அணில் குட்டி அனிதா:- எல்லாரும் எப்படி இருக்கீங்க..நம்ம கவிதாக்கு வேல அதிகமா இருக்காம்..எழுத முடியலைன்னு scene போட்டுட்டு இருக்காங்க, நீங்க எல்லாம் என்னை miss பண்ணுவீங்களேன்னு..அவங்களுக்கு leave குடுத்துட்டு நான் present.! பாவிதா..sorry sorry tongue slip ஆயிடுத்து.. கவிதா book லிருந்து ‘இந்தியாவின் ஏழ்மை’ ஐ திருடி காப்பி பண்ணியிருக்கேன்..படிச்சிட்டு லெட்டர் போடுங்க.. பாருங்க இது அணில் குட்டி special so நீங்க எனக்கு தான் லெட்டர் போடனும்..சரியா..ஆஆஆஆஆ..(காது கேக்காதவங்களுக்காக..இந்த extra.ஆஆஆ).


இந்தியாவின் ஏழ்மை

இந்தியாவின் ‘இனிஷியல்’
இரக்கமற்றவர்களின் ‘எச்சில் சோறு’

இயலாதவர்களின் ‘சொர்கம்’
இருப்பவர்களின் “மிதியடி’

தாதாக்களை உருவாக்கும் ‘தாய்’
தகாத வழி நடத்தும் ‘ஆசான்’

விலா எலும்புகளை எடுத்துகாட்டும் “ஒவியம்’
விடை தெரியா ‘கேள்வி’

மக்களை விலைபேசும் ‘மார்கெட்’
மனித ஓநாய்கள் பசியாரும் ‘ஹோட்டல்’

கனவுகள் நிறைந்த ‘கானல் நீர்..’
கடவுளின் கால் படாத ‘ரோடுகள்’

===================

நம்ம அண்ணாச்சிங்க ..பாலா, கார்த்திக், சீனு அப்புறம் அக்கா பொன்ஸ் (என்ன பேருமா இது?!! ‘பொன்ஸ்’ ‘பொங்கல்ஸ்’ ன்னு!) எல்லாரும் ரொம்ப request செய்துகிட்டதால நான் எதுவும் எழுத கூடாதுன்னு பார்த்தேன். ஆனா பாருங்க அதிர்ஷ்ட்ட காத்து நம்ம பக்கம் வீசுது.. என்னோட கருத்துள்ள கவிதையை படிச்ச, நம்ம தமிழ் சினிமா Director’s நான் பாட்டு எழுதி தந்தாத்தான் படம் எடுப்பேன்னு ஒத்த கால்ல நிக்கறாங்க. சரி, அவங்க கால் வலிக்க வேண்டாமேன்னு எழுத advance வாங்கிட்டேன். நானே பாடனும்னு வேற இன்னொரு கால்ல நிக்கறாங்க.. கொஞ்சம் “கீச் கீச்” ன்னு இருக்கும்னு சொன்னாலும் கேட்கல.. தொந்தரவு தாங்காம..free யா பாடிக்கொடுத்திருக்கேன். இப்ப சூப்பர் hit ஆன ‘ வாளமீன்’ பாட்டு மாதிரி வேனும்னு சொன்னாங்க.. sample எடுத்து விடறேன் பார்க்கறீங்களா?.

கண்ணுக்குட்டிக்கும் கழுதக்குட்டிக்கும் கல்யாணம்..அந்த
காட்டுல இருக்கற Animals எல்லாம் ஊர்கோலம்..
நடு காட்டுலதான் நடக்குதுங்க கல்யாணம் -அத
பார்க்க வந்த பன்னி குட்டியெல்லாம் ஒரே நாத்தம்

கல்யாணந்தான் கல்யாணம்..
சோம்பேரி கழுதைக்குத்தான் கல்யாணம்
கல்யாணந்தான் கல்யாணம்..
கசமாலம் கண்ணுக்குட்டிக்குத்தான் கல்யாணம்

கண்ணுக்குட்டிக்கு சொந்தம்பந்தம் அந்த காட்டெருமை தானுங்கோ !
கழுதைக்கு சொந்தபந்தம் அந்த குரங்குகூட்டம் தானுங்கோ !

ஓ...ஓ................ஓ.. ..


அடடடா...ஆ...cool cool.. .. என்னங்க.? எல்லாரும் ஆட ஆரம்பிச்சிட்டீங்க... உணர்ச்சி வசப்படாம உட்காருங்க..(அட..போதும்..!கைய மடக்குங்க boss!.) சும்மா இது sample தான்... முழுசும் இன்னைக்கே பாடிட்டா எப்படி.. part part ஆ பாடலாம்..னு.............. என்ன..?!! என்னை part part ஆ கழுட்டுவீங்களா?.... என்னங்க நானும் நீங்களும் ஒன்னுக்குள்ள ஒன்னு... எதுக்கு tension ஆகறீங்க.. என்ன..?! நான் பாட்டு எழுத & பாடக்கூடாது..அவ்வளவு தானே.. Done..ங்க..ஆளவிடுங்க..! வரட்டா?!