நான் ஒரு நிகழ்ச்சிக்காக கவிதை எழுதி போயிருந்தேன். (பெரிய நிகழ்ச்சி, பெரிய ஆள் என்று தயவு செய்து தவறாக புரிந்து கொள்ளவேண்டாம்) அந்த கவிதை, ஒரு ஆணின் காதலை மையமாக கொண்டது. நிகழ்ச்சி தொகுப்பாளர் அதை 2 பக்கங்கள் படித்துவிட்டு என்னை நோக்கினார். சரி திரும்பி அனுப்ப போகிறார் என நான் நினைக்கும் வேளையில், அவர் என்னை பார்த்து, ஏம்மா.அது என்ன காதல்’ னு சொன்னாலே ஒரு ஆண் எழுதினாலும் சரி, ஒரு பெண் எழுதினாலும் சரி, ஆண் பெண் மீது காதல் கொள்வது போலவே எழுதுகிறீர்கள்?. நீ ஒரு பெண்தானே..ஏன் ஒரு ஆணை காதலிப்பதாக எழுத கூடாது? காதல் சொல்வதில் அப்படி என்னம்மா பேதம்?.என்று கேட்டார்.

அவர் அப்படி கேட்ட பிறகு தான் நான் ஏன் எப்படி எழுதவில்லை என்பதை யோசித்தேன். சில பல சொந்த காரணங்களுக்காக என்னால் அப்படி எழுத முடியவில்லை என்பதே, நான் அப்போது எனக்கே சொல்லி கொண்ட விளக்கம். அதற்கு பிறகு கொஞ்சம் தெளிவு பெற்று சில கிறுக்கி இருக்கிறேன். காதல் என்ற தலைப்பில்.. கிறுக்கிய சில உங்கள் பார்வைக்கு..

உன்னால் பார்க்கபடும்
நான்..!
என் அண்ணனால் பார்க்கபடும்
உன் தங்கை...

********
காதல் !
கண்களில் தொடங்கி
கவிதைகள் பாடி
கடிதங்கள் மாற்றி
கை தொடும் போது சிலிர்த்து
கல்யாணம் வரும் போது
காணாமல் போனது... !

********
தென்றலாய் என்
இதயம் திருடிச்சென்று.
புயலாய் வீசுகிறாயே..
நீ புயலானாலும்
உன் மொழிகள்
பூக்கள்...
தொடுக்க காத்திருக்கிறேன்..
உன்னையும் சேர்த்து த்தான்..

************
இன்னும் கிறுக்குவேன்....

அணில் குட்டி அணிதா:- என்ன கவிதா ... நான் தான் மரத்துக்கு மரம் தாவுவேன்..நீங்க என்ன ஏதோ ஒரு subject லிருந்து ஏதோ ஒரு subject க்கு தாவிருக்கீங்க?... என்ன...பாலா..& சந்தோஷ் comments பார்த்து பயந்து போயிட்டீங்களா?.வாழ்க்கையில இதுகெல்லாமா பயப்படறது.. நான் எதுக்கு இருக்கேன். .. பார்த்துக்கறேன்...நீங்க உங்க இஷ்டத்துக்கு எழுதுங்க...பாலா சென்னையில தானே இருக்கார்..என்ன..ன்னு ஒரு வார்த்தை கேட்டுட்டா போது... என்ன சந்தோஷ்.... நம்மகிட்டயேவா? கவிதா அடிச்ச lecture போதுமா..இன்னும் கொஞ்சம் வேணுமா?!...