Blog நண்பர்கள் - பீட்டர் தாத்தா இனிமே தத்துவத்துக்கு எங்கேயும் போகவேண்டாம் போலிருக்கிறது.. பாருங்க..நம்ம நண்பர்கள் அத்தனை பேரும் எப்படி அற்புதமா நட்பை பற்றி சொல்லியிருக்காங்க......நண்பர்கள் அத்தனை பேரின் எழுதும் திறமையை பார்த்து பெருமை அடைகிறேன்.. என் வார்த்தைக்கு மதிப்பளித்து எழுதி கொடுத்த கார்த்திக், சந்தோஷ், ரவி, பிரியன், சிவகுமார்ஜி, கைப்புள்ள மற்றும் சிவாவிற்கு என் மனமார்ந்த நன்றி.......

கார்த்திக்ஜெயந்த்:-

"A friend is a beautiful gift you give your self"

It is by chance we met, by choice we became friends... Friendship is a strange thing....we find ourselves telling each other the deepest details of our lives....But what is a friend?
A confidant?
A lover?
A fellow email junkie?
A shoulder to cry on?
an ear to listen?
a heart to feel?...

A friend is all these things...and more. No matter where we met, I call you friend. A word so small...yet so large in feeling...a word filled with deep emotion.

சந்தோஷ்

விதை இல்லை
செடி இல்லை
காய் இல்லை
பழம் இல்லை

ஆனாலும் பூக்குது
இந்தப்பூ!
அட அதுதாங்க நட்பு

செந்தழல் ரவி

எனக்கு நிறைய நண்பர்கள்..எங்க வீட்டில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் ஆச்சர்யம் தான்..காரணம் எங்க வீட்டில் இருக்கும் எங்க அண்ணாவைத்தேடி யாரும் வரமாட்டாங்க..ஆனால் எனக்கு வெவ்வேறு ஊர்களில் இருந்தெல்லாம் நண்பர்கள் வருவாங்க...லெட்டர் போடுவாங்க..போன் செய்வாங்க...

ஒருமுறை - என் 10 வயதில் நானும் என் அண்ணாவும் விடுமுறைக்காக பாட்டி வீட்டுக்கு வந்திட்டோம்..அப்போது குடும்பம் நெய்வேலியில் இருந்தது.. என்னுடைய குட்டி குட்டி பிரண்ட்ஸ் வந்து என்னை தேடி இருக்காங்க...என் அம்மா சொல்லி இருக்கார் - அதாவது அவங்க ஊருக்கு போயிட்டாங்க - காசு இல்லையாம் திரும்ப என்று..எவ்வளவு ஆகும் என்று அவங்க கேட்க - 100 ரூபாய் என்று சொல்லி வைத்திருக்காங்க... என் நன்பர்கள் - ஆளுக்கு ஒரு ஒரு ரூபாயாக சேர்த்து - ஒரு வாரத்தில் 100 ரூபாய் சேர்த்து - என் அம்மாவிடம் கொடுத்திருக்காங்க... அம்மாவுக்கோ - ஆச்சர்யமான ஆச்சர்யம்..இந்த சின்னதுக்கு மட்டும் எவ்வளவு பிரண்டுக என்று..

பிறகு வீட்டைவிட்டு வெகு தொலைவில் - வருடத்துக்கு ஒருமுறை முழு ஆண்டு விடுமுறைக்கு மட்டுமே - வீட்டிற்க்கு வரும் நிலை ஆனது - காரணம் நான் சேர்ந்த புனித வளனார் உள்விடுதி (boarding). அங்கு நேரத்துக்கு படிப்பு - நேரத்துக்கு சாப்பாடு - நேரத்துக்கு - தூக்கம் என்று ஆனபோது - கை கொடுத்தது வேறு யார் - நன்பர்கள் தான்.. எல்லாரும் வீட்டை பிரிந்து சோகத்தில் இருந்தபோது - சேர்ந்து விளையாடி - சேர்ந்து வார்டனிடம் அடிவாங்கி - சேர்ந்து அழுது - இணை பிரியாதவர்களாகிப்போனோம்..

பிற்ப்பாடு கல்லூரியில் - திருச்சியில் - புத்தனாம்பட்டி கல்லூரியில் சேர்ந்தபோது - எந்த விதமான பொழுதுபோக்கும் இல்லாத சின்ன கிராமத்தில் - நன்பர்களை தவிர வேறெதுவும் அறியாதவர்களானோம்...என்ன சாதி - என்ன மதம் - அறியோம் ஆனால் - மனம் ஒத்த அந்த நட்பு... வார்த்தைகளால் விவரிக்கயியலாதுங்க..சேர்ந்து சினிமாவுக்கு போய் - சேர்ந்து தம் அடித்து - சேர்ந்து தண்ணியடித்து என இங்கோ வேறு விதமான இணைகள் பிறகு வேலை தேடும் படலத்தில் - ரங்கனாதன் தெருவில் - எட்டுக்கு எட்டு அறையில் - சரியாக எட்டு பேர் வசித்தபோது - ஆந்திரா மெஸ்ஸில் - இரண்டு சாப்பாடு வாங்கி - ஆறுபேர் கிர்ந்துண்டபோது -இந்த நட்பு ஒரு புதிய பரிமாணத்தை அடைந்தது.. பிறகு அவர் அவர் ஒர் வேலையில் செட்டில் ஆனபிறகு - இமெயில் - போன் - சாட், வார இறுதிகளில் மீட், புத்தாண்டு கொண்டாட்டங்களில் கொஞ்சம் ஜாலி என்று இது ஒரு பரிமாணம்...

