இந்தியாவிற்கு வருவதையும், இந்தியனாக என் சிந்தனை இருக்க வேண்டாம் என்பதில் உறுதியாகவும், பெரியாரின் தாசனாக... அறிவும், அழகும்,(தரண் இது மட்டும் பொய்) கூடவே அதிகபடியான குசும்புக்கும், நக்கலுக்கும் சொந்தமான.. "எழுத்து புயல்" தரண் அவர்கள் நம்மிடையே இன்று மாட்டிக்கொண்டார்.. இல்லை இல்லை நாங்கள் தான் அவரிடம் மாட்டிக்கொண்டோம்... இதோ அவரின்.. வார்த்தையாலேயே நம்மை கிழிக்கும் பதில்கள் -

அணில் குட்டி அனிதா:- தரண் எப்பவும் என்னைய ரொம்ப கிண்டல் பண்றதால நான் அவரை கேள்வி கேட்க மாட்டேன்..எனக்கும் அவருக்கும் சரிப்பட்டு வராது..அம்மணி நீங்களே கேட்டுக்கோங்க..நான் அப்படி ஓரமா உக்காந்துகறேன்..!!

வாயைப்புடுங்கற ரவுண்டு

கவிதா :-வாங்க தரண் ! Welcome to the show " கேப்பங்கஞ்சி கவிதா & அனிதா"? நீங்க ஷோ முடிஞ்சி போகும் போது கண்டிப்பா கஞ்சி குடிச்சிட்டு தான் போகனும். உங்களை பற்றி சின்னதா ஒரு intro கொடுங்களேன் ....
Build up லாம் பலமாத்தான் இருக்கு அதே சமயம் பயமாகவும் இருக்கு ..காரணம் சொல்வது கவிதா என்பதால். .

தமிழ்மணத்தில் நிறைய இந்தியர்கள் இருக்கிறார்கள் பலரை எனக்குப் பிடிக்கும். இந்தியனாக இருப்பவர்களை எல்லாம் நான் எதோ வெறுப்பது மாதிரி பேசுவது தவறு.

நான் பெரியார் தாசன் இல்லை.எனக்கென்று சொந்த சிந்தனைகள் உண்டு. பெரியார் அடிமைகளை விரும்புவதில்லை.

எழுத்து புயலா..இதெல்லாம் ஓவரு build up...hahahahaha....புயல் கரையை என்றாவது கடக்கும் அல்லது வலுவிழந்து போகும்..தென்றலாக வாழ்வோம் மின்னலென சிந்திப்போம், பூகம்பம் போல் காரியம் முடிப்போம்.

படிப்பு- B.E in ECE , M.E in A.Electronics and doing PhD in MPEG-4 PART-10 AVC/H.264, Multi view video coding. Intro about my
research

இன்னும் 20 துகளில் நிற்கும் இளைஞன்..

கவிதா:- நீங்கள் தாய்வான் நாட்டு மக்களிடம் கற்று கொண்ட சில நல்ல விஷயங்கள் ?
தாய்வானில் நான் ஏற்றுக்கொண்ட பல கொள்கைகள் நடைமுறை வாழ்க்கையில் இருக்கிறது .இவர்கள் மனிதம் மதத்தை விட பெரியது என்பதை பெரியார் இல்லாமலே உணர்ந்திருக்கும் மக்கள் .பெரியார் இருந்தும் உணராத மாக்கள் அதிகம் நம் நாட்டில். உலக வரைபடதில் ஒரு புள்ளியாக தெரிந்தாலும் மக்களின் மனது உலக வரைபடத்தை விட பெரியது. Semiconductor துறையில் Taiwan ஒரு Leader. அமைதியான அழகான உலகத்தர வசதிகள் கொண்ட நாடுதான் தாய்வான். இந்த
வீடியோ சொல்லும் தாய்வான் யார் என்பதை.

கவிதா- தாய்வான் நாட்டு பெண்கள் பற்றி
ஒரே வரியில் 28-21-26 (கலாச்சார காவலர்கள் கிளம்பிடாங்கய்யா).
முக்கிய விசயம்: அழகான பல பெண்கள் பொறாமை இல்லாமல் நெருங்கிய தோழிகளாக இருக்கிறார்கள்.(நம்ப ஊரில் அய்யோ அ ய்யோ...தமாசு....)

கவிதா:- தரண், இந்த பொறாமை விஷயம் நம்ம ஆண்களுக்கும் உண்டு..சும்மா தமாசு கிமாசுன்னு டென்ஷன் பண்ணாதீங்க...சரி..ஆண்/ பெண் கற்பு என்பது ?
நீங்க இதை குஷ்பு, ராமதாஸ் மற்றும் திருமாவளவனிடம் கேட்க வேண்டிய கேள்வி..hahahah...Virginity is not a Dignity it's a lack of oppourtunity...என்று சொல்ல கேட்டிருக்கிறேன். ம்ம்..சரிங்க..என்னை பொறுத்த வரைக்கும் கற்பு என்பது
அவரவர்களின் தனிப்பட்ட விசயம். விவாதிக்கவோ தீர்ப்பு கூறவோ தேவையில்லாத விசயம்.
இங்கே பார்க்கவும்..

