நம்ம ராம் பாருங்க ரொம்ப தீவரிமா யோசிச்சி. என்னையும், அணிலையும் சிக்கவச்சியிருக்காரு.. சரி..சுடர் தானே ஏற்றி வச்சா போகுதுன்னு கிளம்பியாச்சி..

ராம் ஆனா சின்ன குறை.. அணில நீங்க ஒரு கேள்வி கூட கேக்கலன்னு கோச்சிக்கிட்டு உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு உட்கார்ந்து இருக்கு...நீங்களே சமாதானம் செய்துக்கோங்க..அதுக்கிட்ட நான் ரொம்ப வச்சிகறது இல்ல.. டூ மச்சா பேசும்.. அப்புறம் நான் டென்ஷன் ஆவேன்..தேவையா??

1) இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. குறளுக்கு அர்த்தம் தெரியுமாக்கா?
ம்ம்.. தெரியாமையா?.. என்னவோ உள்குத்து இருக்கு இருந்தாலும் பரவாயில்லை.. சொல்லறேன். நல்ல பழம் இருக்கும் போது காயை யாராவது சாப்பிடுவார்களா?. நல்ல வார்த்தைகள் இருக்கும் போது கடினமான வார்த்தைகள் யாராவது பேசுவார்களா?..

ராம் ஆனா....எல்லாருக்கும் நல்ல கனிந்த பழம் வாழ்க்கையில் கிடைக்கறது இல்லை அப்படிங்கறது உண்மை. அது கிடைக்காதவர்கள் மட்டுமே அதை உணர்வார்கள். கிடைத்தவர்கள் கிடைக்காதவர்களை பார்த்து எப்போதும் ஏன்..இவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று மிக எளிதாக கேட்டுவைப்பார்கள்..

2) அணிலு அணிலுன்னு சொல்லுறீங்களே... அது உங்க மல்டிப்பிள் பர்சனாலிட்டியிலே ஒன்னா?
நிறைய நண்பர்களுக்கு அந்த சந்தேகம் இன்னுமும் இருக்கு.. சில விஷயங்கள் சஸ்பென்ஸ் ' ஆ இருந்தாத்தான் நல்லா/சுவையா இருக்கும்.. அணில் யாருன்னு தெரியாம இருக்கட்டுமே...

3) இப்போ இருக்கிற வட்டத்தை தாண்டி நீங்க ரசிக்கிற விஷயங்கள் என்னென்ன?
கணக்கில் அடங்காதவை.. வானம் அளவுன்னு சொல்லலாம்.. அதற்காக நான் புலம்புவதில்லை... இன்னமும் நிறைய காலங்கள் இருக்கிறது நான் ரசிக்க என காத்திருக்கிறேன்.

4) இன்னவரைக்கும் நீங்க நினைச்சு நினைச்சு சிரிக்கிற சம்பவம் என்ன? (அதை படிச்சா எங்களுக்கும் சிரிப்பு வரணும்)
ம்ம் இருக்கு, என்னுடைய சித்தப்பா பையன் கழுதையை பார்த்ததே இல்லை. நாங்கள் ஒரு முறை டூர் போன போது, கன்னியாகுமரியில் எல்லோரும் ரூம்மில் ரெடியாகி கொண்டிருக்க நானும் அவனும் கிளம்பி வெளியில் வந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்த போது ஒரு கழுதையை பார்த்தான். அவனுக்கு ஒரு 7-8 வயது இருக்கும். கழுதையை பார்த்ததே இல்லை என்பதால் மிக ஆச்சிரியப்பட்டு ஆர்வத்தோடு, அதன் அருகில் சென்று சுற்றி சற்றி பார்த்தான்.. அது பின்புறம் இருந்து உதைக்கும் என்பதும் அவனுக்கு தெரியாது. இவனும் அது பின்னால் நின்று அதன் அழகை ரசிக்க, இவனின் இம்சை தாங்க முடியாமல் கழுதை கோபம் வந்து..பின்னாலிருந்து உதைக்க ஆரம்பித்தது.. .உதை வாங்கி அழுது கொண்டே... அக்கா இது என்ன பின்னாடி இருந்து உதைக்குது...? என்று. என்னிடம் கேட்க, எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. அவன் கழுதையிடம் உதை வாங்கியதை எல்லோரிடமும் சொல்லிவிட, டூர் முழுதும் அவனை எல்லோரும் அதை வைத்தே கிண்டல் செய்து ஒரு வழி ஆக்கி விட்டடர்கள்.

இன்னொரு சம்பவம், என்னுடைய மாமா ஒருவர், இருட்டில் அவசரத்திற்கு ஒதுங்க.. இருட்டில் படுத்து கொண்டிருந்த மாடு எழுந்து இவரை உதைத்து விட்டு ஒட ஆரம்பிக்க இவருக்கு கோபம் வந்து அதை அடிக்க துரத்தினார். ஆத்திரத்தோடு இவர் ஓட , அது ஒட.....ஒரு கட்டத்தில் அவர் கட்டியிருந்த லுங்கி கழண்டு விழ.. உள்ளே அவர் ஒன்றுமே போடவில்லை என்பதை உணராமல் அதை அடிக்கும் வெறியுடன் ஓட..இவருக்கு பின்னால் எங்கள் வீட்டில் இருப்பவர்கள் ஓடி அவர் மானத்தை காப்பாற்ற வேண்டியாதாகி விட்டது.

