இங்கே பெருசுகள் என்று சொல்லுபவர்களின் வயது வரம்பு 40-55 என்று வைத்துக்கொள்ளலாம். MBA வகுப்புகளுக்கு இந்த வயதுக்காரர்கள் அதிகம் வருகிறார்கள். நிச்சயமாக அவர்கள் வயதிற்கு அலுவலகத்தில் மேனேஜர் அல்லது உதவி மேனேஜர் பதவியில் இருப்பார்கள், அதற்கான அனுபவம் இருக்கும் என்றும் நம்பலாம். இவர்கள் அனைவருமே தங்களின் வேலை அனுபவங்களை கொண்டே தேர்வுகள் எழுதமுடியும், அப்படி ஒன்றும் மிக சிரமமான படிப்பும் அல்ல. அப்படி அனுபவ படிப்பு உதவவில்லை என்றால், சரியான அனுபவம் அவர்களுக்கு இல்லை மேலும், அலுவலகத்தில் “ஈ” ஓட்டுகிறார்கள் அல்லது அடுத்தவரின் உழைப்பில் சம்பாதித்து உடம்பையும் வளர்க்கிறார்கள் என்று தெளிவாக முடிவு செய்யலாம்..

பார்த்தவரை, அவர்கள் தேர்வுகளில் பக்கம் பக்கமாக பிட் எழுதிவந்து (இப்படி எழுதும் நேரம், படித்து விடலாம்) காப்பி அடிப்பதை பார்த்தால் மிகவும் வெட்கக்கேடாக உள்ளது. அவர்கள் வயதுக்கும் வகிக்கும் பதவிக்கும் மிக கேவலமான விஷயம் மட்டும் அல்ல அவர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி வளர்ப்பார்கள், வளர்த்து இருப்பார்கள் என்று நினைக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது. அப்படியே அவர்கள் நல்ல பிள்ளைகளை வளர்த்து இருந்தாலும், பிள்ளைகளுக்கு இந்த விஷயம் தெரிந்தால், எத்தனை அசிங்கம். மதிப்பார்களா?

பிட் அடித்து அப்படி பாசாகி என்ன பயன்?? “பிரமோஷன்’ அல்லது சம்பள உயர்வு கிடைக்கும். அப்படி கிடைக்கும் பதவி உயர்வால் ஒரு குறிப்பிட்ட பிரிவில் அதாவது Finance, HR, Systems, Marketing மேனேஜராக ஆகிறார் என வைத்து கொள்வோம். அவருடைய வேலை தரம் எப்படி இருக்கும் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்த வேலை தரத்தினால் அந்த அலுவலகமும், அவர் சார்ந்த வேலை மற்றும் அவரின் கீழ் வேலை செய்பவர்களுன் தரமும் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. இதில் இளைஞர்களையும் இந்த பெருசுகள் முன்னுக்கு வர விடுவதில்லல. அவர்களுக்கு அனுபவம் இல்லை என்று சொல்லிவிடுவார்கள்.

பிட் அடிப்பது மட்டும் இல்லை, assignment , project போன்றவைகளும் காசு கொடுத்து முடித்து விடுகிறார்கள். இதனை பார்த்து சிறுசுகளும், நாமும் காசு கொடுத்து முடித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். நல்ல வழிக்காட்டிகள் இவர்கள். இந்த வயதில் இவர்கள் படிக்கவில்லை என்று யார் அழுதார்கள், இப்படிப்பட்டவர்களால், அந்த படிப்பிற்கே தரமில்லாமல் போகிறது. விழுந்து விழுந்து படித்து சென்று எழுதியவர்களை விட, பிட் அடித்து அதிக மதிப்பெண் எடுக்கும் இப்படி பட்டவர்கள் அதிகமே. உழைப்பை விட குறுக்கு வழிதான் சிறந்தது என உழைப்பவர்களும் நினைத்துவிட்டால்.....?? படிப்பிற்கும், திறமைக்கும், உழைப்புக்கும் மதிப்பில்லாமால் போகிறது என்பது மட்டும் உண்மை.

அணில் குட்டி அனிதா:- அம்மணி பொறாமை பட வேண்டியது தான் அதுக்குன்னு இப்படியா.. ஒன்னும் இல்லீங்க.. அம்மணி கூட exam எழுதினவரு நிறைய மார்க் எடுத்துடாருங்க.. அதான் இந்த புலம்பல்ஸ்..அம்மணிக்கு எப்பவுமே அவங்க தான் அறிவாளி மத்தவங்களுக்கு எல்லாம் அறிவே இல்லைன்னு ஒரு நெனப்பு அதுல எழுதறது தான் எல்லாம்.. exam க்கு போனோமா.. நம்ம பேப்பர பாத்து எழுதினோமான்னு இல்லாம எதுக்கு இப்படி அடுத்தவங்கல பாத்து காதுல போக விடனும்.. நாட்டுல ஏதோ நாலு பேரு நல்லா இருக்கட்டும், நாலு காசு சம்பாதிக்கட்டும் ன்னு ஒரு நல்ல மனசு இருக்கா பாருங்க...... பொறாமை ..விடுங்க.. அம்மணி..நீதி, நேர்மை, நியாயம் ன்னு பேசி நம்ம பொழப்புல மண்ண தூவுவாங்க........... நாட்டுல இப்படி சிலதுங்க இருக்கறதனால தான் நாடு உருப்பட மாட்டேங்குது.. என்னத்த சொல்ல.. தாத்ஸ் நீங்க சொல்லுங்க..... கவிதா புலம்பல்ஸ்க்கு உங்க பீட்டர் எவ்ளோ தேவலாம்............

பீட்டர் தாத்ஸ் : Courage is a special kind of knowledge; the knowledge of how to fear what ought to be feared, and how not to fear what ought not to be feared..