கவிதா:- நட்பு, உறவுகள், பாசம் என்பதின் யதார்த்தமான உண்மை என்ன?
ஒவ்வொரு பொதுநலத்திற்கு பின்பும் ஒரு மிகப்பெரிய சுயநலம் ஒளிந்திருக்கிறது.

கவிதா:- நீங்கள் இதுவரை எனக்கு எழுதிய பின்னூட்டங்களை கொண்டு - இந்தியாவின் சில பழக்க வழக்கங்களை மிக வன்மையாக எதிர்க்கிறீர்கள் என்று புரிந்துக்கொண்டேன்..- அதற்காக ஒரு இந்தியனாக நான் இருக்க விரும்பவில்லை என்று நீங்கள் நினைப்பது சரியா ?
கேள்வி தவறு. ஓரு சராசரி இந்தியனின் மனநிலையில் வாழவிருப்பமில்லை.

கவிதா:- தந்தை பெரியாரின் புரட்சி சிந்தைனைகளில்- உங்களுக்கு பிடித்தவை சில.. எங்களுக்காக

Periyar சொன்னது: நான் மனிதனே! நான் சாதாரணமானவன்,மனதில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள்.
.நான் யார்?நான் எனக்கு தோன்றிய, எனக்குச் சரியென்று படுகிற கருத்துக்களை மறைக்காமல் அப்படியே சொல்லுகின்றேன். இது சிலருக்குச் சங்கடமாகக்கூட இருக்கலாம். சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம். என்றாலும் நான் சொல்வது அத்தனையும் ஆதாரத்தோடு கூடி உண்மைக் கருத்துக்களே தவிர பொய்யல்ல. .அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் தேவைக்கும் பொருத்தமில்லாத காரியங்கள் பழக்கத்தின் பேராலோ, வழக்கத்தின் பேராலோ, தெய்வத்தின் பேராலே மதத்தின் பேராலே, சாதி வகுப்பின் பேராலோ மற்றெதன் பேராலே நடத்தப்படக் கூடாது. கடவுள் சென்னது, மகான் சொன்னது, ரிஷி சென்னது, அவதார புருடர்கள் சொன்னது என்று பார்க்கின்றானே ஒழிய, தன்புத்தி என்ன சொல்லுகிறது என்று பார்ப்பதே இல்லை. மூட நம்பிக்கைகளைப் பகுத்தறியாமல் பின்பற்றியதாலேயே உழை ப்பாளி அடிமையாகவும், சோம்பேறி ஆண்டானாகவும் இருக்கும் நிலை வந்தது. மாறுதலைக் கண்டு அஞ்சாமல், அறிவுடைமையோடும் ஆண்மையோடும் நின்று எதையும் நன்றாய் ஆராச்சி செய்து, காலத்திற்கும் அவசியத்திற்கும் தக்க வண்ணம் தள்ளுவன தள்ளிக் கூட்டுவன கூட்டித் திருத்தம் செய்ய வேண்டியது பகுத்தறிவுடைய மனிதனின் இன்றியமையாத கடமையாகும்.

கவிதா:- உங்கள் சிந்தனையும், சொல்லும் நன்றாக இருக்கும் பட்சத்தில் ஏன் நீங்கள் தொடர்ந்து எழுதுவதில்லை.
ஏதோ எழுத வேண்டும் என்பதற்ககாக எழுதுவதில்லை...சர்வாதிகாரம் சனநாயக முறையில் கடைபிடிக்கப்படுவதால் நான் என் பதிவுகளை தமிழ்மணத்தில் இணைப்பதில்லை மற்றபடி நேரம் ஒதுக்கி எழுத முயற்ச்சிக்கிறேன். திராவிட வலைத்தளத்தில் எழுத சில விசயங்கள் இருக்கிறது. செயலலிதா ஆட்சியில் இருந்தால் காமெடியா இருக்கும் ..அம்மனி வேற இல்லையா அதான்....எனக்கு நிகழ்கால நடப்புகளை அலசுவதுதான் நிரம்பபிடிக்கும்

கவிதா:- தமிழ்மணம் அரசியல் பற்றி - உங்கள் கருத்து
வெளிப்படையான அரசியல் ok. அனானி கள் பெயரில் அரசியல் செய்வது சில பிரபலாமன பதிவர்கள் என்பதை உனரும்போது....கோபம் வருகிறது என்று சொல்வேன் என்று எதிர்பார்க்காதீர்கள்...அவர்களுக்காக பரிதாபப்படுகிறேன்..இந்திய hypocrite கலாச்சாரத்தின் முகவரிகள் அவர்கள். தழலாக ஒளி வீசும் சிலரும் இதில் அடக்கம்தான் .