லுங்கி அவிழ்ந்து விழவது கூடதெரியாமல் ஓடிய மாமாவை நினைத்தால்.. ஹைய்யோ .ஹைய்யோ..

இந்த 2 நிகழ்ச்சிகளை எப்போது நினைத்தாலும் எனக்கு சிரிப்பை அடக்க முடியாது.


5) ஒரு கற்பனை:- டயம் மிஷின் கிடைச்சு அதிலே நீங்க பின்னோக்கி போகலாமின்னு சொன்னா எந்த வயசை தேர்த்தெடுப்பீங்க?
சில சமயங்களில் என் அப்பா என்னிடம் திரும்ப வந்துவிட்டது போல் கனவுவரும், அப்படி அவர் வந்தால் என் குழந்தை அவரிடம் வளர வேண்டும் என்று அதிகம் நினைத்ததுண்டு....அதனால் எனக்கு குழந்தை பிறந்ததிலிருந்து - நேற்றுவரை பின்னோக்கி செல்ல ஆசைப்படுகிறேன்...

Photobucket - Video and Image Hosting
நம்மை கேட்டவருக்கு நாம பதில் சொல்லியாச்சி, இப்ப நாம யாரை சுடர் ஏற்ற சொல்லலாம்னு அணிலும் நானும் சேர்ந்து டிஸ்கஸ் பண்ணோம்.அதான் வாரா வாரம் ஒருத்தர கேப்பங்கஞ்சி குடிக்க வைக்கரோமே அதே மாதிரி சுடர் ஏற்ற வைத்து விட்டால் போகுது என்று.. பட்டென்று நமக்கு மாட்டியவர் மா.சிவகுமார் அவர்கள். இவரிடம் சுடர் ஏற்ற வர சொல்லி கேட்க நினைப்பவை

1. எப்படி உங்களால், எழுத்து, வியாபாரம், நண்பர்கள், பிற பொது பணிகள், வெளி ஊர் பயனம் என்று எல்லாவற்றையும் ஒருவித நிதானத்துடன், தடையில்லாமல் செய்ய முடிகிறது?.

2. உங்களிடம் அதிகம் கவனித்தது, உங்களின் perfection. அதற்கு காரணம் என்ன என்று எதை சொல்வீர்கள். உங்களின் கல்விமுறை, வளர்ப்பு முறை, இல்லை உங்களை நீங்களே தயார் செய்து கொண்டீர்களா?

3. உங்களின் எல்லா பதிப்புகளுமே..மிக சிறந்தவை, பயனுள்ளவை என சொல்ல கூடிய வகையில் அமைந்துள்ளது. ஆனால் அதிகமாக யாரையும் சென்று அடையவில்லை என்பது எங்களுடைய கனிப்பு. பயனுள்ள பதிவுகளை படிப்பவர்களை அதிகமாக்க என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?.

4. ராகவன் சார் - பதிவுகளுக்கு பின்னூட்டமே இல்லை அதனால் போலி ஆரம்பித்தேன் என்று கூறியுள்ளார் மற்றும் அவரை குறை கூறி வரும் பலர் போலி பெயர்களில், போலி பதிவுகள், பின்னூட்டங்கள் போடுகிறார்கள்- இது பற்றி உங்கள் கருத்து.

5. எப்போதும் சீரியசாக இருக்கும் உங்களை, நகைசுவை பதிவு ஒன்று போட சொன்னால் போடுவீர்களா?.. போடுவேன் .என்றால் எப்போது?. இல்லை என்றால் ஏன்?

அணில் குட்டி அனிதா:- இதை கேக்க யாருமே இல்லையா? கவிதாக்கிட்ட நான் இருக்கேன் தான் பேரு ஆனா என்னைய யாருமே கண்டுகறது இல்ல.. ராமு அண்ணாச்சி பாக்கும் போது மட்டும் என்ன அணிலு எப்படிக்கீறன்னு? ன்னு கேக்கறீங்க ஆனா.. பாருங்க என்னைய ஒதுக்கி வச்சிட்டு அம்மணிய மட்டும் கேள்வி கேட்டு இருக்கீங்க.. நல்லா இல்ல சொல்லீட்டேன்.. எங்க தல..கைப்புள்ள இருந்து இருந்தா இப்படி ஒரு நிலைம எனக்கு வந்து இருக்குமா?.. ம்ம்..ப்ளாகர்க்கு வந்ததவிட..ஒரு பைலட் ஆவோ..இல்ல..ஒரு பிரைம்மினிஸ்டராவோ ஆகி இருக்கலாம்.. ஆகயத்துல பறந்தும்/ சோனியா மேடம் சொல்லறத கேட்டாவாது சந்தோஷமா இருந்து இருப்பேன்.. இங்க வந்து அசிங்கப்பட்டு போய் கிடக்கேன்.. ம்ம்..எங்க. இனிமே தொடர் உண்ணாவிரதம் இருந்தாவது என்னோட பலத்தை காட்டப்போறேன்..... (ஆனா இது கவி வீட்டுல மட்டும் தான்.. உங்கவீட்டுக்கு வந்தா ஒரு வாய் சோறு போடுங்க சாமியோவ்!!!)..

பீட்டர் தாதஸ் :- No problem can withstand the power of sustained creative thought.