இன்றைக்கு நாங்க சந்திக்க போகிறவரை boat ல போய் பார்த்துத்தான் இன்டர்வயூ பண்ணவேண்டியதா இருந்தது.. ம்ம்... ஜொள்ளுவால மிதிக்கற ஜொள்ளுப்பேட்டைக்கு எப்படி நடந்து போகமுடியும்.. YES !!! இன்றைக்கு நம்ம கூட ஜொள்ளுவிட வந்து இருக்கறது.. நம்ம.. பாண்டி... ஜொள்ளூபாண்டி.. தான்..!!! .... அவரு விடற ஜொள்ளுக்கு..பரிசா.. வேற என்ன..நம்ம சூப்பர் கேப்பங்கஞ்சி .....தான்..!! :)

வாயைப்புடுங்கற ரவுண்டு

அணில் :- வாங்க ஜொள்ளு அண்ணே எப்படி இருக்கீங்க..? ரொம்ப நாள் ஆச்சி பார்த்து.. ..
வா அணிகுட்டி !!! நான் இங்கன தானே சுத்திகிட்டு இருக்கேன் லேட்டஸ்டா நம்ம தானைய தலைவிய கொஞ்சம் Replace பண்ண வேண்டிய பணிகள் இருந்ததாலே கொஞ்சம் பிஸி !!

அணில்:- அண்ணே...ஜொள்ளுவிடவே ஒரு ப்ளாக் ரெடிபண்ணி விடாம தொடர்ந்து ஜொள்ளு விட்டுக்கிட்டே இருக்கீங்களே.. எப்படி இது?
அல்லாரும் பண்றதுதானே ! மத்தவங்கெல்லாம் சத்தம்காட்டாம பண்ணிகிட்டு இருக்காங்க நான் அதையே எழுதிகிட்டு இருக்கேன். அதெல்லாம் தானா வருது அணிலு ! என்ன பண்றது ?

கவிதா: பாண்டி..உங்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்க..உங்க படிப்பு, வேலை, குடும்பம் பற்றி நீங்க விருப்பப்பட்டா....
நெம்ப கஷ்டப்பட்டு என்ஜினியரிங் முடிச்சிட்டு இப்போ IT யிலே குப்பை கொட்டிகிட்டு இருக்கேன் !! வேறென்னத்த சொல்ல !

அணில்:-அட அண்ணே...நீங்க.. என்ஜினியரா?.. ம்ம்..நாங்க எல்லாரும்..நீங்க ஜொள்ளு விடறதால Ph.d ன்னு இல்ல நெனச்சிக்கிட்டு இருக்கோம்..!
அட சும்மா இரு அணிலு ! வெட்கமா இருக்கு ! ஆமா ஆராச்சும் எனக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்கறாங்கன்னா சொல்லு ! Dr. ஜொள்ளுப்பாண்டி நல்லாத்தேன் இருக்கு பேரு !!

அணில்:- அது சரி..ஓசி..பட்டம் வாங்க காத்துக்கிட்டு இருக்கீங்க போல.. அதுக்கு நீங்க அரசியலத்தான் சேரனும்.. சரி..அண்ணே..ஜொள்ளுவிட நீங்க..புது புது ஐடியாவா குடுக்கறீங்களே..எப்படி ரூம் போட்டு யோசிப்பீங்களா?
அட இதுக்கெல்லாம் ரூம் போட்டா செலவு என்னாவறது ? அப்படியே லேடீஸ் காலேஜு , IT பார்க்கு , பீச்சு, சினிமாதியேட்டர், ஷாப்பிங் மால் ன்னு அப்படியேக்கா 360 டிகிரியிலே கண்ணை ஓட்டினாவே போதுமே !!

கவிதா:- எப்பவும் ரொம்ப ஜாலியா ஜொள்ளுவிட்டு க்கிட்டு இருக்கீங்களே.. உங்களுக்கு கொஞ்சம் சீரியசாக சமுதாயம், அரசியல் சார்ந்த பதிவுகள், கவிதைகள், கதைகள் போன்றவை எழுத ஆர்வம் இல்லையா?
இதெனாங்க கவிதா கோக்குமாக்கா கேக்குறீங்க ? சமுதாயம் அரசியல் எல்லாம் பேப்பர்ல பார்கறதோட சரிங்க. கவிதையிலயும் கதையிலயும் கொஞ்சம் ஆர்வம் உண்டுங்க !

கவிதா:- ம்ம்...ஜாலிய எழுதற உங்ககிட்ட..சில சீரியஸ் கேள்விகள் கேட்கலாம் என்று நினனக்கிறேன்.. ப்ளாக்ல இப்ப எல்லாம் சங்கங்கள் அதிகமாகிகிட்டே வருது.. இதை பற்றி உங்களின் கருத்து..?!!
சங்கங்கள் ப்ளாக் உலகின் அங்கங்கள் !! இருந்துட்டு போகட்டுமே !!

