வண்ண மலரானேன்
நிற குருடனாய் நின்றாய்
சின்ன மழைத்துளியானேன்
குடையாகி எனை மறைத்தாய்
நிலவாகி குளிர்ந்தேன்
அமாவாசை அழகென்றாய்

சுடர்விடும் சூரியனானேன்
இரவுகள் மட்டுமே இன்பம் என்றாய்
தென்றலாய் தழுவ வந்தேன்
புயலாகி எனை அழித்தாய்
நிழலாய் உனை தொடர்ந்தேன்
ஒளி படாமல் பார்த்துக் கொண்டாய்

புல்லினமாய் பாதத்தை நெருடினேன்
செதுக்கி தள்ளி மண் தரையாக்கினாய்
சருகாகினேன் உன் காலடியில்
கூட்டி பெருக்கி குப்பையில் வீசினாய்
வருடங்கள் ஓடிவிட்டாலும், உரமாகி உயிர்வந்து
உன் வீட்டு தோட்டத்திலின்று

மலராத மல்லிகையாய் உன்
மனைவி அவள் கூந்தலில் சூடவே
மலர்ந்து விடத் துடிக்கிறேன் முகரவரும்
உன் மூச்சுக் காற்று தொட்டு விடுமென..!


அணில் குட்டி அனிதா:- என்னை விசாரிச்சி லெட்டர் போட்டு இருக்கீங்க..ரொம்ப thanks பாலா, நீங்க இங்க பார்க்கறது வேற.. PC க்கு பின்னாடி நடக்கறது வேற.. எல்லாத்தையும் பொறுமையா கேக்கற மாதிரி கேட்டுட்டு, அம்மணி சும்மா suuuuupppper..ஆ......டின்னு கட்டாறாங்கப்பா...வெளியில சொல்ல முடியல...அந்த அளவுக்கு ஊமக்காயம்.. . நம்ம வாய் வேற சும்மா இருக்கறது இல்லையா...எதையாவது சொல்லிட்டு வாங்கிக் கட்டிக்கிறேன்...ம்ம்..ம்..உங்களுக்கு எங்க இதெல்லாம் தெரிய போகுது.. ..

.அம்மணி கவிஞர் வாலியின் “தொட்டால் பூ மலரும்” பாடலை தலைப்பாக போட்டு என்னவோ .எழுதி இருக்காங்க.. படிச்சிட்டு எப்படி இருக்குன்னு எனக்கு லெட்டெர் போடுங்க..சரியா..அப்பதான் நான் அவங்கள கொஞ்சம் கவனிக்க முடியும்.