கவிதா :- ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்வதை பற்றி? நன்மை என்ன? பிரச்சனை என்ன?
நக்கலாக சொன்னால்--- ஆணுக்கு நிம்மதி.
நன்மை: தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் உரிமைகள் பாதிக்கப்படாமல்,அவர்கள் அவர்களாகவே வாழும் சுதந்திரம் அதிகம்.பாசம் மற்றும் கலாச்சாரம் என்கிற எந்த போர்வையாலும் ஆணாதிக்கத்தை செலுத்த முடியாத ஒரு வாழ்க்கை.
ஒரு சராசரி இந்திய பிற்போக்கு சிந்தனை உள்ள ஆணோ ,பெண்ணோ இதை முயற்சிக்க வேண்டாம்.

பிரச்சனை: குழந்தை .

கவிதா:-இந்தியாவை வெறுக்கும் நீங்கள், தந்தை பெரியார் என்ற ஒரு இந்தியரின் புரட்சி சிந்தனைகளை பின் பற்றுகிறீர்கள் என்பது தெரியுமா?
இந்தியாவின் மூடப்பழக்க வழக்கங்களைத்தான் வெறுக்கிறேன்.. பெரியார் மிகக்கடுமையாக இந்திய மூடப்பழக்கங்களை எதிர்த்தார் என்பதற்காக இந்தியாவை வெறுத்தார் என்று அர்த்தமா?. RSS, Bajrangthal போன்ற வன்முறையையும் தீவிரவாதிகளையும் உருவாக்கும் இயக்கங்கள் இருக்கும் இந்தியாவை வெறுக்கிறேன். மனிதனை கற்களின்(கடவுள்) பெயரால் கொல்லும் மாக்கள் இருக்கும் வரை வெறுப்பேன் .

பெரியாரின் சிந்தனைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் எனக்கில்லை.
நான் நானாக இருக்கிறேன். பல நூறு வருடங்களுக்கு முன்பும் மனிதன் சாப்பிட வாயைத்தான் உபயோகித்தான். உங்கள் மகனும் வாயால்தான் சாப்பிடுகிறார் உடனே அவரை உங்களை பின்பற்றித்தான் வாயால் சாப்பிடுகிறார் என்று சொல்வீர்களா? .பெரியாரை படிக்கும் போது வியக்கிறேன், மதிக்கிறேன். இன்றைய குளோனிங் மற்றும் லிவிங்டுகெதர் பற்றி அன்றே சொன்னார்.
இங்கே பார்க்கவும்

ரவுண்டு கட்டி அடிக்கும் ரவுண்டு:-

கவிதா:- இந்தியா/ தாய்வான் எந்த நாட்டு பெண்கள் அழகு + அறிவு ?

Dharan: (99.99%அழகு+60% அறிவு= தாய்வான் பெண்கள்), (20% அழகு+ 80%அறிவு= இந்திய பெண்கள்)
P.S: அழகு என்பது முகம் மட்டுமல்ல,Physical maintenance...மிக மிக முக்கியம் திருமணம் மற்றும் 2 குழந்தைகள் பிறந்த பின்பும்.
இங்கே பார்க்கவும்

கவிதா:- உங்களுக்கு இந்தியா என்றவுடன் நினைவுக்கு வருவது?

Democracy and hypocrisy.
இங்கே பார்க்கவும்

கவிதா:- உடல் தானம் அவசியம் - உங்கள் கருத்து
இரு பாலரும் செய்யவேண்டும்...கலாச்சாரம் என்கிற பெயரில் காவிசாயம் பூசக்கூடாது.

கவிதா:- கோபம்/சுயமரியாதை/பணம்/ஒழுக்கம் - இதில் மனிதனுக்கு மிகவும் முக்கிய மானது எது? (வகை படுத்துங்கள்)
சுயமரியாதை உணர்வு உள்ளவனாக இருந்ததால் மனிதம் இருக்கும். மனிதம் போதும் மானுடம் வாழும்.

ஒரு "இந்தியப்பெண்" உங்களுக்கு எதிர்கால மனைவியாக வருவார்களா?
ஒரு பெண் மனைவியாக வருவார். Physical fitness ல் மிகுந்த அக்கறை உள்ளவன் மற்றும் globalization பிடிக்கும்.

கவிதா;- கம்யுனிசம் என்பது?
கம்யுனிசம்(பொதுவுடமை)-நம்மை விட பணக்காரனை பார்க்கும் போது மட்டும் தோன்றும் சிந்தனை

கவிதா:- கலாச்சார சீர்கேடு என்பது?
பொருளாதார ஏற்றதாழ்வுகள்

கவிதா:- புரட்சி பெண்கள் - என்று யாரை சொல்லுவீர்கள்
சுயமரியாதை உள்ள அனைவருமே.

கவிதா:- உங்களை அசிங்கமாக திட்டும் அநாநிகள் பற்றி -
இந்திய hypocrite கலாச்சாரத்தின் முகவரிகள்.

கவிதா:- உங்கள் பொழுது போக்கு ?
I love my research


இன்றிய தத்துவம் தரண் சொல்லியது :- வரவுக்கேற்ப செலவுசெய்ய நினைக்காதே, செலவுக்கேற்ப வரவு வேண்டும் என நினை. நீயும் முன்னேறுவாய் நாடும் முன்னேறும்