ஆனால்..

எனக்கு அவன் இருக்காண்டா...என் நன்பன் இருக்காண்டா...நான் எப்போ போனாலும் - என்னிடம் காசு இருந்தாலும் இல்லைன்னாலும் என்னை வெச்சு சோறு போடுவாண்டா என்று ஒரு எண்ணம் வருது பாருங்க...அது ஒரு விதமான தன்னிறைவுங்க.... பொருளாதாரத்துல இல்லை.. மன நிறைவாதாரத்துல...

பிரியன்


பாய்மரக்கப்பல் வாழ்க்கையில் நம்மை அன்பால் செலுத்தும் துடுப்பு தாய் , சரியான திசையினில் செலுத்துவது தந்தை உறவு.நம்மை தாங்கி நிற்கும் மரம் இறைவன்.இவர்கள் கூட கைவிட்டுவிடும் ஒரு நிலையில் , கடலில் தத்தளிக்கும் நிலையில் கையில் கிடைக்குமே ஒரு மரக்கட்டை அது நட்பு.

பெண் நட்பை பொறுத்தவரை: எந்த நண்பி கடைசி வரை காதலியாகாமல் இருக்கிறாளோ அவள் நண்பி.

என் வீட்டில் ஒரு புத்தம் புது
பூ பூக்கிறது!
வந்து நீயே
பறித்துக் கொண்டால்
நீ நண்பி!
பறித்து நான்
தரும் வரை காத்திருந்தால்
நீ காதலி!

மா.சிவகுமார்


நட்பு என்பது என்னைப் பொறுத்த வரை எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், உண்மையான நட்பு ஒன்றை பல கட்டங்களில் பெறும் வாய்ப்புகள் கிடைத்தன.

பள்ளியில் கிடைத்த நண்பன், அவன் வேறு பள்ளிக்குப் போய் விட்ட பிறகு ஏற்பட்ட வெறுமை, பல ஆண்டுகளாக நட்புகள் தவிர்த்து வாழ்ந்த பாலைவன நாட்கள், கல்லூரியில் கிடைத்த ஒரு நட்பு, அப்புறம் வேலையில் சேர்ந்த பிறகு மீண்டும் வெறுமை. பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகச் சிறந்த நண்பனைக் கண்டு கொண்டு இன்று வரை, தொலைவாகப் போய் விட்டாலும், இளைப்பாறும் நிழலாக இருக்கும் சுகம்.

ஆமாம், என்னைப் பொறுத்த வரை நட்பு என்பது இளைப்பாறும் இடம். பாசாங்குகளை எல்லாம் துடைத்துப் போட்டு விட்டு முகமூடிகளை எல்லாம் கழற்றி விட்டு நாம் நாமாக இருக்கும் இடம் நட்பு. எந்த விதக் கேள்விகளும் இல்லாமல் நிபந்தனையற்ற அன்பு நட்பில் ஒன்றுதான் கிடைக்கிறது. இன்றைக்கும் என்னுடைய நண்பனுக்குத் தொலை பேசி என்ன வேண்டுமானாலும் பேசி மனதைக் கொட்டி விடும் சுவாதீனம் இருக்கிறது. அதுதான் நட்பின் கொடை. பல மாதங்கள் கழிந்து சந்தித்த பிறகு பிரியவே இல்லாதது போல பேச்சு தொடர்வது இந்த உறவில் மட்டும் நடக்கும் அற்புதம்.

இதை(நட்பை) விரிவு படுத்தி உலகெங்கும் இத்தகைய உறவாக மாற்றுவது சாத்தியம் என்று தோன்றுகிறது.

பெயர் வெளியிட விரும்பாத நண்பர்

எல்லா எல்லைகளையும் கடந்தது நட்பு என்கிற காலம் போய்..
நட்புக்கும் ஒரு எல்லை உண்டு என்கிற காலத்தில் வாழ்கிறோம...கடன் நட்பை முறிக்கும் என்கிற வாசகம் சொல்லும் நட்பின் எல்லையை...நட்பு என்பது முள் செடியில் இருக்கும் ரோஜா, கண்னில் இருக்கும் கருவிழி என்பதெல்லாம--நம்முள் இருக்கும் யாதர்த்தத்திற்கு நாம் போட்டுக்கொள்ளும் முகமூடிகளே...

