இப்படியே போனால், நாம் பெற்ற சுதந்ததிரத்தை கூட இழந்து விட்டு நிற்போமோ? என்ற கேள்வியுடன்....

சிவகங்கை மாவட்டத்தில் மக்கள் படும் அவதியை பற்றி அம்மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், அரட்டை அரங்கத்தில் உணர்ச்சி பொங்க ஆவேசமாகவும், ஆற்றாமையுடனும் கொட்டி தீர்த்ததின் தொகுப்பு இதொ..

வறட்சி அதிகமாக இருக்கும் காலத்தில் சிவகங்கை மாவட்ட மக்களுக்கு என்று கிடைக்கும் மாற்று வேலை கன்மாய்’யை (நீர் தேக்கம்) வெட்டுவதுதான். ஆனால் அரசாங்கம் இந்த பணியை தனியார் பண முதலைகளிடம் பெரும் பணத்திற்கு செய்ய சொல்லிவிட்டது. அவர்கள் பெரிய பெரிய யந்திரத்தை கொண்டு விரைவில் வேலையை முடிப்பது என்னவோ நடக்கிறது. ஆனால், மண் வெட்டும் வேலை க்கூட கிடைக்காமல் சிவகங்கை மாவட்ட மக்கள் பிழைப்பது எப்படி, வயிரை நிரப்புவது எப்படி.?.

சாலைகள் அத்தனையும் மண் சாலைகள், குண்டும் குழியுமாக.... சில கிராமங்கள், அருகில் உள்ள நகரங்களுடன் நேரடியாக இனைக்கப்படவில்லை. ஒவ்வொரு முறையும் பல கிமி தூரம் சுற்றி செல்ல வேண்டி இருக்கிறது. எத்தனை காலம் ஆனாலும் அரசாங்கம் இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் மெத்தனமாக இருக்க காரணம் என்ன?.

காந்தியடிகளால் திறக்கப்பட்ட அரசாங்க பள்ளி ஒன்று, பராமரிப்பு இன்றி, மேல் கூரை முதல், கதவு, சன்னல், செங்கல் வரை திருடப்பட்டு இப்போது வெறும் குட்டி சுவராக காட்சி அளிக்கிறது. (video clippings காட்டப்பட்டது).

சிவகங்கை மாவட்ட மக்கள், ஆற்றில் தேங்கி இருக்கும் தண்ணீரை கொஞ்சம் போல் எடுத்து சென்று, அவரவரின் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். அரசாங்கமோ தண்ணீர் எடுக்கும் உரிமையை ஒரு தனியார் தொழில் நிறுவனத்தின் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தி கொள்ள அனுமதித்துள்ளது. அவர்கள், ஆழ்துளையிட்டு, நீர் அத்தனையும் உறிஞ்சிவிடுகிறார்கள். அத்தனையும் இழந்துவிட்டு நிற்கவேண்டியுள்ளது.

கடற்கரை, சினிமா, தொலைக்காட்சி, கணினி, இணையதளம், ஈமெயில், அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை, ஐரோப்பாவுடம் பேச்சி வார்த்தை, சிங்கப்பூர் சுற்று பயணம், ஐ.ஐ.டி இட ஒதுக்கீடு, வைகோ கட்சி தாவல், சரத்குமார் ராதிகா ‘ஜே’ வுடன் சேர்ந்தது சரியா?! என்று நாம் எதை எதையோ பேசிக் கொண்டிருக்க, இதோ இங்கே நம்மை போன்ற ஒரு தமிழன்...

அன்றாட வயிற்று பிரச்சனையின் ஆற்றாமையில்..!
எல்லாம் இருந்தும் கிடைக்காத கொடுமையில்....!
அரசாங்கத்தாலேயே ஏமாற்றப்பட்டும் இயலாமையில் !


நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறாம்..!

அணில் குட்டி அனிதா: இந்த அம்மனிக்கு வேற வேல இல்லப்பா..! எதையாவது பேசிக்கிட்டு.. என்ன சொன்னாலும் திருந்த மாட்டாங்க.. சரியான புலம்பல்ஸ் மன்னி..!

சரி, நாம மேட்டருக்கு வருவோம். நம்ம அண்ணாச்சிங்க 2, 3 பேரு “அண்ணா” ன்னு கூப்படக்கூடாது.. friends ஆவே இருப்போம்னு சொல்லி இருக்காங்க.. நான் என்னவோ ரொம்ப மரியாதையா கூப்பிடலாம்னு பார்த்தா..விடமாட்றாங்கப்பா.. நாட்ல “அண்ணா’ ன்னு அன்பா கூப்பிட்டது தப்பா போச்சு. இனிமே. நாம Friends, அதனால....வாடா மச்சி, போடா வெண்ணைய்..ன்னு சொல்ல வேண்டி இருக்கும்...யாரும் கோச்சிகிட்டு ‘கா’ விட்றகூடாது சரியா..?!!! .. ஆமா யாரு அந்த 2, 3 பேருன்னு உங்களுக்கு எல்லாம் தல வெடிக்குமே.. இத இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன்..!

நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேங்க...... "All Indians are my (sister and brothers க்கு பதிலா) friends” னு அறிவிப்பு கொடுக்கலாம்னு இருக்கேன்.."நீங்க என்ன சொல்றீங்க..சட்டு புட்டுன்னு ஒரு லெட்டர் போடுங்க...