வாங்க அக்காங்களா, தம்பிகளா.. வாங்க அண்ணன்களா தங்கச்சிங்களா.. கேளுங்க என் சோக கதைய.. இந்த அம்மணி கவிதா அவங்க முதல் பதிவுல என்ன சொல்லியிருக்காங்கன்னு கொஞ்சம் பார்த்துட்டு வாங்க.. அணில் குட்டிய ஏன் பிடிக்கும்ன்னு ஒரு சோக கதை இருக்குதுன்னு சொன்னாங்க.. நானும் ஏதாவது இண்டரிஸ்டிங்கா இருக்கும்னு நெனைச்சி அவங்கள என்ன ஏதுன்னு ஒரு கேள்வி க்கூட கேக்காம இந்த வேலையில சேர்ந்தேன்.. நேத்திக்கு அம்மணிக்கிட்ட கெஞ்சி கூத்தாடி அந்த கதைய கேட்டேன்ங்க.. கேட்ட பிறகு எடுத்த முடிவுதான்..இந்த புது வேலை தேடும் படலம்.. தாங்க முடியலங்க..

என்ன கதைன்னு கேக்கறீங்களா.. அம்மணிக்கு 8 வயசு இருக்கும்போது, என்னமாதிரி ஒரு அணில் குட்டி (பிறந்த குட்டி) இவங்களும் இவங்க அண்ணனும் சேர்ந்து எங்கேர்ந்தோ பிடிச்சிட்டு வந்து இருக்காங்க.. அம்மணி ரொம்ப அடம் பிடிச்சி இந்த அணில் குட்டிய நான் தான் வளர்பேன்னு அவங்க கிட்டேயே வச்சிக்கிட்டாங்க.. சரி ஆசைப்பட்டு கூட்டிட்டு வந்தாங்களே.. ஒழுங்கா பாத்துக்கிட்டாங்களான்னு பார்த்தா..அதான் இல்லை.. அந்த அணில் குட்டிய இம்ச பண்ணி இருக்காங்க..எப்படின்னு கேக்கறீங்களா.. சொல்லும் போதே எனக்கு அழுகை அழுகையா வருதுங்க.. ம்ம்ஹ்ம்ம்ம்ச்ச்ச்ச்ச்ச் (ஒன்னும் இல்ல மூக்கை சிந்திக்கிட்டேன்.. anybody..please give a kerchief ...!) அதுக்கு அனிதா ன்னு பேர் வச்சி, ஈர துணியால அது மூஞ்சிய தொடச்சி, பவுடர் போட்டு.. பொட்டு வச்சி.. அய்யோ..என்னா அக்கரமம் பாருங்க... நெசமாவே அந்த அணில் குட்டி பாவம்டா சாமீ..... அடுத்தது.. ஒரு பெரிய கப் நிறையா பால் கொண்டாந்து.. இங்க் பில்லரை வச்சி அது வாயா தொரந்து சகட்டு மேனிக்கு பால ஊத்தியிருக்காங்க... சாப்பாடு ஊட்டறாங்களாமா.. என்னடா அக்கரமம் இது...! அது மூச்சு முட்ட குடிச்ச பிறகாவது விட்டாங்களா.. அதுக்கு தனியா ஒரு குட்டி பெட் எல்லாம் தச்சி படுத்து தூங்க வச்சி இருக்காங்க.. பாவம் அது குட்டியினால இவங்க பண்ண கொடுமையெல்லாம் தாங்கி கிட்டு ஓட தெரியமா பொறுமையா இருந்து இருக்கு..

