வாங்க.....வாங்க... 19ந்தேதி பதிவர் மீட்டிங் நடந்தாலும் நடந்தது.. தாங்கலடா சாமி.. ஆளுக்கு ஆளு பதிவு ப்போட்டு தாக்கறாங்க.. கவிதா மீட்டிங்ல கலந்துக்கலன்னு எல்லார்க்கும் தெரியும்.. ஆனா.. நான் கலந்துக்கிட்டேன்..அது யாருக்குமே தெரியாது.. யாரோட கேமராவிலும் சிக்காம நாங்க அங்கன இல்ல இருந்தோம்.... இட்லி வடை கிட்ட இருந்து க்கூட எஸ்கேப் ஆயிட்டோம் இல்ல..

சரி ..மேட்டருக்கு வரேன்..... இந்த கூட்டத்துல.. 2 பேருங்க.. ஒருத்தர் எல்லாருக்கும் அருள வழங்குவாரு....... இன்னொருத்தர்.. இந்த டீ.. காப்பியில எல்லாம் கலக்குவாங்களே.. அந்த சீனி..சக்கர...ங்க.. இந்த 2 பேரும் மீட்டிங்குக்கு போறோம்.. கான்டிரிபியூட் வேற பண்றோம்னு ப்ளான் போட்டு.. மதியம் சாப்பிடாம வெறும் வயத்தோட வந்திருந்தாங்க..... சின்ன புள்ள தனமா ஏன்னு மட்டும் யாரும் கேட்கப்படாது.....ஆமா சொல்லிட்டேன்..!! அவங்களுக்கு என்னான்னா.. ஒரு போண்டா..ஒரு வடை..இப்படி ஏதாவது கெடைக்கும் ஒரு வெட்டு வெட்டலாம்னு வந்தாங்க.. ஆனா கெடச்சது என்னவோ........ டீ..யும்.. மேரி ‘யும்..சாரி.......சாரி.......மாரி பிஸ்கட்டும் தான்..

எல்லாரும் டீ 2 ரவுண்டு குடிச்சிட்டு பேசிக்கிட்டு இருக்கற சமயமா ப்பார்த்து, யாருக்கும் தெரியாம இவங்க 2 பேரும் உள்ள போய் 15-20 பேர் குடிக்க இருந்த மிச்சமான டீ ய (முன்ன பின்ன டீ யே பார்க்காத ரேஞ்சுக்கு) மொடக்கு மொடக்கு ன்னு குடுச்சி காலி பண்ணிட்டாங்க.. உஸ்... அப்பாடா............ மதியம் சாப்பாடு கட், அண்ட் நைட் டின்னரும் சாப்பிட முடியாத ரேஞ்சுக்கும் 2 பேரும் ஒரு கட்டு கட்டிட்டு போய்ட்டாங்கப்பா.. ஹி ஹி,,

ஹி ஹி,,..இது எப்படி எனக்கு தெரியும்னு பார்க்கறீங்களா?.. ஹி...ஹி.. இப்படியெல்லாம் நீங்க கேட்டா எனக்கு வெக்கமா இருக்கு இல்ல.... இருந்தாலும் அதை எல்லாம் கொஞ்சம் அப்படி தூக்கி ஓரமா கெடாசிட்டு..சொல்றேன்.. “நானும் அவங்களுக்கு கம்பனி கொடுத்தேன் இல்ல....”

Well, I can show those nice snaps to you all.. but.. you know they will catch me and odachify my hand again.. so.. better..escapeeeeeeee............


குறிப்பு:- அண்ணன் பாலா..அவர்களே...... நற நற வென பல்லை கடிக்காதீங்க.. நீங்க மைலாப்பூர் ல கடிக்கறது மாம்பலத்துல கேட்குது.. அக்கா பொன்'ஸ் அவர்களே.. கோவப்பட்டு பொங்காதீங்க.. பொங்கி யானைய என் மேல உருட்டிடாதீங்க.... நான் ரொம்ப பாவமுங்க........ உங்களுக்கு தெரியாம நடந்த ஒரு விஷயங்கோ இது.. .. தெரிஞ்சிக்கிட்டும்னு சொல்லிடேங்க..சின்ன ஜீவன் என்னை எதுவும் செஞ்சிடாதீங்க.. நான்னா உங்க எல்லாருக்கும் செல்லம் தானே.. :) :) ஹிஹி.... ரொம்ப பிடிக்கும் தானே.. அதுவும் பொன்ஸ் அக்கா' க்கு நான்னா.. உசுரு எனக்கு அப்பவே தெரியும்..........!! :)

(அணித்து போதும் பிள்டப்பு அடங்கு)....

டீ எத்தனை என்ற தகவல் சொன்ன டீ சப்பளையர் வாழ்க....!! வாழ்க..!! வாழ்க !!