அணில் குட்டி அனிதா:- இன்னைக்கு..நண்பர் ஒருத்தர் அணில் குட்டி அனிதா..யாரு?..ன்னு, ஒரு super கேள்வி கேட்டு லெட்டர் போட்டு இருக்கிறார். அது எப்படிங்கண்ணா.... இப்படியெல்லாம் கேள்வி கேட்டு புல்லரிக்க வைக்கறீங்க?!! தாங்களிங்கண்ணோய்... அம்மணியும் நானும் அந்நியன் range க்கு blogger members யை தாக்கிட்டு இருக்கோம்.. நீங்க என்னன்னா..இப்படியெல்லாம் கேள்வி கேட்டு எங்கள தாக்கறீங்க.....! ம்ம்..என்னத்த சொல்ல...புரியலனா விட்டுறுங்கண்ணோய்....

இந்த பாலா எழுதன comments படிச்சதிலிருந்து அம்மணி..paper paper ஆ எழுதி கிழிக்கறாங்க..ஒன்னும் தேரலங்கறத..நான் சொன்னதா வெளியில சொல்லிடாதீங்க.. .பாலா நீங்க பாராட்டறமாதிரி இப்போ நான் எழுதுறேன் பாருங்க..

“ முறுக்கு மாவுல கலக்கறது ஓமம் !!
அணில் முதுகல போட்டிருக்கறது நாமம்..!!

ஆஹா..கவித கவித...உய்ய்ய்ய்ய்ய்ய்.. உய்ய்ய்ய்ய்..உய் ய்... (அட..நீங்களும் சத்தமா விசில் அடிங்க..கவிதா monitor விசில் சத்ததுல உடையட்டும்)

“குதிரைக்கு வைக்கறது கொள்ளு !!
அணிலுக்கு அழகே இந்த பல்லு !! wowwwww.!!!

தெரு நாய் கண்டத பொருக்கும் !!
அணில் கடிச்ச கொய்யா இனிக்கும்..!!

...உய்ய்ய்ய்ய்ய்ய்.. உய்ய்ய்ய்ய்..உய் ய்... Hold hold...

கவிதா கல்லு எடுக்கற மாதிரி இருக்கு..
பாலா உங்களுக்கு என் கவிதையை mail ல அனுப்பறேன். ஆனா ஒரு condition..அம்மணிய புகழ்ந்த மாதிரி என்னை புகழக்கூடாது. நான் அம்மணி மாதிரி சும்மா இருக்க மாட்டேன் உணர்ச்சி வசப்பட்டு பொங்கிடுவேன் பொங்கி.. ஆமாம்..அப்புறம் தொடர்ந்து கவிதையா எழுத ஆரம்பிச்சிடுவேன்..so comment எழுதறத்துக்கு முன்னாடி யோசிச்சி..எழுதுங்க..