சினிமா பொதுவாக எல்லோருக்கும் எல்லாமும் பிடித்துவிடாது.. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான கதைகள் பிடிக்கும். ஒரு படத்தை சிலர் ஆஹா ஓஹோ என்பார்கள்..ஆனால் அதையே..மற்றவர்கள் சே! என்னைய படம் இது “செம கடி” என்பார்கள். “அன்பே சிவம்” என்ற படத்தை நான் எங்கள் வீட்டில் ரசித்து ப்பார்த்தேன்..என் கணவரும் மகனும், என்னை ப்பார்த்து தலையில் அடித்து கொண்டு போனார்கள்.. அவர்களுக்கு பிடிக்கவில்லை.

இங்குள்ள படத்தை பாருங்கள் . இந்த படம் எங்கள் வீட்டு பக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பில் கட்டும் டேபிளில் கண்ணாடியில் பதிக்கப்பட்ட பூச்சாடியின் படம். இந்த ஹோட்டலுக்கு நாங்கள் மாதம் ஒருமுறையாவது போவோம். இந்த படத்தை பார்க்கும் போது எல்லாம் எனக்கு அது சீனக்காரின் முகம் போல தோன்றும். முதலில் தூர இருந்து பார்த்த நான்..அது சீன க்காரிர் ஒருவரின் முகம் என்று தான் நினைத்தேன். ஆனால் என் கணவர் முதல் முறை பார்க்கும் போதே “லூசே! அது பூச்சாடி” என்றார். நான் நம்பாமல் பக்கத்தில் சென்று உறுதி செய்தேன். இருந்தாலும் நான் பார்க்கும் போது அது சீனக்காரின் முகம் போல த்தான் எனக்கு தோன்றும்.. அதற்கு என் மகனும் “ அம்மா! உனக்கு கண்ணு தெரியலன்னு சொல்லு அதவிட்டுட்டு அறிஜீவிக்கணக்கா பேசதான்னு நக்கல் அடிப்பான்”..


உங்களுக்கு எப்படி தெரியுதுன்னு பாருங்க.. ?!! இது நான் ஏதோ முடிந்தவரை அந்த பூச்சாடி போல் வரைந்தது..

சரி விஷயத்துக்கு வரேன்.. நம்ம தல கைப்புள்ள ஏதோ பெண்ணியத்தை பற்றி சொல்லும் போது அவர் பார்த்த படம் கருத்தம்மா’ விலிருந்து ஒரு காட்சியை அவர் எப்படி ரசித்தார், எந்த நோக்கத்தோடு பார்த்தார் என்றும் சொல்லியிருந்தார். அது ஒரு தப்பா..?!! அத்தனை பேரும் கருத்தம்மா கண்ணீர் கதையை கேட்டு அழத்தான் வேண்டும் என்று கட்டாயம் இருக்கிறதா.. ? என்னங்க ஒருத்தர் படம் அவங்க இஷ்டத்துக்கு பார்த்து ரசிக்க கூட உரிமை இல்லையா?.. அவர்கள் கருத்தை சொல்ல உரிமை இல்லையா?.. எது சொன்னாலும் பின்னால் ஓடி ப்போய் ஒரு பதிவு அவர் இதை இப்படி சொன்னார் அதை அப்படி சொன்னார் என்று போட்டு எந்தவிதமாக நாம் மிக சிறந்த அறிவாளி என்று நிருபித்து கொள்ள போகிறோம்னு தெரியவில்லை..

இந்த பதிவு கூட அவசியம் இல்லாத பதிவுதான்..ஆனா.. எதையுமே அவர்கள் தங்களின் விருப்பு வெறுப்புகளை அவர்கள் மனக்குமறல்களை சொல்லவிட கூடாது என்பது போல் ஒவ்வொரு வார்த்தையிலும் குற்றம் பார்க்கும் நோக்கிலேயே பதிவுகளை படித்து அதையும் ஒரு பதிவாக போடுபவர்களக்காக அஞ்சியே நிறைய பேர் தங்களின் உண்மை கருத்தை சொல்லவே தயங்குகிறார்கள்.. மாற்று கருத்து சொல்லித்தான் நாம் யாரென்றும் நம் சிந்தனை ஓட்டம் இப்படி ப்பட்டது என்றும் அடுத்தவர்களுக்கு புரியவைக்க வேண்டுமா என்ன?..

மேலே சொன்ன படம் மாதிரிதாங்க.. ஒவ்வொருத்தரின் பார்வையும் ஒவ்வொரு விதத்தில் வேறுபடுகிறது...

அணில் குட்டி அனிதா:- சரி, நீங்க படம் வரைவீங்கன்னு சொல்லறதுக்கு ஒரு பதிவா.. ஆமா அடுத்தவங்கள குத்தம் சொல்லதன்னு நீங்க அடுத்தவங்கள குத்தம் சொல்றீங்க.. எந்த வூரு நியாயம் இது .? நல்லவா இருக்கு.. இது உங்களுக்கு.. ம்ம்..... ஆனா..இந்த பதிவுல ஒரு நல்ல விஷயம் இருக்கு அது என்னான்னா... கண்ணு தெரியமா எதையோ பார்த்துட்டு.. எதுவோ மாதிரி தெரியுதுன்னு சொல்லி..அதுல வேற.... நீங்க ஒரு அறிவு ஜீவிய போல பார்க்கறதா நெனச்சிகறீங்க.. பாருங்க.. ஹய்யோ ..ஹய்யோஒ........ தாங்கலடா சாமீ . கவி.. கவி........இங்க பாருங்க..நான் யாருன்னு தெரியுதா..??

பீட்டர் தாத்ஸ் :- Don’t measure yourself by what you have accomplished, but by what you should have accomplished with your ability.