கவிதா :- சங்கங்கள் உள்ள உறுப்பினர்களுக்கு ஒரு Direct /Indirect support இருக்குன்னு நினைக்கறேன்.. நீங்க அதைப்பற்றி..
அதெல்லாம் கெடையாதுங்க நீங்க வேற ! நம்ம எழுத்தை பிடிச்சவங்க நம்மளை சப்போர்ட் பண்ணுவாங்க அவ்வளவுதான்.

கவிதா:- ஜொள்ளுவிடறது தவிர பெண்ணைப் பற்றி -
என்னைய பொறுத்த வரையிலே பொண்ணுங்க எல்லாருமே ரொம்ப அன்பானவங்க. அவங்களோட எக்கசக்கமான அன்பை சில சமயம் நாமெல்லாம் தப்பா possessiveness ன்னு நெனச்சுக்குறோம். என்னடா இந்த பொண்ணுங்க எதுக்கெடுத்தாலும் பொசுக்கு பொசுக்குன்னு அழுகாச்சியா அழுவறாங்கன்னு நாமெல்லாம் நெனக்கிறோம். நம்ம வள்ளுவர் தாத்தா என்ன சொல்லியிருக்காருனா

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்


அர்த்தம் என்னான்னா “அன்பை அடைச்சு வைக்க முடியாது. கண்ணீரே காட்டிக்கொடுத்துவிடும்.” அன்பு கண்ணா பின்னான்னு நெரம்பி கெடக்குறதாலவோ என்னவோ இந்த பொண்ணுங்க அன்பை அடைச்சு வச்சுக்க முடியாம பொசுக்கு பொசுக்குன்னு அழுதுபுடுறாங்க.அம்புட்டுதேன் ! வாழ்க தாய்குலங்கள் !!

கவிதா:- ம்ம் நான் ஏதோ கேட்டு உங்க வாயை புடுங்களாம்னு நெனச்சா நீங்க ஏதோ அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்’ ன்னு கதை சொல்றீங்க..ம்ம்..பரவாயில்லை Next - ஆணாதிக்கம் பற்றிய உங்கள் பார்வை-
ஆண் அன்பிலே ஆதிக்கம் செலுத்தினால் போதுங்க. இந்த வார்த்தையே ஒழிஞ்சிடும் !

கவிதா:- குஷ்பு கலாச்சாரம் உங்களின் அலசல்
அலசலா ? என்னா கவிதாக்கா இப்படி கேட்டுபுட்டீக? எப்போவாச்சும் துணி துவைச்சா அலசுவேன் அவ்ளவுதாங்கோ !!

அணில்:- அண்ணே..அம்மணிக்கிட்ட இருந்து செம சூப்பரா எஸ்கேப் ஆகறீங்க..ம்ம்..நம்ம தல (கைப்புள்ள தான்) இது தெரியாம.. Net ல எல்லாம் search பண்ணி .......ம்ம்.. இதுக்கு மேல என்னத்த சொல்ல................சரி நாம அம்மணிய ஓரம் கட்டிட்டு 2 nd round க்கு போகலாம்.

ரவுண்டு கட்டி அடிக்கற ரவுண்டு :-

1. ஜொள்ளு பாண்டிக்கு எதிரா ஒரு ஜொள்ளு பாண்டச்சி இருக்காங்க போல? ..
அட ஆமாங்க. ஒரு அம்மணி இருக்காக. எதிரான்னு சொல்லாதீங்க எல்லாரும் நமக்கு ப்ரெண்டுதாங்கோ !!

2. ப்ளாக்ல ஜொள்ளு ...வெளியில...........
வெளியிலே நான் ஒரு Silent ஜொள்ளந்தேன். நான் ஜொள்ளுவிடுறது என் வாய்க்கு கூட தெரியாதுன்னா பார்த்துக்குங்களேன் !!

3. உங்களின் ஜொள்ளின் சாதனையாக நீங்கள் நினைப்பது
அட போங்க இதையெல்லாம் ஒரு சாதனையா கேட்டுகிட்டு. ஆனா ஜொள்ளுப்பேட்டைய படிக்கறவுக நெறையா பேரு என்னோட ப்ளாக் படிச்சுட்டு நல்லா சிரிச்சு ரிலாக்ஸ் ஆனேன்னு சொல்லிட்டு போறதுதான் என்னோட சாதனையா நெனைக்கிறேன். எல்லாரும் சந்தோசமா சிரிச்சிகிட்டே இருக்கனும்கறதுதான் என்னோட ஆசை !

