு இருப்பீங்க இல்ல............”

“இல்ல அனு.. வேற ஒருத்திய கல்யாணம் செய்துக்கொள்ளாமல் இருந்து இருப்பேன்.........”

“பழசை பேசி உங்கள் டைம்யும் வீணாக்காதீங்க என்னோட டைம்யும் வீணாக்காதீங்க.. இத பத்தி நிறைய நாம பேசிட்டோம்.... அதுவும் மீனா மாசமா இருக்கும் போது.. இப்ப அதை பேசி ஒரு பிரயோசனமும் இல்ல..........”
சரி.. ரமேஷ், .”....இன்னொரு விஷயம்............நாளையிலிருந்து நீங்க வரவேண்டாம்..நான் தனியா வர பழகிக்கிறேன்.. முடிஞ்சா வண்டி வாங்கிக்கிறேன்.........”

ரமேஷ் அதிர்ந்தான்...........”அனு!! .....ஏன்??...........உன்னை தனியா எல்லாம் விட முடியாது.............. .”

“விடனும்.....”

“முடியாது அனு.. நான் மீனாவை சமாளிச்சிக்கிறேன்.......”

“வேணாம்.......ரமேஷ். தனியா வர நான் பழகித்தான் ஆகனும் .....வரவேண்டாம்னா வேணாம்..”

“இல்ல நான் வருவேன்......................”

திரும்ப திரும்ப பேச விரும்பாமல், அனுஷா..டிபனை டைனிங்க்கு கொண்டு சென்றாள்.

ரமேஷ்.......................... ! “சாப்பிட வாங்க”. ........

முறைத்துக்கொண்டே வந்தான்... அனுஷா வாயை திறக்கவில்லை..........மெளனமாக இருவரும் சாப்பிட்டார்கள்...............

ரமேஷ் கிளம்பினான்..... அனுவை பார்த்து...... “நீயும் எனக்கு செய்த ப்ராமிஸ் எல்லாம் மறந்துட்டு மாறிக்கிட்டே வர...................... செத்து போயிடுவேண்டி.. ‘

.......................... அனுஷா மெளனம் சாதித்தாள்

ரமேஷ்ஷின் சத்தத்திற்கு பார்வதியம்மா உள்ளிருந்து வந்தார்கள்.......’அனு..என்ன ஆச்சி..??..... ரமேஷ், நீங்க கிளம்புங்க.. அவ இப்படித்தான்னு உங்களுக்கு தெரியாதா? “

ரமேஷ்.....”டேக் கேர்.............. மீனாக்கிட்ட பிரச்சனை எதுவும் வேணாம்.. திச் ஈஸ் யுவர் ப்ராமிஸ் ஆன் மீ............” .அனுஷா அவன் கண்களை பார்த்து ஒவ்வொரு வார்தையாக சொன்னாள்

....................... ரமேஷ் அனுஷாவின் பார்வையை தவிர்த்து..........................”ஆண்ட்டி வரேன்.................”

“வரவேண்டாம்னு சொன்னேன்............” அனுஷா வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்தாள்..

‘வருவேன்...................................” ரமேஷ்ஷும் அதே அழுத்தத்தில் சொல்லிவிட்டு சென்றான்........


நிழல் தொடரும்....................