அதோட விட்டாங்களா.. தனியா டப்பாகுள்ள 2 நாள் வச்சி பாத்திருக்காங்க.. ஓவரா பாசம் பொங்கி 3 வது நாள், அம்மணி மதியம் தூங்க போகும் போது அணில கொஞ்சரேன் பேர் விழின்னு அதை பெட்’டோட இவங்க பக்கத்துல, பெட் ல படுக்க வச்சிட்டு, அத கொஞ்சரேன் ன்னு இம்சை பண்ணிட்டு தூங்கி போய்ட்டாங்க.. அம்மணி தூங்கறத சொல்லறதுன்னா தனி பதிவுதான் போடனும்.. ரூமையே ஒரு ரவுண்ட் அடிப்பாங்க.. அப்படி ஒரு அடக்கம்.. பெட்ல தூங்கனவங்க.. தூக்கதுல ரவுண்டு அடிக்கறேன்னு அந்த குட்டி பாப்பா அணில் குட்டி மேலயே..போய் உருண்டு படுத்தாட்டாங்க.. ஆஆஆஅங்க்க்.... ஆஆஅங்க்க்க்…. ஆஅயேஆஆ..ஒன்னும் இல்லலங்க திருப்பியும் அழறேன்.....இப்படி ஒரு கொடுமைய நீங்க எங்கையாவது கேட்டு இருக்கீங்களா?..

தூங்கி ஏன்ச்சி.. அனிது அனிது ன்னு தேடறாங்க.. எங்க அனிது.. பரலோகம் அனுப்பிட்டு கொஞ்சி கொஞ்சி கூப்பிட்டா வருமா அனிது...... அது கால கெளப்பிக்கிட்டு பல்ல துருத்திக்கிட்டு செத்து போய் கிடந்தது..... அம்மணிக்கு பாத்தவுடனே ஒரே அதிர்ச்சி.. அவங்க சவுண்டு தான் எல்லாருக்கும் தெரிஞ்சி இருக்குமே... என் அணில் அணில் வேணும்னு ன்னு ஓவரா சவுண்டு போட்டு அழ ஆரம்பிச்சிட்டாங்க.. யார் வந்தும் நிக்கல..3 - 4 நாள் அழுதுட்டு விட்டு இருக்கலாம் இல்ல.. இப்ப பாருங்க.. விடாம..என்னைய புடிச்சிட்டு வந்து இப்போ கொடும பண்றாங்க..

நான் வரலப்பா இந்த விளையாட்டுக்கு.... வாழ்க்கையில சம்பாதிக்கனும் தான் அதுக்காக..இப்படி என் உயிர இந்த அம்மணி க்கிட்ட பனையம் வச்சி எல்லாம் வேல செய்ய முடியாதுப்பா.. அப்பவாவது குட்டி பாப்பா வா இருந்தாங்க.. இப்போ இருக்கறதோ பீப்பா.....ஒன்னுகெடக்க ஒன்னு ஆகி....என்னால முடியாதுப்பா.. எப்ப இந்த கதைய கேட்டேனோ.. அப்பவே முடிவு பண்ணிட்டேன்..வேற வேல தேடி என்னோட life ஐ safe ஆ செட்டில் ஆக்கிகனும்னு....

யாராச்சும் பெரிய மனசு பண்ணி என்னோட கீழ்க்கண்ட புரொபைல பார்த்து வேல குடுங்கோ.. .

பெயர் :- அணில் குட்டி அனிதா

அனுபவம்: 4 மாதம் (கவிதா’வுடன் பிளாக் எழுதிய அனுபவம்)

பேச்சு திறன் : ஓவர் ஆ இருக்கு
(அருளையும், சந்தோஷயையும் கேளுங்க சொல்லுவாங்க)

எழுதும் திறன் :- அதுவும் ஓவர் ஆ இருக்கு
(ஸ்பெஷல் கவிதை எழுதறது..)

கண்டிஷன் :-
1. நல்லா பேசும் சுதந்திரம் வேணும், சும்மா இவங்க கிட்ட பேசாத, அவங்க கிட்ட பேசதா ன்னு சொல்லகூடாது. இத பேசாத அத பேசாதன்னு சொல்லகூடாது..
2. அடிக்க கூடாது
3. ஓவரா கொஞ்சவும் கூடாது
4. கொய்யா பழம் மட்டும் குடுத்து எஸ்கேப் ஆகக்கூடாது.. ஒரு முந்திரி பழம், பாதாம் பருப்பு, ஆப்பில், பேரீச்சம் பழம், பால்னு குடுத்து என் உடம்ப தேத்தனும்..(அம்மணி நம்மல அந்த மோசாமான ரேஞ்ல வச்சிருக்காங்க)

இந்த பதிப்புல No kavitha ..only peter தாத்தா..

பீட்டர் தாத்தா:- You may be disappointed if you FAIL, you are doomed, if your don’t TRY.