இறந்தபின் தான் மரணம்..
இருக்கும் போதே இறந்தால்...

இதயத்தை குத்தி கிழிக்கும் பேச்சில்
செவிடாய் போன காதுகளும்

எடுத்தெறியும் பார்வையில்
குருடாய் போன கண்களும்

எச்சில் துப்பும் வார்த்தையில்
ஊமையாய் போன வாயும்,

வேற்கூரின் வாசங்களும் மறந்து
தொண்டைக்குழிக்குள் இறங்கும் சோறும்

சொரணையற்ற உடம்பை மூட
பிச்சை(என) போட்ட துணியும்

மனமென்னும் பட்டறையில்
பூட்டிவைத்த துயரங்களுடன்

விழிகளை மட்டுமே அசைத்து
மெளனத்தை மட்டுமே சுவாசித்து

மனிதர்களுடன் மனிதர்களாய்
உலவிதான் வருகிறார்கள்..

இந்த...............

மரத்துப்போன இதயங்கொண்ட ....
மரணத்தைவென்ற மனிதரகளும்...


அணில் குட்டி அனிதா:- அம்மணி நல்ல வேள..நான் என்னவோ நீங்க “மரணம்” பற்றி எழுத போறேன்னு சொன்னவுடனே.. வீட்டுல யாரையாவது போட்டு தள்ளிட்டு (அதான் இப்ப சர்வ சாதாரணமா நடுக்குதே, பொம்பளைங்க கிட்ட ஆம்பளைங்க எல்லாம் உஷாரா இருங்கப்பா....அம்மணிங்க எல்லாம் இப்ப சூப்பரா போட்டு தள்ள ஆரம்பிச்சிட்டாங்க..! அவ்ளோதான் நான் சொல்லுவேன்...............அப்புறம் ரிஸ்க் எடுக்கறது உங்க இஷ்டம்) அதை கருவா வச்சி, எழுதபோறீங்கன்னு.. ம்ம்.. என்னவோ.. ..உங்க வீட்டுல இருக்கறவங்களுக்கு ஆயுள் கெட்டிதான்..