Blog நண்பர்கள் - இவர்களை பற்றியும், இவர்களின் பேச்சு திறமை, எழுத்து திறமை என சொல்லி மாளாது.. எனக்கு இவ்வளவு திறமையானவர்களை ஒரே இடத்தில் பார்ப்பது மிகவும் ஆச்சரியமாக கூட இருக்கும். அதிர்ஷ்டம் என்று சொல்லுவவர்களே, அது இருப்பதால் தான் இப்படி ப்பட்ட திறமை வாய்ந்த நண்பர்கள் எனக்கு தினந்தோரும் கிடைத்து கொண்டிருக்கிறார்கள் எனலாம். நட்பு பற்றி அவர்களிடம் கேட்டறியும் ஆர்வத்தில், அவர்களை நச்சரித்து எழுதி கொடுக்க சொல்லியிருந்தேன். என் நச்சரிப்பு தாங்க முடியாமல், இதோ நட்பை பற்றி நம் நண்பர்கள் சொல்லியதாவது.....

எஸ்.பாலபாரதி

அம்மா- தொப்புள்கொடி கொடுக்கும் உறவு.
அப்பா- உயிர் கொடுத்த உறவு.
உடன் பிறப்புகள்- ஒரே ரத்தம் என்பதால் வரும் உறவு.
மனைவி- காமத்தின் அடித்தளம் அமைந்த உறவு.
நட்பு--- எங்கோ பிறந்து, எங்கோவளர்ந்து, எந்த ரத்த உறவுமில்லாமல்.. அன்பு செலுத்துகிற உறவு.
சுருக்கமாகச் சொன்னால்....
எங்கொல்லாம் ஒரு மனம் காயப்படும் போது..
அதற்கு ஆதரவாய் இன்னொரு மனம் குரலெழுப்புகிறதோ..
அங்கே இருக்கிறது நட்பு.


பொன்ஸ்

நண்பர்கள் என்பவர்கள் ஆற்றின் கரை மாதிரி. நம் கருத்துகளில், செயல்களில், அதிகம் ஊடுறுவக் கூடாது. அந்தக் கருத்துகளைச் செதுக்குவதற்கு உதவலாம் ஆனால், கட்டாயப் படுத்தும் அன்போ, நட்போ நிச்சயம் போகப் போகக் கசப்பைத் தரும்.

ஜொள்ஸ்

நட்பு
எனக்கு மிகவும் பிடித்த பூ !
---------------------------------------
உன்னை என்
நண்பர்களுக்கும்
என்னை உன்
நண்பர்களுக்கும்
பிடிக்காவிட்டாலும்
நம்மை பிடித்துவிட்டது
நட்புக்கு!

------------------------------------------
உன்னைக் கொடுத்தால்தான்
என்னைக் கொடுப்பேன்
என்ற பேராசையெல்லாம்
காதலைப்போல்
நட்பிற்கு இல்லை !


சீனு

இந்த உலகில் உள்ள எந்த ஒரு உறவும், ஏதோ ஒரு எதிர்ப்பார்புடனோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ உண்டாவது.

கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் இருப்பது திருமணம்
தாய் பிள்ளையை நேசிப்பது, தன் பிள்ளை என்பதால்
தலைவனுக்கும் தொண்டனுக்கும் இடையில் இருப்பது கட்சி என்னும் பந்தம்.

ஆனால், எதையும் எதிர்ப்பார்க்காமல் வெறும் நேசத்தை மட்டுமே கொண்டுள்ளது நட்பு மட்டுமே. காரணம், நண்பர்கள் பெரும்பாலும் ஒரே வயது உள்ளவர்கள். அதனால் ஒரே wavelength இருக்கும். இதுவே,மிக முக்கியமான காரணம், அங்கே எதிர்காலத்தினைப் பற்றின பயம் சுத்தமாக இருக்காது. அதனால், கவலைகள் இல்லை. Hostel Life வாழ்ந்திருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

தேவ்

Friendship is something which nurtures no expectations...It allows you to be yourself... Its the most comfortable feeling mankind has been ever blessed with. Friends are reflections of oneself...Friendship is nothing but just taking a look at yourself in a mirror

தேவ் பதிவிலிருந்து எடுத்த அவரின் சில வரிகள்:-

மேடைப்போட்டு அறிவிக்கத் தேவையில்லை
கடமையென்னும் கயிற்றில் கட்டிவைக்க அவசியம் இல்லை
இதயத்தின் ஒரு ஒரம் போதும் நினைத்தவுடன் பூப்பதற்குஅதற்கு நட்பு என்று பெயர்..

அணில் குட்டி அனிதா :-

பாலா அண்ணே சும்மா கலக்கிட்டீங்க போங்க.., எப்படீண்ணே உங்களுக்கு இப்படியெல்லாம் எழுத வருது..அம்மணிய பாருங்க..எதுக்கும் லாயிக்கில்ல..

பொன்ஸ் அக்கா, என்னக்கா இவ்வளவு அற்புதமா friends நொய் நொய் பண்ணக்கூடாதுன்னு சொல்லீட்டீங்க.. முதல்ல இந்த அம்மணி’க்கு சொல்லுங்க.. எப்படி எல்லாரையும் டார்ச்சர் பண்ணி எழுதி வாங்கி இருக்காங்க பாருங்க.. திருத்தமுடியாது இவங்கள.. ,ம்ம்..

ஜொள்ஸ் அண்ணே, ஜொள்ளுமட்டுந்தேன் தெரியும்னு நெனச்சேன்..கவிதையில நட்பை ஸ்பூன் போட்டு கலக்கியிருக்கீங்க... சூப்பரண்ணே..

சீனு அண்ணே வாங்க..ஏதோ கத/லெக்சர் சொல்ல ஆரம்பிச்சி, ஒருவழியா.. எதிர்பார்ப்பு இல்லாதது நட்பு’ ஒரு மேட்டர ஸ்டாராங்கா சொல்லிடீங்க.. உங்களுக்கு எதிர்பார்க்காம ஒரு நாள் கவிதா ஒரு நல்ல அதிர்ச்சிய குடுக்கப்போறதா சொன்னாங்க..(பெரிசா ஒன்னுமில்ல, அவங்க உங்கள பாக்க போறாங்களாம்.. அவங்கள பாத்துட்டு ஜன்னி, கின்னி வந்துர போது பாத்து..உஷாரா இருங்க)

தேவ் அண்ணாச்சி நீங்க எப்பவும் நம்ம கட்சி, அம்மணிய அலக்கழிச்சி எழுதி குடுத்தீங்க போல இருக்கு, உங்கள மாதிரி 2 பேரு இருந்தா போதுமே..கவிதா ஆட்டம் எல்லாம் தானா அடங்கிபோய்டும் அடங்கி.. ம்ம்..அலய விட்டு சொன்னாலும் ‘நட்பு உன்னின் reflection” சொல்லி அசத்திட்டீங்க..

சரி மத்தவங்க எல்லாம் அடுத்த பதிவுல... so......you are in queue...please wait ..(இத எல்லாரும் தேஞ்சிப்போன ரெக்கார்டர் மாதிரி திருப்பி திருப்பி சொல்லுங்க பார்ப்போம் .. அதுக்குள்ள அம்மணி அடுத்த பதிவு போட்டுருவாங்க)


பீட்டர் தாத்ஸ்:

A friend is one who knows who you are, understands where you have been, accepts what you become, and still gently invites you to grow.
A friend is someone who thinks you're a good egg even though you're slightly cracked.
A friend is someone who knows the song in your heart, and can sing it back to you when you have forgotten the words.