4. இப்படி நீங்க அநியாயத்துக்கு ஜொள்ளுவிட்ட விஷயம் வருங்காலத்துல உங்க மனைவிக்கு தெரிஞ்சா? (கல்யாணத்துக்கு எங்கள கூப்பிடுவீங்க இல்ல)
அட என்னாங்க நீங்க இப்படியெல்லாம் கேட்டு பீதியக்கொளப்பறீங்க ! என்னைய பொருத்த வரைக்கும் மனைவினா ஒரு நல்ல ப்ரெண்ட் மாதிரிங்க. ஒரு நல்ல ப்ரெண்ட் என்னைய புரிஞ்சுக்க மாட்டாங்களா என்ன ?

5. உங்களின் ப்ளாக் பெண் ரசிகைகள் பற்றி - (எங்களையும் சேர்த்துக்கோங்க)
ஆஹா !!! பெண் ரசிகைகள்னு ஏங்க அவங்களை தனிமைப்படுத்தறீங்க? ஜொள்ளை பொண்ணுகளும் ரசிக்கராங்கன்னு எனக்கு புரியவச்சவங்க அவங்க ! எனக்கு ஊக்கம் கொடுத்து மேன்மேலும் ஜொள்ளுவிட வைக்குறாகுளே அவுக அன்புக்கு நான் அடிமை !!

6. உங்களின் வீட்டில் “ஜொள்ளு பேட்டையின்” ரசிகர்கள் யாராவது?
வீட்டிலேயா ? மொதோ மொதலா குங்குமத்திலே வந்த கதைதான் என்னோட பேரை என் வீட்டிலே சொல்ல வச்சது. என் பேரை கேடுபுட்டு எங்கம்மா கேட்டது “என்னடா பேரு இது ஜொள்ளுப்பாண்டி? ன்னு ஆமா ஜொள்ளுன்னா என்னா ஏதாச்சும் பலகாரமா ? “

7. ஜொள்ளுபாண்டியா நீங்க இல்லைனா வேற யாரா இருந்து இருப்பீங்க? யாரா இருக்க ஆசை படறீங்க?
நான் இப்படியேதாங்க இருக்க ஆசைப்படறேன். நான் நானாகவே இருக்க ஆசை.

8. உங்களின் எந்த பதிவில் ஓவர் ஜொள்ளுல எல்லாரும் மிதந்தாங்கன்னு நினைக்கறீங்க?
அப்படியேல்லாம் வகைப்படுத்த முடியாதுங்க. ஆனா நம்மளோட ஜொள்ளாராய்ச்சியெல்லாமே மக்களை ஜொள்ளிலே நல்லா மிதக்க வச்சிருக்கு !! லேட்டஸ்டா
இஞ்சி இடுப்புன்னா என்னாங்கற வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த பதிவில் வந்த இலியானாவைப் பார்த்து பலபேறு சுனாமியா ஜொள்ளுவிட்டதாக அறிகிறேன்.

9. பிடித்த பெண்கள் - எந்த துறையா இருந்தாலும் (ஜொள்ளுவிடாம சொல்லனும் சரியா)
கேள்வியே தப்புங்க !! எப்படி என்னால குறுகிய மனப்பான்மையோட இருக்க முடியும்னு எதிர் பார்கறீங்க? ஒருதவங்களை சொன்னா இன்னொருத்தவங்களுக்கு கோவம் வந்துடாது ? எல்லாப் பெண்களுமே ஏதாசும் ஒரு வகையிலே பிடிச்சு போய்டுறாங்களே !!

10. கடைசியாக உங்களுக்கு பிடிக்காத கேள்வி- பிடித்த ஆண்கள்
அட யாருங்க இப்படியெல்லம் குண்டக்க மண்டக்க போட்டு விடுறது ? எனக்கு பிடிச்ச ஆண் என் அப்பாதான் !

அணில்:-அண்ணே..எங்க அதுக்குள்ள தப்பிச்சி ஓட பார்க்கறீங்க நாட்டுக்கு ஒரு தத்துவம் சொல்லிட்டு போங்க...

ஜொள்ஸ்ஸின் தத்துவம்:- Time is like a river. You cant touch the same water twice because the flow that passed will never pass again. Enjoy every moment of your Life .

அணில்:- நம்ம ஜொள்ளு சும்மா ஜாலியா..சூப்பரா... கவிதாக்கிட்ட.. எங்கேயும் மாட்டிக்காம ரொம்ப சாதூர்யமாக பதில் சொல்லி .. அம்மணி வீசிய வலையிலிருந்து தப்பிச்சி ஓடிட்டாரு.. ம்ம்... அம்மணி எரிச்சல் தாங்கமுடியாம..... உப்புப்போடத..... ஒழங்கா வேகவைக்காத கஞ்சிய அவருக்கு குடிக்க கொடுத்து..... அவரை வேறு விதமா பழிவாங்கிடாங்க ..ம்ம்.. அவரு இனி.. 2- நாளைக்கு .. பாத்ரூம் விட்டு வெளியில வரமாட்டாருங்கோ..