“மிக அதிகமாகி வரும் திருமண முறிவுகள்”, இந்த பதிப்புக்கு காரணம். ஆண்களின் நிழலில் பெண்கள் இருப்பது தான் என்றும் பாதுகாப்பானது. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஆண், தந்தையாக, கணவனாக, மகனாக, தம்பியாக, அண்ணனாக, நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொரு உறவு முறையை பெண் விட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள். ஆனால் கணவன் என்ற உறவு மட்டும் தான் கடைசி வரை நிலைக்கிறது. ஏன் மற்ற உறவு முறைகளுடன் வராத மன வேறுபாடு கணவருடன் மட்டும் வருகிறது என்று புரியவில்லை.?. அப்படி மன வேறுபாடு வரும் போது அதை நம் அறிவைக் கொண்டு கடந்து வர வேண்டுமே தவிர பெண்ணுரிமை பேசி நம் வாழ்க்கையை நமே கெடுத்துக்கொள்ள கூடாது.

கணவர் என்ற ஒரு ஆணிடமே, ஒரு பெண்ணால் சேர்ந்து வாழ முடியாத போது எப்படி விலகி, தனியே வெளி உலகத்தில் உள்ள ஆயிரம் ஆயிரம் ஆண்களை சமாளிக்க முடியும். பெண்ணுரிமை பேசும் பல பெண்களுக்கு இந்த விஷயம் புரிவது இல்லை. பிரச்சனை என்பது ஆண், பெண் இருவருக்கும் உண்டு. எத்தனை வீடுகளில் பெண்களால் ஆண்கள் அவதிக்குள்ளாகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. என் கணவர் அடிக்கடி சொல்லும் வசனம், “பெண்னுக்கு பெண் தான் எதிரி ஆண்கள் இல்லை” என்பது. பெண்கள் பிரச்சனைக்கு மாமியார், நாத்தனார், அண்ணி, அக்கா..என்று பெண்களையே பட்டியல் போடலாம்.

பெண்கள் தேவை இல்லாமல் ஆண்களை சாடுகிறார்கள் என்பது என் கருத்து.. ஒரு உலக மகளிர் தினத்தன்று, தொலைகாட்சியில் சில பெண் பிரபலங்களை மகளிர் தினம் பற்றிய அவர்களின் கருத்து கூற பேட்டி எடுத்தார்கள். அதில் நடிகை பானுமதி சொன்ன கருத்து, “ அன்றிலிருந்து இன்று வரை பெண் தானே குழந்தை பெற்றுக் கொள்கிறாள்?. அதில் எந்த மாற்றமும் இல்லையே?. அப்புறம் என்னங்க? பெண் எப்பவும் பெண்ணா இருக்கணும்” இது என்னை வெகுவாக கவர்ந்தது. உண்மையும் அது தானே.

ஆண், பெண் என்ற வித்தியாசம் வேண்டாம். யாரும் யாருக்கும் அடிமையாக இருக்க வேண்டாம். ஒருவரை ஒருவர் புரிந்து, அன்பு சேர்த்து வாழ்வது தானே வாழ்க்கை. ஆண்களுக்கு நிகராக பெண்களும் எல்லா துறைகளிலும் கால் பதிக்கிறார்கள், பொருள் ஈட்டுகிறார்கள். அதனால் பெண்கள் தனியாக வாழ முடியும் என்று நம்புகிறார்கள் நல்ல சம்பாத்தியம் மட்டுமே சந்தோஷமான வாழ்க்கையை கொடுத்துவிடுமா? அதிகமான படிப்பும், அதற்கான வேலையும் தான் ஒரு பெண் துணிந்து தன் திருமண வாழ்க்கையை முறித்து கொள்ள காரணமா?.

பெற்றோர்களும் தன் பெண்களுக்கு பரிந்து பேசி அவர்கள் வாழ்க்கையை கொடுக்காமல், அவளின் பாதுகாப்பு என்பது கடைசி வரையில் கணவன் தான் என்று புரிய வைக்க வேண்டும். நிறைய பெண்களின் வாழ்க்கையில் பெற்றவர்களின் ஊக்கமும் இப்படி பட்ட முறிவுகளுக்கு காரணம் ஆகிறது.

நான் பிரச்னை இன்றி இருப்பதால் மிக தெளிவாக கருத்து கூறுகிறேன் என்று புரிந்து கொள்ளாதீர்கள். பிரச்சனை இல்லாத மனிதர்கள் இல்லை, அதில் நானும் ஒருத்தி.. ஆண்களும், பெண்கள் தங்களின் பாதுகாப்பில் இருக்க வேண்டியவர்கள் என்பதை உணர்ந்த்து நடந்து கொள்ளலாம்..
ஓளியின் திசைக்கேற்ப நிழலின் நீளம் அவ்வப்போது குறையும், கூடும். ஆண்களின் நிழலில் பெண்கள் இருப்பது தான் இயற்கை அமைத்து கொடுத்தது.. அதை நாம் தான் கவனித்து சரியான திசையில் திருப்பி நாம் நிற்க வசதியாக்கி கொள்ள வேண்டும்.

அணில் குட்டி அனிதா:- அய்யய்யோ.....போதும் கவிதா...... உங்க உபதேசம். நிறுத்துங்க.. அநியாயத்துக்கு நல்லவங்களா காட்டிக்காதீங்க. என்னவோ உங்க hubby கிட்ட நீங்க ரொம்ப adjust செய்து கிட்டு இருக்கற மாதிரி படம் போடறீங்க..!. படம் போட ஒரு அளவு வேணாம். இது உங்களுக்கே கொஞ்சம் over ஆ தெரியல.. வீட்டுல நீங்க பண்ற ராவுடி தாங்க முடியாம..பாவம்..அந்த மனுஷன் என்ன கஷ்ட படறார்னு அந்த எரியாவுக்கே தெரியும். ஊருக்கு தான் உபதேசமா உங்களுக்கு இல்லையா?... .. . .

என்னங்க..கைக்கட்டி கவிதா விட்ட கதையெல்லாம் serious ஆ கேட்டது போதும். கதைய பத்தி கொஞ்சம் நிறையவே திட்டி லெட்டெர் போடுங்க. அப்பதான் இந்த அம்மணி இப்படி எல்லாம் உபதேசம் பண்ணி நம்ம உயிர வாங்க மாட்டாங்க.... அப்புறம் இந்த அம்மணி கிட்டே இருந்து உங்களை எல்லாம் இப்படி காப்பாத்தரதனால உணர்ச்சி வசப்பட்டு என்னை புகழ்ந்து லெட்டர் போட்டு என் seat யை கிழிச்சிடாதீங்க.... அம்மணி இப்பவே ரொம்ப உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ன்னு இருக்காங்க.....
.