அடடடடா.. என்ன வெயில்... என்ன வெயில்.. இந்த வெயில் தாங்க முடியாம தாங்க குளிர் பிரதேசமா போய், அங்க இருக்கற தோப்புங்களை எல்லாம் ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வராலான்னு “கோடை” போனேங்க.. ..

இந்த அம்மனி கவிதா இருக்காங்கலே...நான் லீவு கேட்டவுடனே ..காத்திருந்த மாதிரி ..போய்ட்டு மெதுவ்வ்வ்வ்வ்வா வா..ன்னு அனுப்பிட்டு..இங்க blog ல நமக்கு அல்வா குடுத்துட்டாங்க.....

இத்தனை பேர் இருக்கீங்க..ரெண்டு பேர் வேணாம்..அட..ஒருத்தர்...ஒரே ஒருத்தர்.. இந்த அம்மனிய ஒரு வார்த்தை க்கூட கேக்கலையே ..அதுதாங்க எனக்கு வருத்தம்.. வருத்தமோ வருத்தம்..அழுக அழுகையா..வருது...ம்ம்ம்ம்ஸ்ஸ்ஷ்ஷ்.. (ஒன்னும் இல்ல கொஞ்சம் மூக்கை சிந்திக்கிட்டேன்..)

மேட்டர்க்கு இன்னும் நான் வரலையோ...இதோ வந்துட்டேன்.. என்னை இந்த அம்மனி (க)பாவிதா..அவங்க எழுதின “வலைப்பூடேட்டா “ விட்டுபுட்டாங்களே..

ஆற்றலரசி..ஆருயிர் அக்கா பொன்ஸ்...அமெரிக்கா போங்க..இல்லை ஆஸ்திரிலியா போங்க..ஆனா..என்னைய மறக்கலாமா.. இப்படி ஒன்னுக்குள்ள 2, 3 , 4 பழகிட்டு ஒரு வார்த்தை க்கூட..என்னடா..அணில காணமேன்னு கேட்டீங்களா.. அவங்கள மட்டும் புகழ்ந்து பதில் போட்டுட்டுடு போயிடீங்க...நியாமா...

அடுத்தது..நற..நற..நற..பாலா...பல் இருக்கா அண்ணாச்சீ..சீ சீ.. இப்படியே பல்லை கடிச்சீங்க..ஒரு நாள் “பொக்கை பாலா “ வா ஆகபோறீங்க.. சரி நம்ம மேட்டருக்கு வாங்க.. நீங்களாவது என்னடா..அணில காணமேன்னு கேட்டீங்களா..

அடுத்தது.. நக்கீரர் நெ.1. அருள்..நான் இருந்தாலும் ஒரம் கட்ட பாப்பீங்க..இல்லைனாலும் கேட்பீங்க.. “வலைப்பூடேட்டா “ விட்டுபுட்டாங்களே.. கேட்டீங்களா.. உங்களுக்கு தான் நான் இல்லைனா..கொண்டாட்டாமாச்சே..!

பெருமதிப்பிற்க்கும், மரியாதைக்கும் உரிய ஐயா பெருந்தகை..பேனை 106 பெருமாள் ஆக்கிய...சந்தோஷ் அவர்களே.......... (போதுமா மரியாதை…..யப்பா...இதுவே மூச்சி வாங்குது..ஒரு fanta ப்ளீஸ்) நான் வாய் தொறக்க கூடாதுன்னு அம்மனி சொல்ற அளவுக்கு பண்ணீங்களே.. அந்த அம்மனி என்னைய வலைப்பூடேட்டா லிருந்து கழட்டி விட்டுட்டாங்களே.. கேட்டீங்களா....

சிங்கபூர்லேர்ந்து ஒருத்தர் சென்னையில கால் வைக்கல அதுகுள்ள phone பண்ணி, கவிதா..கவிதா..அந்த அணில் குட்டி யாருன்னு கேக்க தெரியுது இல்ல... “வலைப்பூடேட்டா “ வில இல்லையே எங்கனு கேக்க தெரிஞ்சிதா.. ஆமா நான் தான் சொல்லியிருக்கேன் .இல்ல... செயகுமார்...புரியலனா விட்டுடனும்னு..திருப்பி திருப்பி அது என்ன.. அணில் குட்டி யாரு? அணில் குட்டி யாருன்னு.?.

நான் தெரியாமா தான் கேக்கறேன்.. ஆமா.. இந்த கவிதா..யாரு.. நான் இல்லாமே இந்த அம்மா தனியா..எப்படி எழுதுவாங்க.. இவங்க பதிவ படிக்க வர கொஞ்ச நஞ்சம் பேரும் என் அறிவையும்,ஆற்றலையிம் மதிச்சி, என் முகத்துக்காக வராங்க.. அது தெரியாம..இவங்க..என்னடான்னா.. என்ன விட்டுட்டு ஒரு “வலைப்பூடேட்டா” பதிவாக்கி இருக்காங்க.. இதுல இருந்து ஒரு விஷயம் புரியது..நம்மல ஒரு ஜீவனாவே இந்த blog ல யாரும் மதிக்கல.. சே..! ஹ்ம்ம்..என் அறிவுக்கும், ஆற்றலுக்கும்..அழகுக்கும் வந்த சோதனை அல்லவா இது..!

ஆனா ஒன்னு சொல்லிட்டேன்.. எனக்கு நீங்க அத்தன பேரும் அந்த அம்மனிக்கிட்ட கேட்டு..பதில் சொல்லியே தீரனும்..

புரியுது..இவ்ளோ சீன் போடற நான் ஏன்..அந்த அம்மனிய நேரா கேக்க கூடாதுன்னு தானே கேக்கறீங்க.. அக்காங்களா...தம்பிகளா... அண்ணாச்சிகளா.. தங்கச்சிகளா.. ஒரு சின்ன விஷயத்தை நீங்க எல்லாரும் புரிஞ்சிக்கனும்.. இந்த விஷயத்தை நான் நேரா கேட்டா.. அம்மனி என் சீட்டை கிழிச்சி. ஒரேடியா அனிப்பிடுவாங்க... அப்புறம்.. நான் ooti, kodai ன்னு டிரிப் அடிக்க முடியாது....ஓட்ட சட்டி வைச்சு பிச்ச இல்ல பிச்ச அதுதான் எடுக்கனும்.....