வலைப்பதிவர் பெயர்: கவிதா கெஜானனன் & அணில் குட்டி அனிதா

வலைப்பூ பெயர் : பார்வைகள்

சுட்டி(url) : http://www.kavithavinpaarvaiyil.blogspot.com

ஊர்: சென்னை

நாடு: இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: பெயர் வெளியிட, அறிமுகம் செய்தவரின் அனுமதி கிடைக்கவில்லை. & அணில் குட்டியை அனிதாவை அறிமுகம் செய்தவர் -கவிதா

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 04-ஏப்ரல்-2006

இது எத்தனையாவது பதிவு: 16ஆவது பதிவு

இப்பதிவின் சுட்டி(url): http://kavithavinpaarvaiyil.blogspot.com/2006/05/blog-post_29.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: எழுதம் ஆர்வத்தில்..& அணில் குட்டிக்கு எல்லார் கிட்டேயும் பேசி, கலாட்டா பண்ணனும்

சந்தித்த அனுபவங்கள்: நிறைய நல்ல எழுத்தாளர்களும், சமூகம் சார்ந்த நல்லுணர்வு மிக்க நல்ல மனிதர்களையும் பார்க்கிறேன். & அணில் குட்டிக்கு நிறைய சண்டை போட்ட அனுபவம் கிடைச்சிருக்கு

பெற்ற நண்பர்கள்: நிறைய..................& அணில் குட்டிக்கும் நிறைய..

கற்றவை: எதை எழுதக்கூடாது என்பதை..& அணில் குட்டி அதிகமாக வாய் பேசக்கூடாது என்பதை..(சந்தோஷ் சந்தோஷமாப்பா..)

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: சுதந்திரம் நிறைய இருக்கிறது, இன்னுமும் முழுதாக பயன்படுத்திகொள்ளவில்லை. & அணில் குட்டிக்கு அதிகமாக..பேசும் சுதந்திரம் போய்விட்டது.

இனி செய்ய நினைப்பவை: நிறைய எழுதவேண்டும், எழுத்தின் மூலம் ஒரு சிலரையாவது மாற்ற முயற்சி செய்ய வேண்டும்...& அணில் குட்டி கொஞ்சமா பேசியாவது அடுத்தவங்க உயிரை வாங்கனும்..

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: என்னை பற்றி....என் வலைத்தோழர்களை கேட்டால் ஏதாவது திட்டி தீர்ப்பார்கள் என நினைக்கிறேன்....& அணில் குட்டியை பற்றியும் தான்.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: “மனிதர்களை மனிதர்களாக மதிக்காதவர்களை என் எழுத்தின் மூலமாவது கிழிக்க வேண்டும்..!”
(நன்றி தரண்) & அணில் குட்டி :- இப்பவெல்லாம் நல்ல taste ஆன கொய்யாபழம் கிடைக்கமாட்டேங்குது....