சொந்த காரணமாக நானும் அணில் குட்டியும் எழுதுவதை நிறுத்திவிட முடிவெடுத்துள்ளோம்.

இது வரை எங்களின் எழுத்தை மிக பொருமையுடன் பார்வையிட்டவர்கள் அனைவருக்கும் எங்களுது இதயபூர்வமான நன்றி.யை தெரிவித்துகொள்கிறோம்.

எங்களின் எழுத்து மூலமாக யாரையாவது புண்படுத்தியிருந்தால் தயவு செய்து மறந்தும் மன்னித்து விடுமாறும் கேட்டு கொள்கிறோம்.

நன்றி..

அணில் குட்டி அனிதா :- இங்க பாருடா.. இந்த அம்மணி பண்ற அநியாயத்த......... இவங்க யார் கூடையோ சண்ட போட்டது வேணுமான சொந்த பிரச்சனையா இருக்கலாம்.. இவங்க எழுதறத நிறுத்தறத விட்டுப்புட்டு என்னைய ஒரு வார்த்தக்கூட கேட்காம..என்னையும் கூட சேர்த்துக்கிட்டாங்க..இது எல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல?.. ஆரம்பத்திலிருந்தே..என் மேல ஒரு பொறாம இவங்களுக்கு, எங்க இவங்கள விட பெரிய எழுத்தாளரா ஆயிடுவேன்னு பயந்து.. என்னையும் எழுத விடாம பண்றாங்க.. ம்ம்.. நம்ம தல வேற என்னைய ஹாலிவுட் ரேஞ்சுக்கு கொண்டு போறேன்னு சொன்னாங்களே.. அப்பவே அவங்க கிட்ட போய் வேலைக்கு சேர்ந்து இருக்கலாம்.. இப்ப பாருங்க சோத்துக்கு சிங்கி அடிக்கற நிலைமைக்கு கொண்டு வந்துட்டாங்க.. ம்ம்..இப்படி நம்மல புலம்ப விட்டுடாங்களே..சே..சே.. நிறுத்தறவங்க பேசாம நிறுத்த வேண்டியது தானே.. பெருசா மெஸேஜ் வேற.. என்னத்த சொல்ல.. ம்ம்.. இந்த அம்மணி எல்லாத்திலேயும் கொஞ்சம் ஓவர் தான்...

என்னவோங்க.. அம்மணி எப்படியிருந்தாலும் ரொம்ப பாசமா அவங்க சாக அடிச்ச அணிலா நினைச்சு நம்மல பார்த்துக்கிட்டாங்க...அதனால கொஞ்சநாள் சோத்துக்கு சிங்கி அடிச்சாலும், அவங்கள கொஞ்சம் கூல் பண்ணி திருப்பி வேற வேல ஏதாவது குடுப்பாங்களான்னு பார்க்கலாம்.....

இது வரைக்கும், நீங்களும் நானும் ஒன்னுக்குள்ள ஒன்னா இருந்துட்டோம்..பிரியத்தான் கஷ்டமா இருக்கு... என்ன செய்ய ம்ம்..ஒரு ஓரமா உக்காந்து கொஞ்சம் அழுதுக்கறேங்க..................சரி.. வரேங்க.. எனக்கு ஆதரவு கொடுத்த எல்லாருக்கும் ரெம்ப நன்றிங்கோ.............அழுதுக்கிட்டே நம்ம பீட்டர் தாத்தா கடைசியா என்ன சொல்றாருன்னு பார்ப்போம்..

பீட்டர் தாத்தா :- Be so strong that nothing can disturb your peace of mind.