Friendship = Friendship

சந்தோஷத்தை தரும் பொய்யை விட உண்மை தரும் வலி மிகவும் இன்பமானது யாதர்த்தமானது....எதிர்பார்ப்பிற்கும் யதார்த்தத்திற்குமான பதில்கள்தான் வெற்றிகளும் தோல்விகளும்........இதுதான் வாழ்க்கை என்று எடுத்துக்கொள்வதை விட இதுவும் வாழ்க்கை என்பது யாதர்த்தம்...

இங்கு காதலியின் தோல்வியை காதலின் தோல்வியாக சொல்லும் இளைஞர்கள் ஏராளம்....

தன் இயலாமையை சமுதாயத்தின் இயலாமையாக பார்க்கும் மக்கள் ஏராளம்..
ஏன் இந்த முரண்பாடு??? யதார்த்த வாழ்க்கைக்கு முரணாக வளர்க்கப்பட்டதன்
விளைவு....நடப்பதை யார் அறிவார் என்று உளறிக்கொண்டிருப்பதை விட நடந்ததையாவது அறியும் குணம் வளரவேண்டும். குடித்தால் மட்டும்தான் போதையா... படித்தாலும் போதைதான் கவிதைகளை..

கைப்புள்ள

நட்பைப் பற்றி எனை எழுதத் தூண்டினீர்! நான் கவிஞனும் அல்லன் எழுத்தாளனும் அல்லன். ஆயின் இரு கைகள் இல்லாத ஒருவன் தான் இடுப்பில் அணிந்துள்ள உடை விலகி கீழே விழ இருக்கும் அக்கண நேரம், அவனுடைய மானத்தினைக் காக்க தக்க நேரத்தில் (கவனத்தில் கொள்க: தக்க நேரத்தில்) உதவ ஓடோடி வரும் அவ்வுறவே நட்பு என்பதனை குறள் வழி நானறிந்ததைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு"


நாகை சிவா

தலைப்பை பார்த்தவுடன் ஏதுவும் எழுத தோன்றவில்லை. நண்பர்களை பற்றி நினைவுகளில் மூழ்க தான் முடிகின்றது. நண்பர்களால் நான் காயப்பட்டது உண்டு. ஆனால் ஒரு போதும் நண்பர்களை நான் காயப்படுத்தியது இல்லை(எனக்கு தெரிந்த வரை) நேற்றயே பொழுது நல்ல நினைவுகளோடு நாளைய பொழுது நல்ல எதிர்பார்ப்புகளோடு இன்றைய பொழுது நல்ல நண்பர்களோடு
நட்பு: நம்ம நட்பு வட்டாரம் ரொம்ப பெரியது.

"பள்ளியில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
படித்த கல்லூரியில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
சைட் அடித்த கல்லூரியில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
தெருவில்(ஏரியாவில்) பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
அலுவலகங்களில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
உறவுகளில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
NIIT யில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
நண்பர்களால் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
வெளிநாடுகளில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்"

இவை அனைத்தும் நேரில் பார்த்து, பல நாள் பழகி கிடைத்த நட்புகள். ஆனால் இன்றோ தமிழ் என்ற ஒற்ற சொல்லின் மூலம் கிடைத்த ஒரு வட்டம் இருக்கின்றதே........உற்ற தோழர்கள் அளவுக்கு நேரடியாக நெருங்கி விட்ட ஒரு வட்டம். ஒளி பொருந்திய மிகப் பெரிய வட்டம்.

நேரில் பார்த்ததும் இல்லை, பல பேரிடம் தொலைப்பேசியிலும் பேசியது இல்லை இருந்தாலும் இந்த நண்பர்கள் என்னுடைய ஒவ்வொரு நாளையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆரம்பிக்கவும், முடிக்கவும் செய்கின்றார்கள். ஒருவரா, இருவரா எத்தனை நண்பர்கள், எத்தனை விதமான நண்பர்கள், வயது வித்தாயசமின்றி..... ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் முத்துக்கள்..... இங்கு யாரையும் தனிப்பட்ட முறையில் சொல்ல விரும்பவில்லை... காலம் அனுமதித்தால் அனைவரையும் நேரில் சந்திப்பேன். என்னுடைய நண்பரானதுக்கு உள்ளங்கை பற்றி நன்றி சொல்வேன்.

அனைவருக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்


குறிப்பு:- அணில் குட்டிக்கு மனசி சரியில்லையாம், அதனால பேச வராம் "உம்னு" இருக்கு..சமாதானம் செய்து நாளைக்கு கூட்டிட்டு வரேன், இன்னைக்கு பீட்டர் தாத்தா வரலை..நம்ம நண்பர்களே தத்துவத்தை உதிர்த்துவிட்டார்களே....