நாத்திகம் பேசவில்லை, நம்பிக்கை உண்டு என்பதை விட, அமைதி வேண்டி கோயில்களுக்கு செல்கிறேன் என்பது உண்மை. கண்களை மூடி கடவுளை வணங்கும் பழக்கமும் இல்லை, காரணங்கள் மூன்று. 1. அற்புதமான அலங்காரம் 2. வேண்டும் என்று எதையும் கேட்பதில்லை. 3. மனசாட்சி க்கு மட்டுமே பயப்படுவது.

நம் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் ஒவ்வொன்றுக்கும் பின்னால் நிச்சயமாக ஒரு நல்ல காரணம் இருக்கிறது என்பதை எப்போதும் நம்புகிறேன்.

வெகு நாட்களாக இது என் மனதை நெருடிக் கொண்டு உள்ளது. கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம்.. யாருடைய நம்பிக்கையயும் யாரும் தவறு என்று சொல்ல முடியாது. சொல்லவும் அவசியம் இல்லை. ஒருவருடைய நம்பிக்கை , அது தவறாக இருந்தாலும் அது அவர்களுக்கு சந்தோஷத்தை தருகிறது என்றால், அதை நாம் ஏன் கெடுக்க வேண்டும்.

சாஸ்த்திரம் சம்பரதாயம் அத்தனையும் அவசியம்தான், ஆனால் குடம் குடமாக பால், தயிர் அபிஷேகம், அது மட்டுமா? நெய், இளநீர், தேன், வெண்ணைய், பஞ்சாமிர்தம் அத்தனையும் அபிஷேகம் கண் குளிர பார்த்து விட்டு ப்ரகாரம் சுற்றி வந்தால் அத்தனையும் புறவழியாக சாக்கடைக்குள்.. ... பக்தர்கள் செலுத்தும் அபிஷேகப் பொருட்கள் அத்தனையும் ஊற்றப்படுகின்றனவா?. இல்லை உள்ளிருப்பவர்களால் உறிஞ்ச படிகின்றனவா?. தேவையான அளவு அபிஷேகம் செய்துவிட்டு, ஒவ்வொரு நாளும் ஒரு பகுதியை குழந்தைகள் காப்பகங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் அனுப்பலாமே..! கோயில் நிர்வாகமும், சமூக தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இனணந்து இதனை செயற்படுத்தி பலரின் பசியை போக்கலாமே! யாராவது முயற்சி செய்வார்களா?.

அணில் குட்டி அனிதா:- அய்யய்யோ! கவிதா என்ன ...சாமி விஷயத்துல விளயாடரீங்க..சாமீ கண்ண குத்திடும்..தெய்வ குத்தமாகிடும். இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வாரது..நாம நல்லா இருந்தா போதாதா?.. என்னங்க..நான் சொல்றது சரி தானே?. ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்னு சொன்னது கவிதா மாதிரி ஆளுங்களுக்கு..நமக்கு இல்லைங்கோ! அம்மணி ஏதோ சொல்லரத சொல்லிட்டு போகட்டும். யாரு பட்டினி கிடந்தா நமக்கு என்னங்க?. இதெல்லாம் நீங்க serious aa எடுத்துக்காதீங்க. அம்மணி இப்படித்தான், நடக்காத விஷயத்தை பேசி நம்மள மாட்டி விட்டுருவாங்க. நீங்க என்ன சொல்றீங்க..?!!

எனக்கு பயந்துக்கிட்டு கருத்து சொல்லாம விட்டுராதிங்கண்ணா.. யக்கோவ் உங்களையும் தான்..! வரட்டா....?!!